search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஆர்.கே.செல்வமணி
    X
    ஆர்.கே.செல்வமணி

    பையனூரில் திரைப்படத்துறையினருக்கு 6 ஆயிரம் வீடுகள் - ஆர்.கே.செல்வமணி பேட்டி

    பையனூரில் திரைப்படத்துறையினருக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டியளித்துள்ளார்.
    திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு சென்னை பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 15 ஏக்கர் நிலத்தில் ஸ்டுடியோ மற்றும் படப்பிடிப்பு தளங்கள் கட்டவும் 50 ஏக்கர் நிலத்தில் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டவும் இடம் வழங்கி உள்ளது. அதில் ஏற்கனவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அம்மா படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டு வருகிறது. 

    ஆர்.கே.செல்வமணி

    அடுத்து 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும். 500, 800, 1,500, 2 ஆயிரம் சதுர அடி என்று 4 வகை குடியிருப்பு பகுதிகளாக இவை கட்டப்படும். இதில் குடியிருப்புகள் வேண்டி இயக்குனர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 3 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சினிமாவும் பையனூருக்கு மாறி விடும்.

    இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
    Next Story
    ×