search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தமன்னா
    X
    தமன்னா

    முகத்தில் கரி பூசிக்கொண்ட தமன்னா.... திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

    முகத்தில் கரி பூசியவாறு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை தமன்னாவை நெட்டிசன்கள் கடுமையாக சாடி உள்ளனர்.
    நடிகை தமன்னா, தனது முகத்தில் கரியை பூசிக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். கர்ப்பிணி யானை, கறுப்பின இளைஞர் கொலைகளை கண்டிக்கும் வகையில் இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    மேலும் அந்த புகைப்படத்தோடு, “உங்களுடையை மவுனம் உங்களை காப்பாற்றாது. மனிதனாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும் உயிர்கள் முக்கியம். எந்தவிதமான படைப்பையும் முடக்குவது உலகளாவிய விதிமுறைக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும்“ என்று குறிப்பிட்டிருந்தார்.

    தமன்னாவின் இந்த பதிவுக்கு கடுமையான விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு நிறவெறிக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று பலர் தமன்னாவை சாடி வருகிறார்கள்.
    Next Story
    ×