search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சல்மான் கான்
    X
    சல்மான் கான்

    சைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்த சல்மான்கான்

    இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், நிகழ்ச்சி ஒன்றில் சைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்ததாக கூறியிருக்கிறார்.
    இந்தி நடிகர் சல்மான்கான் உமாங் என்ற பெயரில் மும்பை காவல் துறையினர் நடத்திய நிதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது காமெடி நடிகர் கபில் ‌ஷர்மாவிடம் உரையாடினார். இந்த உரையாடலின்போது சிறுவயதில் சைக்கிள் மெக்கானிக்கிடம் ரூ. 1.25 பைசா பாக்கி வைத்த கதையை விவரித்தார்.

    டவுசர் அணிந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் இருந்த நான் சைக்கிள் கடைகாரரிடம் எனது வண்டியை ரிப்பேர் செய்ய சொன்னேன். அந்த பணிக்கான பணத்தை பின்னர் தருவதாக கூறினேன். ஆனால் மறந்து விட்டேன்.

    சல்மான் கான்

    மறுபடியும் எனது சைக்கிள் டயரை சரி செய்ய மீண்டும் அவரை சந்தித்தேன். அப்போது சிறு வயதில் சைக்கிளை ரிப்பேர் செய்தீர்கள். பணம் தருகிறேன் என்று கூறிவிட்டு தரவில்லை. ஒரு ரூபாய் 25 பைசா பாக்கி தரவேண்டும் என்றார்.

    அந்த சூழ்நிலை எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பின்னர் நான் தர வேண்டிய பாக்கியை அவரிடம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×