என் மலர்
சினிமா

வைரமுத்து
மதுக்கடைகளை திறப்பது சாவின் ஒத்திகை - வைரமுத்து
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து கவிஞர் வைரமுத்து மதுக்கவிதை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார். “மது என்பது அரசுக்கு வரவு; அருந்துவோருக்கு செலவு. மனைவிக்கு சக்களத்தி; மானத்தின் சத்ரு. சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை. ஆனால் என்ன பண்ணும் என் தமிழ் மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?” என்று கூறியுள்ளார்.
மது என்பது -
— வைரமுத்து (@Vairamuthu) May 5, 2020
அரசுக்கு வரவு;
அருந்துவோர் செலவு.
மனைவிக்குச் சக்களத்தி;
மானத்தின் சத்ரு.
சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.
ஆனால்,
என்ன பண்ணும் என் தமிழ்
மதுக்கடைகளின்
நீண்ட வரிசையால்
நிராகரிக்கப்படும்போது?#TASMAC#Tamil#TamilNadu#Corona
Next Story






