search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஹிருத்திக் ரோஷன்
    X
    ஹிருத்திக் ரோஷன்

    1 லட்சம் பேருக்கு உணவு - ஹிருத்திக் ரோஷன் உதவிக்கரம்

    பிரபல தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஏற்பாடு செய்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவும் முயற்சியில் அரசுகள் ஈடுபட்டு உள்ளன. தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் உணவு, மளிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள். நடிகர்-நடிகைகளும் தங்கள் வீடுகளை சுற்றி வசிக்கும் ஏழைகளுக்கு, தேடி சென்று உணவு வழங்குகிறார்கள்.

    இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆதரவற்ற 1.2 லட்சம் பேருக்கு அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்க முன்வந்துள்ளார். இதற்காக அந்த தொண்டு நிறுவனம் ஹிருத்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

    ஹிருத்திக் ரோஷன்

    இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள ஹிருத்திக் ரோஷன், “நாட்டில் யாரும் பசியுடன் தூங்குகிறார்களா? என்பதை அறியும் சக்தி உங்களுக்கு கிடைக்க வேண்டும். களத்தில் இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம். யாருடைய பங்களிப்பும் சிறியதோ பெரியதோ அல்ல” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×