என் மலர்
சினிமா

நிவேதா பெத்துராஜ்
காதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ்
ஒருநாள் கூத்து படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், தன்னுடைய ரசிகர்களுக்கு காதல் பற்றி விளக்கமளித்துள்ளார்.
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தை டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, பொன்மாணிக்க வேல் திரைப்படம் உருவாகியுள்ளது.

தெலுங்கிலும் முக்கிய நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் நிவேதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, அதற்கு "சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல்" என நிவேதா பதில் அளித்துள்ளார்.
Next Story






