என் மலர்tooltip icon

    சினிமா

    கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா
    X
    கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா

    எனக்கும் கணவருக்கும் நடுவில் ஒன்று பிரச்சனையாக இருக்கிறது - சமந்தா

    நடிகை சமந்தா தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, எனக்கும் கணவருக்கும் நடுவில் ஒன்று பிரச்சனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
    சமந்தா தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தனது கணவர் குறித்து ரகசியங்களை குறிப்பிட்டுள்ளார். ’என்னால் என் கணவர் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாவா, அவரா என்று கேட்டால், நான் என் கணவருக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன்.

    குழந்தை குறித்து இப்போது நாங்கள் யோசிக்கவில்லை. என் கணவர் நாக சைதன்யாவிற்கு நான் முதல் மனைவி என்று கூட சொல்ல முடியாது. எப்போதும் அவர் தலையணையை அணைத்தபடிதான் படுத்து இருப்பார். தூங்கும் போதும் அதை கட்டிபிடித்துக் கொண்டுதான் இருப்பார். 

    சமந்தா

    எப்போதும் எங்களுக்கு இடையில் ஒரு தலையணை இருக்கும். அவரை முத்தமிட வேண்டும் என்றால் கூட தலையணையை கேட்க வேண்டிதான் இருக்கும். இந்த தலையணை பிரச்சனை குறித்து நான் நிறைய சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலும் சொல்ல மாட்டேன்’ என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×