என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் - சஞ்சய் தத்
Byமாலை மலர்27 Aug 2019 3:15 AM GMT (Updated: 27 Aug 2019 2:53 AM GMT)
அரசியல் கட்சி ஒன்றில் சேரப்போவதாக கூறப்பட்ட நிலையில், தான் எந்த கட்சியிலும் இணைய மாட்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் ராஷ்டிரீய சமாஜ் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் அந்த கட்சியின் தலைவரும், மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை மந்திரியுமான மகாதேவ் ஜன்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “விரைவில் நடக்க உள்ள மராட்டிய சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்கள் வழங்கும்படி பா.ஜனதாவிடம் கேட்கப்பட்டு உள்ளது.
மேலும் ராஷ்டிரிய சமாஜ் கட்சியை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ம் தேதி எங்கள் கட்சியில் இணைவார்” என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த தகவலை சஞ்சய் தத் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன். மகாதேவ் ஜன்கர் எனது அன்பு நண்பர் மற்றும் என்னுடைய சகோதரர் போன்றவர். அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X