என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஆக்ஷனை தொடர்ந்து அடுத்த படத்திலும் 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் விஷால்
Byமாலை மலர்15 Sep 2019 8:31 AM GMT (Updated: 15 Sep 2019 8:31 AM GMT)
ஆக்ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
‘ஆக்ஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் விஷால். இந்தப் படம் ‘இரும்புத்திரை 2’ என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் வேறொரு தலைப்பைத் தேர்வு செய்யவுள்ளதாகக் கூறினார்கள்.
இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கி வருகிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காகக் கோயம்புத்தூர் சென்றுள்ளது படக்குழு. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ரோபோ ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யுவன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஷால். இதையும் தன் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். இதற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X