search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மாணவியுடன் சூர்யா
    X
    மாணவியுடன் சூர்யா

    மாணவியின் பேச்சை கேட்டு கண்கலங்கிய சூர்யா

    அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சூர்யா, மாணவியின் பேச்சை கேட்டு மேடையிலேயே கண் கலங்கினார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதையும் தாண்டி சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கும் வகையில் அகரம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.  

    இந்நிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    சூர்யா

    நிகழ்ச்சியில் பேசிய மாணவி ஒருவர், தனது குடும்ப சூழ்நிலைகளையும் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசினார். இதை கேட்ட நடிகர் சூர்யா மேடையில் கண் கலங்கினார். பின்னர் மாணவிக்கு தட்டி கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் வந்திருந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
    Next Story
    ×