என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்29 Nov 2018 7:50 AM GMT (Updated: 29 Nov 2018 7:50 AM GMT)
‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படத்தில் நடித்துள்ள நடிகை ரியாமிகா மனஉளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. #Riyamikka #RiyamikkaSuicide
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தவர் ரியாமிகா (வயது 26). சினிமா நடிகையான இவர், ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவருடன் அவரது தம்பி பிரகாஷ் தங்கி உள்ளார்.
நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் ரியாமிகா, அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. பிரகாஷ், ரியாமிகாவின் காதலன் தினேஷ் ஆகியோர் அறையின் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்கவில்லை.
இதையடுத்து அந்த அறையின் பின்பக்கம் இருந்த ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது ரியாமிகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், இதுபற்றி வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ரியாமிகா உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியாமிகாவுக்கு வரும் வருமானத்தை கொண்டுதான் அவரது குடும்பம் நடந்து கொண்டிருந்தது. அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ரியாமிகா உறவினர்கள் வந்தவுடன் அவர்களிடம் முழுமையாக விசாரணை செய்யப்படும். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முழுவதும் முடிந்த பிறகுதான் நடிகை ரியாமிகா தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். #Riyamikka #RiyamikkaSuicide
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X