search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ராஷ்மிகா மந்தனா
    X
    ராஷ்மிகா மந்தனா

    இந்த நாட்களை மகிழ்ச்சியாக உணர்கிறேன் - ராஷ்மிகா மந்தனா

    இந்த நாட்களை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
    பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்து உரையாடுகிறார். “ஊரடங்கு நாட்களில் என்ன செய்கிறீர்கள்? அதை எப்படி உணர்ந்தீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராஷ்மிகா கூறியதாவது:-

    “18 வயதில் இருந்தே எனக்கு வாழ்க்கை ஒரு மாரத்தான் போட்டி போல் இருந்தது. போட்டி முடிந்தது என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் போட்டி தொடங்கி விடும். இதை நான் ஒரு குறையாக சொல்லவில்லை. நான், ஒரு விடுதி மாணவி. பள்ளிப்பருவத்தில் இருந்து உயர் கல்வியை முடிக்கும் வரை, விடுதியில்தான் தங்கி படித்தேன்.

    ராஷ்மிகா மந்தனா

    ஊரடங்கு நாட்களில் நான் வீட்டிலேயே இருக்கிறேன். அக்கம்பக்கத்தினர் யாரும் தங்கள் வேலையை பற்றி பேசவில்லை. இதை நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.” 
    Next Story
    ×