என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.
    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.

    அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.

    அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.

    என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.

    தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.

    "ஹு ஆர் ï? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.

    "ராஜையா'' என்றேன்.

    "கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    "எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.

    "எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

    அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.

    "சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.

    அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா.  போ! போ!'' என்றார்.

    அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.

    ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்

    இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.

    ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.

    என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''

    இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:

    "அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.

    அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.

    அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.

    அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''

    - இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.

    "இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.

    ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.

    இதுபற்றி அவரே கூறுகிறார்:

    "1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.

    இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்ïனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நìலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்ïனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.

    ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.

    கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்ïனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.

    இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.

    இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.

    தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.

    உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.

    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.

    அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்: -

    "அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.

    பாவலர் அண்ணனுக்கு கம்யூனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார். இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார்.

    இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார். நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல் நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை.

    நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள். ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.

    நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார்.

    அவர்கள் அண்ணனை நம்பினார்கள். இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.

    ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்? அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.

    இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா. அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''

    இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-  இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும். ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மியூசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார்.

    இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்யூமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார். "அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன். ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்,

    அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும். அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.

    இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார். அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும். அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

    "அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

    இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

    தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

    அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

    எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

    1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

    அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

    அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

    பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

    எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

    நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

    பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

    இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

    அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

    என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

    இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

    அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.

    படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்த தன் மகன் சிபி, நடிக்க வந்தது எப்படி என்பதை நடிகர் சத்யராஜ் விளக்கினார்.

    சத்யராஜ் குடும்பத்தில் எல்லோருமே படித்து பட்டம் பெற்றவர்கள்.

    சத்யராஜ் கோவை அரசு கலைக்கல்லூரியில் "பி.எஸ்சி'' பட்டப்படிப்பை முடித்தவர். அதன் பிறகே நடிக்க வந்தார். மனைவி மகேஸ்வரி, உடுமலைப்பேட்டை விசாலாட்சி கல்லூரியில் "பி.ஏ'' பட்டம் பெற்றார். `கல்லூரியில் படிப்பை முடித்து செல்லும் சிறந்த மாணவியாக கல்லூரி நிர்வாகம் இவரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்தது.

    சத்யராஜ் தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன்.

    மகள் திவ்யாவும் நிறைய படித்தவர். அயல்நாட்டு வர்த்தகப் படிப்பு, மனிதவள மேலாண்மைத் துறை படிப்பு, அதோடு மனோதத்துவ கவுன்சிலிங்கில் எம்.பில். முடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரி நாட்களில் படிப்பில் முதல் மாணவியாகவே இருந்திருக்கிறார்.

    மகள் பற்றி சத்யராஜ் கூறும்போது, "பெரியார் கண்ட புதுமைப்பெண் என்று திவ்யாவை தாராளமாக சொல்லலாம். இன்றைய சமுதாயத்தின் பெண்ணியவாதியாகவும் பார்க்க முடிகிறது'' என்றார், பெருமிதத்துடன்.

    "மகன் சிபி நடிக்க வந்தது எதிர்பாராதது'' என்கிறார், சத்யராஜ். அப்படியானால் நடிப்பு ஆர்வம் சிபிக்குள் எப்போது, எப்படி வந்தது?

    சத்யராஜ் கூறுகிறார்:-

    எங்கள் வீட்டில் படிப்பை சாதாரணமாக நினைத்துக் கொண்டது நான் மட்டும்தான். பார்டரில் பாஸ் பண்ணினால் போதும் என்பதுதான், சிறுவயது முதலே என் கல்விக் கொள்கையாக இருந்தது.

    நான் பள்ளியில் சேர்ந்ததே இரண்டாம் வகுப்பில் இருந்துதான். முதல் வகுப்புக்கு போகவில்லை. வயது அடிப்படையில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். நிறைய மார்க், முதல் மாணவன் என்ற கனவெல்லாம் கிடையாது. ஒருமுறை பள்ளியில் பரீட்சை வந்தது. முதல் பரீட்சை கணக்குப் பரீட்சை. ஒரு மணி நேரம் வரை கணக்கு போட்டுக்கொண்டிருந்த நான், அதுவரை போட்ட கணக்குகளுக்கு எவ்வளவு மார்க் கிடைக்கும் என்று கூட்டிப்பார்த்தேன். 40 மார்க்குக்கு மேல் வரும் என்பது தெரிந்ததும் உடனே பேப்பரை மடித்து ஆசிரியர் கையில் கொடுத்து விட்டு வீட்டுக்குப் போய் விட்டேன்.

    பரீட்சை தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள் நான் வீட்டுக்குப் போனது அம்மாவுக்கு அதிர்ச்சியாகி விட்டது. நானாகவே அம்மாவுக்கு விளக்கம் கொடுத்தேன். "மொத்தம் நூறு மார்க்குக்கு 40 மார்க் வரை சரியாக எழுதிட்டேன். பாஸ் ஆனா போதாதா? அதுதான் பேப்பரை ஆசிரியர் கிட்ட கொடுத்துட்டு வந்திட்டேன்'' என்றேன்.

    படிப்பில் நான் இப்படி என்றால், சிபி எனக்கு நேர் எதிர். எப்போதும் முதல் ரேங்க்தான் வாங்குவான். அவன் படிப்பில் `நம்பர் ஒன்னாக இருந்ததால் 6-ம் வகுப்பில் டபுள் புரமோஷன் கொடுத்தார்கள். அதன்படி 7-வது வகுப்புக்கு போகாமலே 8-வது வகுப்புக்கு போய்விடலாம். ஆனால் சிபி அப்படிப்போக மறுத்து விட்டான்.

