என் மலர்
சினிமா

மாஃபியா
மாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஃபியா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.

இதன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பிக்கப்பட்டு கார்த்திக் நரேனை அழைத்து பாராட்டினார். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இப்படத்தை பிப்ரவரி 21ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
Next Story






