search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பார்த்திபன்
    X
    பார்த்திபன்

    விஜய் சேதுபதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - நடிகர் பார்த்திபன்

    தமிழ் சினிமாவில் அடுத்த 40 ஆண்டுகளுக்கு விஜய்சேதுபதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
    நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக துக்ளக் தர்பார் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்க உள்ளார். 

    மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்கள். 

    துக்ளக் தர்பார் பட பூஜை

    'துக்ளக் தர்பார்' படத்தின் தொடக்க விழா பூஜை, சென்னை வடபழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் அத்திவரதர் பற்றிய, ஒரு சிறு கதையை கூறி அதுபோல விஜய் சேதுபதியின் வளர்ச்சியை அடுத்த 40 ஆண்டுகளுக்கு யாராலும் தடுக்க முடியாது என்றார்.
    Next Story
    ×