என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மாநாடு டிராப் ஆனா என்ன மகா மாநாடு இருக்கு- சிம்பு அதிரடி
Byமாலை மலர்14 Aug 2019 9:22 AM GMT (Updated: 14 Aug 2019 9:22 AM GMT)
மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, மகா மாநாடு என்ற படத்தை சிம்பு இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பே சிம்பு திடீரென நீக்கப்பட்டார். வேரொரு நடிகரை வைத்து மாநாடு படம் புதிய பரிணாமத்தில் உருவாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் சிம்பு அமைதி காத்து வந்தார். இந்நிலையில், அவரது தந்தை டி.ராஜேந்தர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு அடுத்ததாக ’மகா மாநாடு’ என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும். சுமார் 125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் சிம்பு குடும்பத்துடன் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது ’மகா மாநாடு’ படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இப்படம் தமிழ் உட்பட 5 மொழிகளில் உருவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X