search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஜித்
    X
    அஜித்

    டப்பிங் தியேட்டர் அமைக்கும் அஜித்

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி வருகிறார்.
    அஜித் எங்கு சென்றாலும், அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம். இதனாலேயே, அவருடைய படங்களின் படப்பிடிப்பு முடிந்தவரை தமிழகத்தில் நடைபெறுவதில்லை. அதிகமான ரசிகர்கள் கூட்டம் கூடுவதுதான் காரணம். 

    தற்போது அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே அரங்குகள் அமைத்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் ராஜமுந்திரியிலும் நடைபெற்று வருவது வழக்கம். சென்னையில் திரையுலகம் சார்ந்து, தன் படங்களின் டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவும் இரவில் தான் அஜித் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது கூட ரசிகர்கள் கூட்டம் ஒன்றுகூடி புகைப்படங்கள் எடுத்து வந்தனர். 

    அஜித்

    தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித், தன் வீட்டுக்குள்ளேயே சொந்தமாக டப்பிங் தியேட்டர் ஒன்றைக் கட்டி வருகிறார். இதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இனிவரும் படங்களுக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் இங்கேயே நடக்கும் எனத் தெரிகிறது.
    Next Story
    ×