என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தேவதாசி முறை - அம்மாவின் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சின்மயி
Byமாலை மலர்31 Dec 2019 6:14 AM GMT (Updated: 31 Dec 2019 6:14 AM GMT)
தேவதாசி முறை குறித்த தனது தாயாரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பாடகி சின்மயி அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மீடூ எனும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை வெளிக்கொணர பிரச்சாரங்களை முன்னெடுத்தவர் பாடகி சின்மயி. அடுத்தடுத்து சில சர்ச்சையான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்கினார். தற்போது சின்மயியின் தாய் பண்டையகால தேவதாசி முறை குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்மயியின் தாயார் பத்மஹாசினி, ‘தேவதாசி முறை என்பது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, நம் பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது எப்பேர்பட்ட உயர்வான முறை. அதை சிதைத்ததனால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்’ என்று கூறி உள்ளார். இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பேசிய வீடியோ பலராலும் பகிரப்பட்டது.
இது தொடர்பாக பாடகி சின்மயியிடமும் கேள்விகள் எழுப்பி வந்தனர். ‘ஆணாதிக்கம், பெண்களின் பாதுகாப்பு என்று தொடர்ந்து பேசி வருகிறீர்கள். உங்கள் அம்மா இப்படி பேசியிருப்பது சரியானதா? முதலில் மாற்றத்தை உங்கள் தாயிடம் இருந்து ஆரம்பியுங்கள்’ என்பது போன்ற கேள்விகளை அவரிடம் கேட்டனர்.
அதுமட்டுமின்றி மிக கடுமையான சொற்களாலும் சின்மயியையும், அவரது தாயாரையும் தாக்கி வந்தனர். அந்தப் பதிவுகளில் பலரும் சின்மயியை டேக் செய்திருந்தனர்.
இதுகுறித்து தற்போது சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’. அம்மாவின் கருத்துக்கு அவர்தான் பொறுப்பு. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X