search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரகுல் பிரீத் சிங்
    X
    ரகுல் பிரீத் சிங்

    தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள். 

    நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள். 

    நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறாராம். ஊரடங்கு தள்ளிப் போனாலும் அதுவரை வழங்குவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×