search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சல்மான் கான்
    X
    சல்மான் கான்

    சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி

    கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான் கான் உதவி செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி அமைப்புக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, உதயநிதி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நிதி வழங்கி உள்ளனர். 
     
    தெலுங்கில் சிரஞ்சீவி இதற்காக ஒரு அமைப்பையே தொடங்கி நிதி திரட்டி வருகிறார். இதுவரை ரூ.3.8 கோடி சேர்த்துள்ளார். இந்த நிலையில் இந்தி நடிகர்களும், சினிமா தொழிலாளர்களுக்கு உதவ பணத்தை வாரி வழங்குகிறார்கள். நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார். 

    இதுகுறித்து இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுதாக சல்மான்கான் உறுதி அளித்துள்ளார்” என்றார்.
    Next Story
    ×