என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இறுதி கட்டத்தில் சிக்கித் தவிக்கும் நயன்தாரா திரைப்படம்
Byமாலை மலர்3 April 2020 11:21 AM GMT (Updated: 3 April 2020 11:21 AM GMT)
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் திரைப்படம் இறுதி கட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘நெற்றிக்கண்.’ இந்தப் படத்தின் தலைப்பை நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு பெயராக சூட்டியிருக்கிறார்கள். இதில், நயன்தாரா போலீஸ் அதிகாரியாகவும், கண் பார்வையற்றவராகவும் நடிக்கிறார்.
குற்றப் பின்னணியிலான திகில் படம் இது. பார்வையற்றவரான அவர் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதே ‘நெற்றிக்கண்’ படத்தின் கதை. இதில், நயன்தாராவுடன் வில்லனாக அஜ்மல் நடிக்கிறார். இவர்களுடன் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது.
இந்தப் படத்தை மிலிந்த் ராவ் டைரக்டு செய்கிறார். இவர், ‘அவள்’ என்ற திகில் படத்தை இயக்கியவர். நயன்தாராவின் காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பிரச்சினை தீர்ந்ததும் சென்னையிலேயே படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X