search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஒரே படத்தில் இணையும் இரண்டு விஜய்
    X

    ஒரே படத்தில் இணையும் இரண்டு விஜய்

    கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் புதிய படத்தை விஜய் மில்டன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படம், நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி பைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து 'இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள். 

    ‘கொலைகாரன்’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி இந்த பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குனர் விஜய் மில்டன் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குவதோடு, ஒளிப்பதிவும் செய்கிறார்.



    தற்போது, இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் 2019 முதல் ‘இந்திய கடற்கரைகளின் தலைநகரமான’ கோவா, டையூ மற்றும் டாமன் ஆகியவற்றின் அழகான இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
    Next Story
    ×