என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அருண்விஜயை வைத்து பேய்ப்படம் இயக்கும் மிஷ்கின்.... தலைப்பு இதுதானாம்
Byமாலை மலர்3 Jun 2020 9:26 AM GMT (Updated: 3 Jun 2020 9:26 AM GMT)
அருண்விஜயை வைத்து பேய்ப்படம் இயக்க உள்ள மிஷ்கின், அதன் தலைப்பை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.
இதையடுத்து மிஷ்கின் இரண்டு படங்களை உறுதி செய்துள்ளார். அதன்படி அருண்விஜய் மற்றும் சிம்பு படங்களை அவர் இயக்க உள்ளார். மிஷ்கின், அருண்விஜய்யை வைத்து பேய் படம் ஒன்று இயக்க உள்ளாராம். இந்தப்படத்தில் அருண்விஜய் போலீசாக நடிக்கிறாராம். மேலும் இப்படத்திற்கு 'காவு' என தலைப்பு வைக்க உள்ளதாகவும் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சிம்பு நடிக்கும் படத்தை அடுத்தாண்டு எடுக்க திட்டமிட்டுள்ளதாக மிஷ்கின் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X