search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரித்திகா சிங்
    X
    ரித்திகா சிங்

    பாக்சிங்கில் கவனம் செலுத்தும் ரித்திகா சிங்

    இறுதிச்சுற்று படத்தில் பாக்சிங் வீராங்கனையாக நடித்த ரித்திகா சிங், தற்போது பாகிசிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார்.

    இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தமிழில் அவர் ஓ மை கடவுளே எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

    ரித்திகா சிங்

    அருண் விஜய்யின் பாக்சர் படத்திலும், வணங்காமுடி எனும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இதை பார்த்த அவரது ரசிகர்கள், ரித்திகா சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் பாக்சிங் செய்ய போறீங்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
    Next Story
    ×