search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்ரேயா
    X
    ஸ்ரேயா

    லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா

    ஆர்.மாதேஷ் இயக்கி வரும் ‘சண்டக்காரி’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ரேயா லண்டன் போலீசிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
    விஜய் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். ‘சண்டக்காரி’  படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜெயபாலன், ஜெயக்குமார் தயாரித்து வருகிறார். 

    படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:- “இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாகவும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார். 

    சண்டக்காரி படக்குழுவுடன் ஸ்ரேயா

    உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டார்கள். “எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். உடனே விமல் உள்பட படக்குழுவினர் ஓடிவந்து, உரிய ஆவணங்களை காட்டி, படப்பிடிப்புக்காக வந்து இருக்கிறோம் என்று விளக்கிய பின், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரேயாவை விடுவித்தனர்.” 
    Next Story
    ×