என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பெப்சி தொழிலாளர்களுக்கு கமல், ஷங்கர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
Byமாலை மலர்26 March 2020 6:01 AM GMT (Updated: 26 March 2020 6:01 AM GMT)
தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்காக நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திரையுலகமே மூடப்பட்டுள்ளது. இதனால் திரைப்பட தொழிலாளர்கள், துணை நடிகர்-நடிகைகள் வேலை இழந்து கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு பலர் உதவி வருகிறார்கள். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பெப்சிக்கு நிதி வழங்கினர். நடிகர் கமல்ஹாசன் ரூ.10 லட்சம் வழங்குகிறார். டைரக்டர் ஷங்கர் ரூ.10 லட்சமும், தயாரிப்பாளர் லலித் ரூ.10 லட்சமும் வழங்கினர். நடிகர் சங்கத்துக்கு நடிகர் பொன்வண்ணன் ரூ.25 ஆயிரமும், பூச்சி முருகன், சத்ய பிரியா ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி இருக்கிறார்கள்.
திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்துக்கு நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கி உள்ளார். மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு தயாரிப்பாளர் தாணு 250 மூட்டை அரிசியும், நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியும், நடிகை ரோஜா 100 மூட்டை அரிசியும், நடிகர் ராதாரவி 12 மூட்டை அரிசியும், ஜெய்வந்த் 10 மூட்டை அரிசியும் வழங்கி உள்ளனர். மேலும் பலர் உதவி வழங்கி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X