search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அவர்களுக்கு தெரிந்தது, ஏன் இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை - ஆண்ட்ரியா ஆதங்கம்
    X

    அவர்களுக்கு தெரிந்தது, ஏன் இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை - ஆண்ட்ரியா ஆதங்கம்

    மாளிகை பட விழாவி பேசிய ஆண்ட்ரியா, அவர்களுக்கு தெரிந்தது, ஏன் இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார். #Andrea
    ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாளிகை’. "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

    இதில் ஆண்ட்ரியா பேசும்போது, ‘இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. 



    நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.
    Next Story
    ×