என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நிறைய பேர் இதோட ஆபத்து புரியாம சுத்துறாங்க - சிவகார்த்திகேயன் வேதனை
Byமாலை மலர்24 April 2020 2:09 AM GMT (Updated: 24 April 2020 2:09 AM GMT)
கொரோனாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும் அவர்கள் கேட்பதும் ஒன்றுதான் நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். அவசரமானால் மட்டும் வெளியே வாருங்கள், இன்னும் கொரோனாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பத்து இருபது பேருக்காவது நான் பேசுவது போய் சேர வேண்டும்.
#WeLoveDoctorspic.twitter.com/m9Fq3xu6NI
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 23, 2020
வீட்டுக்குள்ளேயே இருப்போம். வீட்டில் இருக்கும்போது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே பலர் சொல்லி விட்டனர். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே நிச்சயம் இந்த கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். உலகின் தலைசிறந்த சொல், செயல். அதனை செய்து காட்டுவோம்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X