என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கே.ஜி.எப். 2 டீசர் வெளியாகுமா? - தயாரிப்பாளர் விளக்கம்
Byமாலை மலர்19 April 2020 10:11 AM GMT (Updated: 19 April 2020 10:11 AM GMT)
யஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் கே.ஜி.எப். 2-ம் பாகத்தின் டீசர் வெளியாகுமா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
யஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. படம் மொத்தம் ரூ.250 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. இப்போது இதன் 2-ம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில் , கேஜிஎப் சாப்வர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார்.
முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்ரோஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், 2-ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
#KGFChapter2 teaser wont be anytime soon. Closer to the release we will have a trailer and a trailer with a bang. So stay home and stay safe now. Lets move ahead.
— Karthik Gowda (@Karthik1423) April 17, 2020
படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்துள்ளது. சுமார் 100 நாட்கள் நடந்த படப்பிடிப்பு, முடிந்துவிட்டது என்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக மொத்த திட்டங்களும் மாற்றப்பட உள்ளன.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வந்தன. அதிக எதிர்பார்ப்பில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வந்தனர். இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, இந்தப் படத்தின் டீசர் வெளியாகாது. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் டிரைலர் பிரமாண்டமாக வெளியாகும். அதனால் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X