    "போயிருக்கலாமே'' என்று நான் சொன்னபோது, சிபியோ, "வரிசையாகவே வரேன். இப்ப நான் `திடுதிப்பென 8-வது போய்விட்டால் அங்கே இதுவரை முதல் இடத்தில் இருக்கிற பையனோடு படிப்பில் மல்லுக்கட்ட வேண்டிவரலாம்'' என்றான்.

    ஒருமுறை எப்படியோ முதல் ரேங்க் மிஸ்சாகி இரண்டாவது ரேங்க் வந்தான். அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. நான் சமாதானப்படுத்திப் பார்த்தேன். அவன் கேட்பதாயில்லை. கட்டிலில் புரண்டு புரண்டு அப்படி ஒரு அழுகை அழுதான். அடுத்த பரீட்சையில் முதலிடம் வந்த பிறகே முகத்தில் மறுபடியும் மலர்ச்சியை பார்க்க முடிந்தது.

    படிக்கிற நாட்களில் விஜய் ரசிகனாக இருந்தான். ஆனால் நடிப்பு அவனை எப்படி, எப்போது ஈர்த்தது என்பது எங்களுக்கே ஆச்சரியம். கல்லூரியில் `பி.காம்' மூன்றாம் ஆண்டு படிக்கிறபோதுதான் அவனது நடிப்பு ஆர்வம் தெரிய வந்தது. தனது நடிப்பு ஆசையை சிபியே எங்களிடம் சொன்னபிறகுதான், மகனுக்குள் இருந்த நடிகனை பார்க்க முடிந்தது.

    நடிக்க வரும்போது சினிமாவுக்கான நடனம், சண்டைப்பயிற்சி என அவரே தயாராகிக் கொண்டார். தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர். நடித்து பெரும் வெற்றியை எட்டிய `ஸ்டூடண்ட் நம்பர் ஒன்' படத்தை தமிழில் ரீமேக் செய்தார், டைரக்டர் செல்வா. கல்லூரி, இளமை, காதல் என்று அமைந்து இளைஞர்களின் விருப்பப்படமாகிய இந்தப்படம் சிபிக்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைக்கச் செய்தது.

    தொடர்ந்து `ஜோர்', `மண்ணின் மைந்தன்', `வெற்றிவேல் சக்திவேல்', `கோவை பிரதர்ஸ்', `லீ' என எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான கேரக்டர்கள்.

    சிபிக்கு முழுக்க ஆக்ஷன் பரிவாரங்களுடன் ராம.நாராயணன் டைரக்ஷனில் அமைந்த படம் `மண்ணின் மைந்தன்! இந்தப் படத்தில் நடிக்கும்போது சிபிக்கு 22 வயது. படத்தின் தொடக்க விழா கலைஞர் தலைமையில் நடந்தது. படத்தின் நாயகன் என்ற முறையில் சிபியும் மேடையில் பேசவேண்டி வந்தது.

    மேடையில் பேச தயங்கிய சிபியிடம், "கலைஞர் இருக்கிற மேடையில் மட்டும் தைரியமாக பேசி விட்டால், உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் உன்னால் பேசமுடியும்'' என்று சொன்னேன். இன்று சிபி சினிமா மேடைகளில் சகஜமாக பேசக்காரணமே, அன்று கலைஞர் இருந்த மேடையில் பேசியதால் கிடைத்த தைரியம்தான்.

    படிக்கிற நாட்களில் சிபியிடம் ஒரு வேகம் இருந்தது. நடிக்க வந்த பிறகு, வேகத்தோடு விவேகமும் சேர்ந்திருக்கிறது. இப்போது கதை விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டுகிறார். ஒரு விளையாட்டு வீரனின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலித்த "லீ'' படம் சிபிக்கு திருப்பு முனையாகவே அமைந்தது.

    "லீ'' படத்துக்குப் பிறகு கேட்டு வந்த பத்து பதினைந்து படங்களை தவிர்த்திருக்கிறார். கதையும் நன்றாக அமைந்து அதில் தானும் வெளிப்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். கதை அவருக்குப் பிடித்தால் என்னிடம் அந்தக் கதை பற்றி விவாதிக்கிறார். எனக்கும் திருப்தி என்றால் ஒப்புக் கொண்டு விடுகிறார்.

    இப்போது வி.என்.சுந்தர் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து டைரக்டர்கள் செல்வா, ஜான் (`சச்சின்' இயக்குனர்) படங்களையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

    இந்தியிலும், தெலுங்கிலும் புகழ் பெற்ற தயாரிப்பாளர் - டைரக்டர் ராம்கோபால் வர்மா, சிபியை ஹீரோவாக்கி தமிழிலும் தெலுங்கிலும் ஒரு படம் தயாரிக்கிறார். மிகப்பெரிய அளவில் பேசப்படும் படமாகவும் சிபியை ஆக்ஷனில் முன்னிறுத்தும் படமாகவும் இது அமையும்.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    சத்யராஜ் இப்போது `தங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து

    கூறியதாவது:-"பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' படங்களில் நடித்த பிறகு இனி புதுசாக என்ன நடித்துவிடப்போகிறீர்கள் என்று என்னிடம் கூட நண்பர்கள் கேட்டார்கள். சமீபத்தில் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் என்னை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சேர்ந்திருந்ததால் ஏற்பட்ட கேள்வி இது. எல்லாவித நடிப்பிலும் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்பவனே நல்ல கலைஞன்.

