என் மலர்tooltip icon

    சினிமா

    அமிதாப்பச்சன்
    X
    அமிதாப்பச்சன்

    29-ம் தேதி அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு

    நடிகர் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வருகிற 29-ந்தேதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி அறிவித்திருக்கிறார்.
    இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும், தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (77) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

    அவர் காய்ச்சலால் அவதிப்படுவதால், தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்க இயலவில்லை, அதற்காக வருந்துகிறேன் என்று டுவிட்டரில் நேற்றுமுன்தினம் பதிவு வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அமிதாப்பச்சன்

    உடல்நலக்குறைவு காரணமாக தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமிதாப்பச்சன் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் விருது பெற்ற கலைஞர்களுக்கு வருகிற 29-ந்தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்தளிக்கிறார். அப்போது, அமிதாப் பச்சனுக்கு இந்திய திரைப்படத் துறையின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிப்பார்.

    இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.
    Next Story
    ×