என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சம்பளத்தை பிச்சை எடுக்கிறோம்- ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து
Byமாலை மலர்30 July 2019 9:33 AM GMT (Updated: 30 July 2019 9:33 AM GMT)
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, சம்பளத்தை பிச்சை எடுப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே லிபர்டி எ கால் டு ஸ்பை என்கிற ஆலிவுட் படத்தில் உளவாளியாக நடிக்கிறார். அவர் கதாபாத்திரத்தின் பெயர் நூர் இனாயத் கான். உளவாளியாக இருக்கும் இந்திய இளவரசியாக நடிக்க நிறைய பயிற்சி மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே. இதற்கு முன்பும் ராதிகா ஆப்தே ஒரு ஆலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆலிவுட் படம் பற்றி ராதிகா பேட்டி அளித்துள்ளார். அதில் சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:- ‘படம் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இடையே என்ன வித்தியாசம் என்றால் ஹாலிவுட்டில் மக்கள் நேரத்தை சரியாக பின்பற்றுகிறார்கள், மேலும் சரியான நேரத்திற்கு சம்பளத்தை கொடுத்துவிடுகிறார்கள். அதனால் சம்பள பணத்தை கொடுக்குமாறு யாரிடமும் அங்கு பிச்சை எடுக்கத் தேவையில்லை’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X