    இதை மனதில் வைத்து "வேலை கிடைச்சிடுச்சு'' மாதிரியான கதைப் பின்னணியில் காமெடி இணைத்து டைரக்டர் கிச்சா சொன்ன "தங்கம்'' படத்தில் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கவுண்டமணி அண்ணனும் என்னுடன் காமெடிக் கூட்டணி போடுகிறார்.

    படத்தில் நாங்கள் பண்ணும் ஒவ்வொரு காமெடி அலம்பலுக்கும் ரசிகர்கள் வெடிச்சிரிப்பில் குலுங்கப் போகிறார்கள். `கரகாட்டக்காரன்' படத்தில் இடம் பெற்று இன்றைக்கும் பேசப்படும் "வாழைப்பழ காமெடி'' மாதிரி இந்தப் படத்திலும் ஒரு காமெடி இருக்கிறது. இந்தக் காட்சியில் நடித்த போது எங்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷலாக எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன்'' படப்பாடலான "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த'' பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். கெட்டப்பிலேயே நடிக்கிறேன். கதைப்படி, தங்கை மீது உயிரையே வைத்திருக்கிற நான், தங்கையின் திருமணம் சிறப்பாக நடப்பதாக காணும் கனவே இந்தப்பாட்டு. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். மேக்கப்பில் வர அவர் நடித்த காலங்களில் பயன்படுத்திய அதே வகை பான்கேக்கை பயன்படுத்தி மேக்கப் போட்டேன். பொருத்தமாக அமைந்தது மேக்கப். பாடல் காட்சியிலும் "நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆரை'' பார்க்க முடியும்.

    நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அந்த உரிமையில் அவர் பாடிய பாடலுக்கு அவர் தோற்றத்தில் நான் ஆடுவதை எனக்குக் கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்.

    நடிப்பை பொறுத்தவரையில் ரசிகர்கள் விரும்புகிற நடிகனாக நடிப்பேன்; நீடிப்பேன் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு.''

    உற்சாகமாகவே சொல்கிறார், சத்யராஜ்.
    "ஒன்பது ரூபாய் நோட்டு'' படத்தில் மாதவ படையாச்சியாக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ்.

    படப்பிடிப்பின்போதும், படம் வெளியான பிறகும் அவருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவங்கள் பல.

    அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார், சத்யராஜ்:

    "பெரியார் படத்தில் நடித்த காலகட்டத்திலேயே `கண்ணாமூச்சி ஏனடா' என்றொரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். கதையும், அதில் என் கேரக்டரும் வித்தியாசமாக இருந்ததால் ஒப்புக்கொண்டு நடித்தேன்.

    இந்தப் படத்தின் தனிச்சிறப்பே, அதில் பெண்களுக்கு கிடைத்த அதிகபட்ச இடஒதுக்கீடுதான்! படத்தின் தயாரிப்பாளர் ராதிகா, டைரக்டர் பிரியா, கேமராக் கலைஞர் பிரீத்தா -இப்படி முக்கிய பொறுப்புகளை பெண்களே சுமந்த படம்.

    இவர்களில் குறிப்பாக கேமரா கலைஞர் பிரீத்தா கேமராவை தோளில் சுமந்தபடி பல காட்சிகளை உற்சாகமாக படம் பிடித்தபோது, தொழிலை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது புரிந்தது. இந்த வகையில் கலைப்பங்களிப்பிலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதை படத்தின் வெற்றியிலும் இவர்கள் நிரூபித்தார்கள்.

    ஒரு படத்தில் என் நடிப்பு சிறப்பாக அமைகிறதென்றால், அதற்குப் பின்னணியில் தயாரிப்பு, டைரக்ஷன், கேமரா மற்றும் டெக்னிஷியன்கள் என்று பலரும் இந்த சிறப்புக்கு முன்னாகவும், பின்னாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த வகையில் பல்வேறு கேரக்டர்கள் மூலம் என்னை வார்த்தெடுத்த "அமைதிப்படை'', "வால்டர் வெற்றிவேல்'', "காக்கிச்சட்டை'', "பூவிழி வாசலிலே'', "பெரியார்'' போன்ற படங்களின் வரிசைக்குப்பின் நிச்சயமாய் அந்தப் படங்களின் இயக்குனர்கள் இருக்கிறார்கள். எனவே எதையும் என் வெற்றி என்று சொல்வதற்கில்லை. ஒரு கூட்டு முயற்சியில் விளைகிற வெற்றி என்றே இதை சொல்வேன்.

    "கண்ணாமூச்சி ஏனடா'' என்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தியது என்றால், என்னை ரசிகர்களிடம் உணர்ச்சிபூர்வமாக கொண்டு சேர்த்த படம் "ஒன்பது ரூபாய் நோட்டு.'' 3 வருடத்துக்கு முன்பே, தங்கர்பச்சானின் இந்தக் கதையை ஆஸ்கார் மூவிஸ் சார்பில் எம்.பாஸ்கர் தயாரிக்க இருந்தார்.

    அந்த சமயத்தில் ஒரு நாள் இரவு 11 மணிக்கு என்னை போனில் தொடர்பு கொண்ட இயக்குனர் தங்கர்பச்சான், "உங்களை பார்க்க வேண்டுமே'' என்றார். "உடனே வாருங்கள்'' என்றேன். வந்தவர் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து, "இது நான் எழுதிய `ஒன்பது ரூபாய் நோட்டு' நாவல். இதில் வருகிற மாதவபடையாச்சி கேரக்டரில் நீங்கள் நடித்தால் என் கற்பனைக்கு உயிர் கிடைக்கும்'' என்றார்.

    நான் அவரிடம், "கதை என்னன்னு சொல்லுங்க. எனக்கு முடிவு சொல்ல வசதியாய் இருக்கும்'' என்றேன். அவரோ விடாப்பிடியாக, "இல்லண்ணே! படிச்சுப்பாருங்க. இதுல வர்ற குடும்பத் தலைவர் மாதவபடையாச்சி கேரக்டர் உங்களை கவர்ந்தால் நடிக்கிறீங்க'' என்றார்.

