என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
21 நாட்கள் என்ன செய்யலாம்? - மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்
Byமாலை மலர்27 March 2020 4:15 AM GMT (Updated: 27 March 2020 3:45 AM GMT)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கழிப்பது எப்படி என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு ஓய்வு நேரத்தை தான் கழிப்பது எப்படி என்பது பற்றி காஜல் அகர்வால் கூறியதாவது:- “கொரோனா ஊரடங்கில் பழைய பழக்கங்களை கை கழுவிவிட்டு, புதிய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளலாம். நான் ஆன் லைனில் புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளேன். தியானம் கற்கிறேன். புத்தக வாசிப்பு பழக்கத்தையும் தொடங்கி இருக்கிறேன். சமையல், வீட்டு வேலை செய்வது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது என்று இருக்கிறேன்.
மற்றவர்களும் இதை செய்யுங்கள். இதற்கு முன்பு ஓய்வில்லாமல் உழைத்து, எப்போது ஓய்வு கிடைக்குமோ என்று காத்திருந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு வசதியாக உள்ளது. வெளியே செல்லாமல் இருப்பது நமக்கு மட்டுமே நல்லது என்று இல்லை, நாட்டுக்கு செய்யும் சேவையாகவும் இருக்கும். 21 நாட்களும் சுய கட்டுப்பாட்டுடன் வீட்டுக்குள்ளேயே இருங்கள். தேவைகளையும், பயன்பாட்டையும் குறைத்து கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X