என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த அதுல்யா ரவி
By
மாலை மலர்31 Dec 2018 1:27 PM GMT (Updated: 31 Dec 2018 1:27 PM GMT)

காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி, தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார். #AthulyaRavi
காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமான அதுல்யா ரவிக்கு நாடோடிகள் 2, அடுத்த சாட்டை என்று வரிசையாக படங்கள் வர இருக்கின்றன. தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
‘தாய்மை உணர்வு பெண்ணுக்கே உரியது என்பதுபோல தன்னை நம்பிவரும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஆண்களிடத்தில் மேலோங்கி இருப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். இந்தக் குணாதிசயத்தைத்தான் ஆணுக்கான அடையாளமாகவும் நான் நினைக்கிறேன்.
மற்றபடி சிக்ஸ்பேக் வைத்துக்கொள்வதும் சாகசங்கள் புரிவதும் மட்டுமே ஆண்மையின் அடையாளங்கள் என்று நினைத்துக் கொள்பவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். காதலியோ, மனைவியோ... யாராக இருந்தாலும் அவர்களுக்கான சுதந்திரத்தை தொல்லை செய்யாத ஆண்தான் நல்ல துணையாக இருக்க முடியும்’ என்று உறுதியாக நம்புகிறேன்.

ஏனெனில், பெண்ணின் மெல்லிய உணர்வுகளைப் புரிந்துகொள்வதும் அவளது மனம் வெறுக்காத வகையில் நடந்து கொள்வதும்தானே உண்மையான ஆண்மை. அப்படிப்பட்ட நபர் தான் எனக்கு துணையாக வேண்டும்’ என்று கூறி இருக்கிறார். #AthulyaRavi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
