என் மலர்
சினிமா

ரகுல் பிரீத் சிங்
வித்தியாசமான முயற்சியில் களமிறங்கிய ரகுல் பிரீத் சிங்
தமிழ் தெலுங்கில் பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முறையில் கொரோனா நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.
தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story






