என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சமந்தாவை பின் தொடரும் நான்கு பேர் கொண்ட குழு
Byமாலை மலர்14 Oct 2019 12:54 PM GMT (Updated: 14 Oct 2019 12:54 PM GMT)
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவை புகைப்படம் எடுக்க நான்கு பேர் கொண்ட குழு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதற்காக தனியாக போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை பதிவிடுவார்கள்.
ஆனால், சமந்தா அதற்கு மட்டுமல்லாது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றைத் தனியாகப் படம் பிடிக்க நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறாராம். அவர்கள் எப்போதும் சமந்தாவுடன் பயணித்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரைப் படமெடுப்பார்களாம்.
அதில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து சமந்தா அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவாராம். சமந்தா டுவிட்டரில் 77 லட்சம், இன்ஸ்டாகிராமில் 79 லட்சம், பேஸ்புக்கில் 87 லட்சம் தொடர்பாளர்களையும் வைத்திருக்கிறார். அவர் பதிவிடும் புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக் செய்வது வழக்கம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X