    ஒரு தலைசிறந்த படைப்பாளி மட்டுமே தான் வாழ்கிற சூழ்நிலையை அப்படியே தனது படைப்புகளில் கொண்டுவரமுடியும். அதை "ஒன்பது ரூபாய் நோட்டு'' நாவலை படித்தபோது என்னால் முழுமையாக உணர முடிந்தது.

    நிஜமாகவே `மண்ணின் மைந்தர்' என்று கொண்டாடும் அளவுக்கு உயிரோட்டமான ஒரு உணர்வுக் குவியலை படைத்திருந்தார், தங்கர்பச்சான். நான் அவரிடம், "பெரியார் படத்தில் நடிக்கும்போது எனக்கு சில பொறுப்புகள் இருந்தன. பெரியாரை சுவாசிக்கும் கலைஞரை திருப்திப்படுத்த வேண்டும். பெரியாரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் வீரமணியை திருப்திப்படுத்தவேண்டும்.

    பெரியாரின் தொண்டர்களை திருப்திப்படுத்தவேண்டும். பெரியார் படத்தில் இது எல்லாமே நிறைவாக அமைந்தது. நான் 30 வருடத்தில் 170 படம் நடித்து முடித்திருக்கிறேன். என்றாலும் "மாதவ படையாச்சி'' எனக்குப் புதுமுகம்தான். நீங்கள் `வா' என்றால் வருவேன். `போ' என்றால் போவேன். `திரும்பு' என்றால் திரும்புவேன். மாதவபடையாச்சிக்கான இலக்கணம் அப்போதுதான் முழுமையாகும்'' என்றேன்.

    கோவை, ஈரோடு மாவட்டங்களில் பேசப்படும் `கொங்குத்தமிழை' பெரியார் படத்தில் பேசினேன். நான் கோவை மாவட்டத்துக்காரன் என்பதால் இப்படிப்பேச எளிதாய் இருந்தது. அதுமாதிரி முந்தைய படங்களில் நெல்லைத்தமிழ், சென்னைத்தமிழ் பேசியிருக்கிறேன். நண்பர் விஜயகாந்த், வடிவேல் போன்றவர்களுடன் பேசிப்பேசி மதுரைத்தமிழ் அத்துப்படியாகி விட்டது. "மந்திரப்புன்னகை'' படத்துக்காக வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் நெல்லைத் தமிழ் கற்றுத்தந்தார்.

    முதன் முதலாக தென்தமிழகத்தில் இருந்து விலகி வட தமிழகப் பகுதியில் நடக்கிற கதை. அவர்களின் தமிழ் உச்சரிப்பு முற்றிலும் எனக்குப் புதுசு. நெல்லையில் `என்ன' என்பதை சென்னை பாஷையில் `இன்னா' என்கிறார்கள். இந்தக் கதையில் வருகிற கேரக்டர்களோ `இன்ஞா' (அதாவது நா-ஞா இரண்டு உச்சரிப்புக்கும் இடைப்பட்ட கலவை) என்கிறார்கள். இந்த உச்சரிப்புக்குள் பழகும்வரை கொஞ்சம் சிரமப்படவே செய்தேன். ஆனாலும் கதைக்குள் வந்த பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை.

    பத்திரக்கோட்டை மண்ணில் விழுந்து நான் அழுகிற காட்சியைத்தான் முதலில் படமாக்கினார் தங்கர்பச்சான். காட்சி படமானதும் ஓடிவந்து என் கையை பிடித்துக்கொண்டவர், "அண்ணா! எனக்கு என் மாதவ படையாச்சி கிடைச்சிட்டார்'' என்றார், குதூகலக் குரலில்.

    அடுத்து நான் கோவணம் கட்டி கிராமத்து குழாயடியில் குளிக்கிற காட்சி. இந்த காட்சியை எடுப்பதற்காக ஊரின் மெயின்ரோட்டில் குழாய் பதித்து விட்டார் தங்கர். இரவு 10 மணிக்கு மேல் இந்த காட்சியை எடுக்கிறார்கள்.

    நான் படப்பிடிப்புக்கு புறப்படும்போது என் உதவியாளர் ஓடிவருகிறார். என் காதருகே, "சார்! இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க ஜனங்கள் கயிறு கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். எப்படியும் ஆயிரத்துக்கு மேல் இருப்பார்கள். அதோடு படப்பிடிப்பை பார்க்க பஸ், லாரிகளில் இருந்தும் நிறைய பேர் வந்து `திருவிழா' தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்'' என்றார்.

    உதவியாளர் எதற்காக இதைச் சொல்கிறார் என்பது எனக்குத் தெரியும். நான் என் உதவியாளரிடம், "கோவணம் தமிழனின் பூர்வீக உடைதானே! அப்படி நடிக்க நான் ஏன் வெட்கப்படணும்? இந்த உடையில்தானே நம்ம ஊர் விவசாயி `ஏர்' பிடித்து உழுகிறார்! எனவே கோவணம் அணிந்து நடிப்பதில் நான் பெருமைதான் படணும்'' என்றேன்.

    படப்பிடிப்பு முடிந்து `டப்பிங்' பேசும்போது டப்பிங் தியேட்டருக்கு நடிகை அர்ச்சனாவும் வந்திருந்தார். படத்தில் என் மனைவியாக நடித்தது அவர்தானே. நான் நடித்த காட்சிகளை டப்பிங் தியேட்டரில் அவர் பார்த்தபோது, கண் கலங்கி விட்டார். அப்போது அவர் என் கையை பிடித்துக்கொண்டு "உங்களுக்கு எல்லா விருதுகளும் கிடைக்கும்'' என்றார், குரல் தழுதழுக்க.

