search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரகா‌‌ஷ்ராஜ்
    X
    பிரகா‌‌ஷ்ராஜ்

    நடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் மீது மோசடி வழக்கு

    காசோலை மோசடி வழக்கில், ஏப்ரல் 2ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக பிரகா‌‌ஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
    பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த உன் சமையல் அறையில் படம் தமிழில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இந்தியில் அப்படத்தை ரீமேக் செய்தார். இந்தியில் தடிகா என்ற பெயரில் வெளியான அந்த படத்தை தயாரிப்பதற்காக, பைனான்சியர் ஒருவரிடம் இருந்து கடனாக பணம் பெற்றுள்ளார். 

    இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை பெருநகர 3-வது விரைவு குற்றவியல் கோர்ட்டில் நடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் மீது இந்தி திரைப்பட பைனான்சியர் ஒருவர் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் அவர், ‘‘இந்தி படத்தை தயாரிக்க நடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் ரூ.5 கோடிக்கு வழங்கிய காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாக’’ கூறி இருந்தார்.

    பிரகா‌‌ஷ்ராஜ்

    இந்த வழக்கை விசாரித்த பெருநகர 3-வது விரைவு குற்றவியல் மாஜிஸ்திரேட்டு, வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி நடிகர் பிரகா‌‌ஷ்ராஜுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். 
    Next Story
    ×