search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் விஷ்ணு விஷால்
    X
    நடிகர் விஷ்ணு விஷால்

    ஊரடங்கிலும் முழு சம்பளம் - விஷ்ணு விஷாலுக்கு குவியும் பாராட்டு

    தன்னுடைய படங்களில் பணியாற்றி வரும் டெக்னீசியன்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் முழு சம்பளம் கொடுத்துள்ளார்.
    நடிகர் விஷ்ணு விஷால் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களையும் அவரே தயாரிக்கிறார். மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் எப்.ஐ.ஆர்., முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டைரக்டர் செல்லா இயக்கும் படம் என 3 படங்களை தயாரித்து நடிக்கிறார்.

    ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் உதவி இயக்குனர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இதையறிந்த விஷ்ணு விஷால், தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் தொடர்ந்து முழு சம்பளம் கொடுத்து வருகிறார்.

    இந்த தகவலை இயக்குனர் அருண் வைத்தியநாதன் தனது டிவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பிட்ட 3 படங்களில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்கள், புரொடக்‌‌ஷன் துறையை சேர்ந்தவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு முழு சம்பளத்தையும் விஷ்ணு விஷால் கொடுத்திருக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    Next Story
    ×