என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காப்பான் படத்திற்கு மீண்டும் சிக்கல்
Byமாலை மலர்19 Sep 2019 3:10 AM GMT (Updated: 19 Sep 2019 3:10 AM GMT)
லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காப்பான்’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தன்னிடம் கேட்ட கதையை படமாக எடுத்திருப்பதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கடந்த 2016-ம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்தாகவும். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக தெரிவித்து, காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி அப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு காப்பான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நீதிபதி மணிக்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X