என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
யோகி பாபு பட தயாரிப்பாளருக்கு நித்யானந்தா வக்கீல் நோட்டீஸ்
Byமாலை மலர்28 Aug 2019 11:32 AM GMT (Updated: 28 Aug 2019 11:32 AM GMT)
யோகிபாபு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பப்பி படத்தின் தயாரிப்பாளருக்கு நித்யானந்தா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
யோகி பாபு நடிக்கும் படம் பப்பி. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் படத்துடன் இணைந்து நித்யானந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இதற்கு சிவசேனா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசேனா அமைப்பின், மாநில துணைச் செயலாளர் செல்வம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நித்யானந்தா சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேசுக்கு வக்கீல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நித்யானந்தாவை ஆபாச நடிகருடன் இணைத்து சித்தரித்திருப்பது அவரது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. தயாரிப்பாளர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர்.
நித்யானந்தா உலகம் முழுவதும் அறியப்பட்ட ஆன்மீக குரு, அவரது யூடியூப் தளத்தில் 53 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். 27 உலக மொழிகளில் 300க்கும் அதிகமான புத்தகங்களை எழுதி உள்ளார்.
தணிக்கைத் துறை விதிகளின்படி ஒருவரை பற்றி காட்சிகள் வைக்கும் போது அது குறித்து சம்பந்தப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்தோ தடையில்லா சான்றிதழ் வாங்கவேண்டும். ஆனால் அப்படியான எந்த சான்றிதழும் நித்யானந்தா தரப்பில் வழங்கப்படவில்லை.” இவ்வாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சமூகத்தில் இத்தனை ஆண்டுகாலமாக நித்யானந்தா கட்டியமைத்த அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் படக்குழு செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வில்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X