என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இளைஞர்கள் குருட்டு தைரியத்தில் சுற்றுகின்றனர் - காயத்ரி ரகுராம் காட்டம்
Byமாலை மலர்29 March 2020 9:15 AM GMT (Updated: 29 March 2020 8:57 AM GMT)
ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் குருட்டு தைரியத்தில் வெளியே சுற்றுவதாக நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் பேசியிருப்பதாவது:- கொரோனா பாதிப்பை தடுக்க பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சுடு தண்ணீர் குடித்தால் நல்லது என்கிறார்கள். இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் இந்த நேரத்திலும் நிறைய இளைஞர்கள் தங்களுக்கு எதுவும் ஆகாது என்ற குருட்டு தைரியத்தில் வெளியே போகிறார்கள். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் தங்கள் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரவும் என்பதை அவர்கள் அறியவில்லை.
நிறைய பேர் வெளிநாட்டில் இருந்து நமது நாட்டுக்கு வந்து இருப்பார்கள். அவர்கள் மீது வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். காய்கறி கடைகளில் ஒரு மீட்டர் தொலைவை கடைபிடித்தால்தான் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். விஜய், அஜித்குமார் ரசிகர்களுக்கு நான் சொல்வது அவர்கள் சொன்ன வழிமுறையை பின்பற்றுங்கள். யாருக்காவது அறிகுறி இருந்தால் அடுத்த வாரம்தான் தெரியும், அதையும் கடந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X