    நான் பல படங்களில் சிறப்பாக நடித்து முடித்திருந்தாலும்கூட, எனக்கு தேசிய விருது பெற்றுத்தரும் நடிப்புக்கான அளவுகோல் தெரியாது. ஆனால் அர்ச்சனாவோ சிறந்த நடிப்புக்காக 2 முறை தேசிய விருது பெற்றவர். அவர் உணர்ச்சிவசப்பட்டு என்னை பாராட்டியபோது, படத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களுக்கும் அப்போதே விருது கிடைத்த சந்தோஷம் எனக்குள்.

    படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் என் பேரன் பசியால் துடிக்கிற காட்சியை நடுராத்திரி முந்திரிக்காட்டுக்குள் படமாக்கினார் தங்கர்பச்சான். செருப்புகூட இல்லாமல் மறுபடி சொந்த ஊருக்கு வரும் மாதவபடையாச்சி, பசியால் கதறும் பேரனை பார்த்து கண்கலங்குவது காட்சி. சுற்றிலும் காட்டுப்பகுதியான அந்த இடத்தில், ஒரு குடிசை போட்டு காட்சியை படமாக்கினார்கள். காட்சிக்கு முன் தங்கர்பச்சான் என்னிடம், "சார்! இருட்டில் உங்கள் காலுக்குக்கீழ் ஏதாவது நெளிவதாக உணர்ந்தால் உடனே காலை உதறி விடுங்கள்'' என்றார்.

    நான் எதற்காக அப்படிச் சொல்கிறார் என்பது புரியாமல் அவரை பார்க்க, அவரோ, "முந்திரிக்காட்டுப்பகுதி அல்லவா? தேள், பாம்பு, நட்டுவக்காலி எல்லாம் சர்வசாதாரணமாக நடமாடும். அதனால்தான் சொன்னேன்'' என்றார். எனக்கு திகிலாகிவிட்டது. ஆனாலும் பயப்படாமல் (அல்லது பயப்படுவதை காட்டிக்கொள்ளாமல்) நடித்தேன்.

    என்றாலும் `பாம்பு' பயத்தையும் தாண்டி அந்தக்காட்சியில் நடித்தபோது, ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு பசியாற்ற முடியாத மாதவபடையாச்சி உணர்வு என்னை பாதிக்க, நானும் அழுதுவிட்டேன்.

    படம் தயாரானபோது, கலைஞர் பார்த்தார். படம் முடிந்து வந்தபோது அவர் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்தேன். கலைஞருடன் வந்திருந்த நடிகர் நெப்போலியன், என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறிவிட்டார்.

    ரஜினி சார் பார்த்துவிட்டு, "படத்தில் பங்கேற்ற எல்லோருக்குமே விருது நிச்சயம். குறிப்பாக உங்களுக்கு விருது உறுதி'' என்று வாழ்த்தினார்.

    நடிகர் பிரபு படம் பார்த்துவிட்டு, "தலைவரே! உங்களுக்கு எல்லா விருதுகளும் கிடைக்க உங்கள் சார்பில் நான் கடவுளை வேண்டிக்கிறேன்'' என்றார்.

    கம்ïனிஸ்டு தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு ஆகியோரும் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

    படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டும், வரவேற்பும் கிடைத்திருப்பதை பார்க்கும்போது `மாதவ படையாச்சி'யாக வாழ்ந்ததற்கு கிடைத்த வெகுமதியாகவே அதை உணர்கிறேன்''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    "பெரியார்'' படத்துக்கு அரசின் நிதி உதவி கிடைத்தது எதிர்பாராத ஒன்று என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.


    "பெரியார்'' படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-

    "1967-ல், தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நேரத்தில், ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த அண்ணா, திருச்சியில் உள்ள "பெரியார் மாளிகை''யில் தனது அமைச்சரவை சகாக்களுடன் சென்று பெரியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சம்பவத்தை, அதே பெரியார் மாளிகையில் படமாக்கியபோது, படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே உணர்ச்சிமயமாகி

    இருந்தோம்.அண்ணாவாக, நாவலராக, பேராசிரியராக, கலைஞராக என்று தலைவர்களின் அன்றைய தோற்றத்துக்கு பொருத்தமானவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார், இயக்குனர் ஞானராஜசேகரன். இப்படி தலைவர்கள் வருகிற காட்சி படமாகும்போதெல்லாம், சம்பந்தப்பட்ட நடிகர்களின் பெயரைச் சொல்லாமல் அவர்கள் ஏற்றிருந்த தலைவர்களின் பெயர்களைச் சொல்லியே நடிப்பதற்கு அழைத்தார்கள். குறிப்பாக அண்ணாவாக நடித்தவர் டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி. `ஷாட்' ரெடியானதும் அவர் பெயரைச் சொல்லாமல், "அண்ணாவை வரச்சொல்லுங்க'' என்பார், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான். இப்படி அழைத்தது அந்த சூழ்நிலைக்கு இன்னும் கனம் சேர்த்தது.

    வயது முதிர்ந்த காலகட்டத்தில் பெரியாரை அடிக்கடி புரட்டியெடுத்த நோய் வயிற்று வலி.

    மேடையில் உட்கார்ந்த நிலையில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென இந்த வயிற்றுவலி வந்து விடும் என்றார்கள். சிறுநீர்பையில் இருந்து நீர் பிரிவது சிரமமாக இருக்கவே ஒரு டிïப் இணைத்திருக்கிறார்கள். என்றாலும் சிறுநீர் பிரியும்போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பெரியாரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்திருக்கிறது. பல நேரங்களில் இந்த வலி தாங்காமல் மேடையிலேயே உருண்டு புரண்டிருக்கிறார்.

