search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரியாமணி
    X
    பிரியாமணி

    நக்சலைட் வேடத்தில் பிரியாமணி

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவரும் பிரியாமணி, அடுத்ததாக சரித்திர படம் ஒன்றில் நக்சலைட்டாக நடிக்கிறார்.
    2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    நடிகை பிரியாமணி, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவில் நடிக்கிறார். இதுதவிர விராட பருவம் 1992 எனும் சரித்திர படத்தில் பிரியாமணி நக்சலைட்டாக  நடிக்கிறார். 

    பிரியாமணி

    வேணு உடுக்குலா இயக்கம் இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
    Next Story
    ×