என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் ஷோபனா
Byமாலை மலர்10 Oct 2019 12:03 PM GMT (Updated: 10 Oct 2019 12:03 PM GMT)
தமிழ், மலையாள சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்த ஷோபனா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
தமிழ், மலையாள சினிமாவில் மிக சிறந்த நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தவர் ஷோபனா. இயல்பிலேயே நடனம் கற்றவர் என்பதால் தனது முகபாவத்தில், கண்கள் அசைவில் கூட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி, தனது நாட்டிய பள்ளியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார் ஷோபனா. இவர் நடிக்கும் படத்தை துல்கர் சல்மான், தயாரிப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியுடன் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷோபனா இணைந்து நடிக்கிறார்.
இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக சந்திரமுகியில் பிரபு ஜோதிகா கதாபாத்திரங்களை அதன் ஒரிஜினலான மணிச்சித்ரதாழ் படத்தில் நடித்தவர்கள் இந்த ஜோடி தான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X