search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    துல்கர் சல்மான்
    X
    துல்கர் சல்மான்

    அவர் சினிமாவுக்காகவே பிறந்தவர் - துல்கர் சல்மான்

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் துல்கர் சல்மான், அவர் சினிமாவுக்காகவே பிறந்தவர் என்று கூறியிருக்கிறார்.
    தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்தப் படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

    இதுபற்றி துல்கர் சல்மான் கூறியதாவது: தேசிங்கு ஐந்து வருடமாக உழைத்துள்ளார். நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் மிக உண்மையாக சினிமாவை நேசிப்பவர். இங்கு எல்லோருமே நல்ல மனதுக்காரர்கள். தான் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. எல்லோரும் எல்லோரையும் பாராட்டுவது நிஜம். 

    துல்கர் சல்மான் - ரீத்து வர்மா

    இந்த படம் அனைவர் மீதும் அன்பை சேர்த்துள்ளது. இன்னும் பத்து வருடத்தில் தேசிங்கு மிகப்பெரிய ஆளாகிவிடுவார். தர்ஷன் ஹீரோவாகி விடுவார். 10 வருடம் கழித்து சந்தித்தால் இந்தப்படத்தை பற்றி பேசுவோம் எனத் தோன்றுகிறது. ரீத்து வர்மா சினிமாவுக்காகவே பிறந்தவர் போல் இருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். அவர் கண்ணிலேயே நடிக்கிறார்’. இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×