search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வித்யா பாலன்
    X
    வித்யா பாலன்

    படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பதா? - வித்யா பாலன் காட்டம்

    கதையை மாற்றவேண்டும் என்று படத்தை பார்க்காமலேயே போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது என வித்யா பாலன் கூறியுள்ளார்.
    வித்யாபாலன் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’எனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நான் நடித்த 'டர்ட்டி பிக்சர்', 'கஹானி' மைல்கல் படங்களாக அமைந்தன. அந்த கதைகளை தேர்வு செய்ததில் சுதந்திரமாக செயல்பட்டேன். 

    மொழி எல்லைகளை தாண்டி நடிப்பதற்கு என் தைரியம்தான் காரணம். கதைகள் தேர்வில் துணிச்சலாக சுதந்திரமாக செயல்படுகிறேன். நான் நடிக்கும் எல்லா படங்களும் சிலருக்கு பிடிக்கலாம் இன்னும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். பிடிக்காதவர்கள் எனது படங்களை பார்க்க வேண்டாம். 

    வித்யா பாலன்

    சினிமா துறையில் இருப்பவர்கள் எந்த மாதிரி கதைகளிலும் நடிக்கலாம். அது அவர்கள் உரிமை. படங்களை தியேட்டர்களில் திரையிட விடமாட்டோம். பெயரை மாற்ற வேண்டும். கதையை மாற்றவேண்டும் என்று படத்தை பார்க்காமலேயே போராட்டம் செய்வது கண்டிக்கத்தக்கது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×