என் மலர்
சினிமா

விவசாயிகளுடன் ஜனநாதன், சுருதிஹாசன், விஜய் சேதுபதி
விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி
ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார்.
இயற்கை, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிக்கும் படம் லாபம். விவசாயிகளின் பொருளாதார நிலை பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு குன்றத்தூர் அருகே பெருவயல் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி அந்த கட்டிடத்தை செட்டாக போடாமல் உண்மையான கட்டிடத்தையே கட்ட சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கட்டிடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்க சொல்லி இருக்கிறார். இந்த படத்தை விஜய்சேதுபதியின் விஜய் சேதுபதி புரடக்ஷன்ஸ் நிறுவனம் 7சிஎஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
Next Story






