என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகர் அதர்வா மீது பண மோசடி புகார்
Byமாலை மலர்13 Nov 2019 2:16 AM GMT (Updated: 13 Nov 2019 2:16 AM GMT)
பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான நடிகர் அதர்வா மீது எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன் பண மோசடி புகார் அளித்துள்ளார்.
பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான நடிகர் அதர்வா, பரதேசி, ஈட்டி, செம்ம போத ஆகாத உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்தை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதர்வா ரூ.6 கோடி பணமோசடி செய்ததாக எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் வி.மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், அதர்வா நடித்த செம போத ஆகாதே என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை ரூ.5.5 கோடிக்கு பெற்றேன். ஆனால் படம் வெளியாக தாமதமானதால் எனக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய பணம் இல்லாமல் மின்னல் வீரன் என்ற படத்தில் நடித்து தருவதாக கூறினார்.
ஆனால் ஒப்பந்தப்படி படம் நடித்துத் தராமல் அதர்வா ஏமாற்றியதால் இதுவரை ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X