என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பட அதிபர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை- மாநாடு படத்தில் நடிப்பாரா சிம்பு?
Byமாலை மலர்21 Oct 2019 2:08 AM GMT (Updated: 21 Oct 2019 2:08 AM GMT)
மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால் அப்படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாகவும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இது அரசியல் திகில் கதை என்றும் கூறப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில் மாநாடு படத்தை கைவிடுவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “எவ்வளவோ இழுத்து பிடித்தும் கால விரயம் ஏற்பட்டதே தவிர படத்தை தொடங்க இயலவில்லை. எனவே சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்படுகிறது” என்றார். சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாடு பட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இதில் சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு தரப்பில் அவரது தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டு “குறிப்பிட்ட நேரத்தில் சிம்பு மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொடுப்பார்” என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது, “மாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். மாநாடு படத்தில் சிம்பு நடிக்க சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அது ஏற்கப்பட்டால் படப்பிடிப்பை தொடங்குவோம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X