search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ராதிகா ஆப்தே
    X
    ராதிகா ஆப்தே

    சம்பளத்தை பிச்சை எடுக்கிறோம்- ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து

    தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, சம்பளத்தை பிச்சை எடுப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே லிபர்டி எ கால் டு ஸ்பை என்கிற ஆலிவுட் படத்தில் உளவாளியாக நடிக்கிறார். அவர் கதாபாத்திரத்தின் பெயர் நூர் இனாயத் கான். உளவாளியாக இருக்கும் இந்திய இளவரசியாக நடிக்க நிறைய பயிற்சி மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே. இதற்கு முன்பும் ராதிகா ஆப்தே ஒரு ஆலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆலிவுட் படம் பற்றி ராதிகா பேட்டி அளித்துள்ளார். அதில் சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார். 

    ராதிகா ஆப்தே

    அவர் கூறியிருப்பதாவது:- ‘படம் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இடையே என்ன வித்தியாசம் என்றால் ஹாலிவுட்டில் மக்கள் நேரத்தை சரியாக பின்பற்றுகிறார்கள், மேலும் சரியான நேரத்திற்கு சம்பளத்தை கொடுத்துவிடுகிறார்கள். அதனால் சம்பள பணத்தை கொடுக்குமாறு யாரிடமும் அங்கு பிச்சை எடுக்கத் தேவையில்லை’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×