    இப்போது, பெரியாராக நானே அந்த வலியை நடிப்பில் கொண்டுவர வேண்டிய கட்டாயம். அதனால், இப்படி பெரியாரின் வயிற்றுவலி வேதனையை நேரில் பார்த்த தொண்டர்கள் யாராவது சொன்னால் அதை முடிந்தவரை என் நடிப்பிலும் கொண்டு வரமுடியும் என்று எண்ணினேன்.

    ஆனால், நான் எதிர்பார்த்த மாதிரி அப்படியொரு தொண்டர் எனக்குக் கிடைக்கவில்லை. ஆசிரியர் வீரமணியிடம் இதுபற்றி கூறினேன். "உங்களுக்கு தெரிந்த தொண்டர் இருந்தால் சொல்லுங்கள். அவர் சொல்வதை என் நடிப்பில் கொண்டு வருகிறேன்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதும், ஆசிரியர் வீரமணி என்னிடம், "என்னைவிட பெரியாரின் தொண்டர் வேறு யாருங்க?'' என்று கேட்டார். "தந்தை பெரியாரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு பெற்ற தொண்டன் என்ற முறையில், பெரியாரின் வயிற்று வலியும், அதற்காக அவர் துடித்த துடிப்பும் நான் அறிவேன்'' என்றவர், அப்போதே பெரியாரின் வயிற்று வலி காட்சிகளை கண்முன் கொண்டு வந்தார்.

    அறையில் அவர் வயிற்று வலிக்காக உருண்டு புரண்டு வேதனையை வெளிப்படுத்தியது நடிப்பு என்றாலும், என் கண்கள் கலங்கிப் போயின. மக்களின் அறியாமை இருளை அகற்ற வந்த பகலவன், தன் வேதனைகளை தாங்கிக்கொண்டு மக்களுக்காக பாடுபட்டாரே, எப்படிப்பட்ட மக்கள் தலைவர் அவர்'' என்று எண்ணியபோது, என் கண்கள் கலங்கிவிட்டன.

    சிறுவயதில் இருந்தே வசதியாக வாழ்ந்து பழகியவன் நான். எனக்கு ஏழ்மை பற்றி தெரியாது. நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்து வாய்ப்புக்காக பல இடங்களுக்கும் பஸ்சில் போக நேர்ந்தபோதுதான், நடுத்தர வர்க்கம், அதற்கும் கீழே ஒரு வர்க்கம் என மக்களின் பொருளாதாரப் போராட்டம் புரிய ஆரம்பித்தது.

    ஆனால், என்னைவிட பலமடங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெரியார், தன்னை வருத்திக்கொண்டு மக்களின் மூடநம்பிக்கைகள் அகல்வதற்காகப் போராடினாரே, அந்த போராட்ட குணம்தான் அவரை உயர்த்தியிருக்கிறது.

    என் தந்தையாக நடிக்கும் சத்யநாராயணா (இவர் தெலுங்கில் பெரிய நடிகர்) வெங்காயமண்டியில் என்னை செருப்பால் அடிக்கிற காட்சியில், என்னை அடிக்க மறுத்துவிட்டார். படத்தில் மிக முக்கியமான காட்சி அது. டைரக்டரும், கேமராமேனும் எவ்வளவோ சொல்லியும், செருப்பை தூக்கிய அவரது கை, என் மீது படாமல் அப்படியே அசைவற்று நின்றது!

    அவர் தயங்குவதைப் பார்த்ததும், எனக்கு பயம் வந்துவிட்டது. "சத்யநாராயணா சார்! தந்தை பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் இது. பெரியாரின் தந்தை தன் மகனை செருப்பால் அடிக்கிறார். எனவே `நடிப்பு' என்பதை மறந்துவிட்டு நிஜமாகவே அடியுங்கள். ஆனால் ஒரே `டேக்'கில் சரியாக அடித்து விடுங்கள். அடுத்தடுத்து செருப்பு அடி வாங்கினால், என் உடம்பு தாங்காது'' என்றேன்.

    அப்படியும் அவர் தயங்கி, பிறகு வேறு வழியின்றி நடித்தார். அதாவது என்னை செருப்பால் அடித்தார்! ஒரே `டேக்'கில் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததால், என் கன்னம் அதிக சேதாரமின்றி தப்பியது!

    படம் வளரத் தொடங்கியபோது செலவைப்பற்றி தயாரிப்பு தரப்பு கவலைப்படவேயில்லை.

    பெரியார் சென்று வந்த ரஷியாவிற்கு சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றதும் உடனே பயண ஏற்பாடு செய்தார்கள். பெரியாரின் ரஷிய அனுபவங்களை ரஷியாவிலேயே தங்கி படம் பிடித்தோம்.

    ஆங்கிலமே தெரியாத - பேசாத ஒரு நாடு ரஷியா. தங்கள் தாய்மொழிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தாய்மொழிக்கான மரியாதை நம்மிடையே குறைந்து வருவதை அங்கே இருந்த நாட்களில் ஒப்பிட்டுப் பார்த்தபோது வேதனைதான் மிஞ்சியது.

    மக்கள் தலைவர் பற்றிய படம் என்பதால், அரசிடம் உதவி கேட்கலாம் என்று நட்பு முறையில் சில யோசனை கூறினார்கள். ஆனால், கேட்காமலேயே பெரியார் படத்துக்கு 95 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு சார்பில் வழங்கினார், முதல்வர் கலைஞர். காரைக்குடியில் நடிகை ரகசியாவின் நடனக்காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் வீரமணியிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அவர்தான் இந்த சந்தோஷத் தகவலை முதன் முதலாக என்னிடம் சொன்னார்.

    "பெரியார்'' படத்துக்கு, அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர் கலைஞர், "மகன், தந்தைக்குச் செய்யும் உதவி'' என்று ஒரே வரியில் பதில் சொல்லி, கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.படத்தைப் பார்த்தார்

    படம் முடிந்து ஏவி.எம். ஏ.சி. தியேட்டரில் `டபுள் பாசிடிவ்' பார்த்தார் கலைஞர். பின்னணி இசை, எடிட்டிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படாமல் இருக்கும் `டபுள் பாசிடிவ்' 4ஷி மணி நேரம் வரை திரையில் ஓடும்.

    அதை பொறுமையாய் கலைஞர் பார்த்து முடித்தபோது, இரவு 11 மணி. படம் முடிந்ததும் உடனே அவர் வீட்டுக்குப் போகவில்லை. ஏ.சி. தியேட்டருக்கு வெளியே நின்று, காட்சிகள் பற்றி ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்கிறார். தியேட்டருக்கு வெளியே கொசுக்கள் தொல்லை வேறு. கொசுக்கடியையும் தாங்கிக்கொண்டு, படம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்து துணைவியார் போன் வந்தது. "சாப்பிட வரவில்லையே'' என்பது போன் வழிச்செய்தி. "வந்துவிடுகிறேன்'' என்றார் முதல்வர். அதோடு, "பெரியார் படம் பார்க்க வந்தேன். படம் முடிந்து இயக்குனர் ஞானராஜசேகரன், வீரமணி, வைரமுத்து, சத்யராஜ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்'' என்ற தகவலையும் தெரிவித்தார்.

    தன் சாப்பாட்டு நேரத்தைக்கூட துறந்து, "பெரியார்'' நினைவுகளுடன் ஐக்கியமாகி விட்டார், கலைஞர். நாங்கள்தான் `பசியோடு இருக்கிறீர்கள்' என்று நினைவூட்டி அவரை அனுப்ப வேண்டியதாயிற்று. அவர் புறப்படும்போதுகூட, "படத்தில் பெரியாரின் இறுதி ஊர்வலக் காட்சியை சேர்க்க மறந்து விடாதீர்கள். அதை சேர்த்தால்தான் சிறப்பாக இருக்கும்'' என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

    "பெரியார்'' படம் வரும்போது மட்டுமின்றி, பெரியார் காலமானபோதும் அவர்தான் முதல்வர். பெரியார் காலமான தகவல் முதல்வர் கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டதும், அரசு மரியாதைக்கு உத்தரவிட்டார். அப்போதிருந்த தலைமைச் செயலாளர், "பெரியார் எந்த அரசுப் பதவியிலும் இல்லாதவர். அவருக்கு அரசு மரியாதை கொடுக்க அரசு விதிகளில் இடமில்லை'' என்று சொல்லியிருக்கிறார்.

    அப்போதும்கூட கலைஞர் விடவில்லை. "தேசத்தந்தை என்று நாம் கொண்டாடும் மகாத்மா காந்தி எந்த அரசு பதவி வகித்தார்? அவர் இறந்தபோது, அரசு மரியாதை கொடுக்கப்படவில்லையா? சமூக சிந்தனையாளராய் மக்களின் மூடப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வாழ்நாளை அர்ப்பணித்த பெரியாருக்கு `அரசு மரியாதையுடன் அடக்கம்' என்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றால், அதற்காக என் பதவி போனால் கூட கவலையில்லை'' என்று சொல்லிவிட, அதன்பிறகே பெரியாரின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடந்து முடிந்தது.

    பெரியார் படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் பெரியாராக நடித்த சந்தோஷத்தை திரும்பவும் பெற்றேன். ஆசிரியர் வீரமணி கொடுத்த பெரியாரின் மோதிரத்தை என் விரலில் அணிவித்த கலைஞர், "பெரியாராக நடித்த தம்பி சத்யராஜ×க்கு எனக்கே கிடைத்திராத பெரியாரின் இந்த மோதிரத்தை பொறாமையுடன் வழங்குகிறேன்'' என்று சொல்லி பெரியார் மீதான அவரது பற்றை வெளிப்படுத்தினார்.

    சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, முதல் திரைப்படமாக ஒளிபரப்பானதும் "பெரியார்'' படம்தான். இதுவும் பெரியார் மீதான கலைஞரின் அன்பை - மரியாதையைத்தான் வெளிப்படுத்தியது.

    நான் வில்லனாக நடித்த "சட்டம் என் கையில்'' படத்துக்கும் எனக்கு விருது வழங்கியது கலைஞர்தான். நான் `பாலைவன ரோஜாக்கள்' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது விருது வழங்கியதும், பெரியார் படத்தில் நடித்ததற்காக விருது வழங்கியதும், `எம்.ஜி.ஆர். விருதை' வழங்கியதும் கலைஞர்தான். கடந்த ஆண்டு எனக்கு `பெரியார் விருது' வழங்கியதும் அவர்தான்.

    இப்படி என் நடிப்புலக வாழ்வில் கிடைத்த அத்தனை பெரிய விருதுகளும் கலைஞர் மூலம் கிடைத்திருப்பது எனக்கு காலம் கொடுத்த மிகப்பெரிய கொடை.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.
    பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.

    பல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்' படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    `பாரதி' டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, "சார்! பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்'' என்றார்.

    எப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே! எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, "நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே'' என்றேன்.

    நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார், ஞானராஜசேகரன்.

    கம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், "யார் இந்த இளைஞர்? காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே?'' என்றேன், ஆச்சரியமாய்!

    ஞானராஜசேகரனோ, "சார்! பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது'' என்றார். "எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்'' என்றேன்.

    ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்' என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ!

    இதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா' என்றே அழைப்பேன். நான் அவரிடம் "பெரியார்'' படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.

    "தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்'' என்று அவர் முன்வந்தார். "பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்'' என்றார்.

    ஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது' என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

    சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்' கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.

    சிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், "பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்'' என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)

    "பெரியார்'' படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

    காஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்' படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.

    அப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, "கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு' பார்த்துக்குவார்'' என்றார்கள்.

    எட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு' என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று

    ஆச்சரியப்பட்டேன்.அதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. "யார் அந்த அன்பு'' என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு!

    சமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது!

    இப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் "பெரியார்'' படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.

    பெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி' படத்தின் மூலம் ஒரு `மகாகவி'யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது.
    அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.

    இப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்' இணைத்துவிட்டது.

    இந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்' அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை' சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

    பெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில் 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.

    அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது "சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க!'' என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க' வார்த்தையை சொல்லிக் காட்டினார்.

    1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.

    தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் "சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க'' என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

    இதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

    கலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை'யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா?''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    "மகாநடிகன்'' படத்தில், பித்தலாட்டம் செய்யும் நடிகராக சத்யராஜ் நடித்தபோது, சினிமா வட்டாரத்திலேயே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. "இது வெறும் நடிப்புதான்'' என்று கூறிவிட்டு, துணிச்சலாக அந்தக் கேரக்டரில் நடித்தார், சத்யராஜ்.
    "மகாநடிகன்'' படத்தில், பித்தலாட்டம் செய்யும் நடிகராக சத்யராஜ் நடித்தபோது, சினிமா வட்டாரத்திலேயே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. "இது வெறும் நடிப்புதான்'' என்று கூறிவிட்டு, துணிச்சலாக அந்தக் கேரக்டரில் நடித்தார், சத்யராஜ்.

    "மகாநடிகன்'' படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "குரு தனபாலின் "பெரிய மனுஷன்'' படம் சரியாக ஓடாததால், என் நடிப்பு வாழ்க்கையில் மறுபடியும் சிறு தேக்க நிலை. இதை சரி செய்யக் கிடைத்தது டைரக்டர் சக்தி சிதம்பரத்தின் படங்கள். அவர் இயக்கிய "என்னம்மா கண்ணு'' படம் மூலம் மறுபடியும் `லொள்ளு' சமாச்சாரங்கள் தூவி விடப்பட்டன. ரசிகர்களும் அதை ரசிக்க, அது பெரிய வெற்றிப்படமானது. இந்தப் படத்தில் தேவயானி என் ஜோடியாக நடித்தார்.

    இதைத்தொடர்ந்து, சினிமா பின்னணியைக் கொண்ட "மகா நடிகன்'' என்ற கதையை உருவாக்கினார், சக்தி சிதம்பரம். ஒரு சாதாரண நடிகன் பல்வேறு தகிடு தத்தங்கள் மூலம் பெரிய நடிகனாகிற இந்தக் கதைக்கு, சினிமா வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பலாம் என்று தெரிந்தது. என்றாலும், அந்த கேரக்டர் மனிதாபிமானம் நிறைந்தது என்பதாக கதையில் முடிந்திருப்பதால், பிரச்சினை கிளம்பாது என்றும் நினைத்தோம்.

    படத்தை தயாரித்த முருகன், எனது டைரக்ஷனில் உருவான "வில்லாதி வில்லன்'' படத்திற்கு ஆர்ட் டைரக்டராக இருந்தவர். படம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே படத்தில் இடம் பெறும் காரசார வசனம் குறித்து அவருடன் பேசினேன்.

    "படத்தை இயக்கும் சக்தி சிதம்பரத்திடம் யாராவது கேட்டால், "நான் டைரக்டர் மட்டும்தான். வசனத்தை சத்யராஜ்தான் பேசினார்'' என்று என்னை கைகாட்டி விடுவார். என்னிடம் கேட்பவர்களிடம், "நான் என்ன செய்யட்டும்? டைரக்டர் சொல்கிறபடிதானே நடிகன் செய்ய முடியும்?'' என்று டைரக்டரை கைகாட்டிவிட்டு, நான் தப்பி விடுவேன்.

    கடைசியில் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்'' என்றேன். தயாரிப்பாளர் முருகனோ முகத்தில் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. "சார்! இந்தக் கதையின் பிற்பகுதியில் நாம் சொல்லப்போகும் மெசேஜ், முற்பகுதியில் ஏற்படும் அத்தனை சலசலப்புகளையும் சரி செய்துவிடும். அதையும் தாண்டி ஏதாவது பிரச்சினை என்றால் அதை நான் பார்த்துக்கொள்வேன்'' என்றார்.

    சொன்னதுபோலவே, படம் ரிலீசானபோது ஏற்பட்ட சலசலப்புகளுக்கு பயப்படாமல் படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார்.

    படத்தை நடிகர் பிரபு பார்த்து விட்டு, "தலைவா! இப்படியொரு படத்தில் நடிக்க உங்களால் மட்டுமே முடியும்'' என்றார்.

    படம் வெளிவந்தபோது என் நட்பு வட்டத்தில் கதை பற்றி கேட்கவே செய்தார்கள். `சினிமாவில் எத்தனையோ கேரக்டர்கள் வருகின்றன. இப்படத்தில் வருகிற நடிகரும் ஒரு கேரக்டர் அவ்வளவுதான்'' என்று அவர்களிடம் `என்னிலை' விளக்கம் அளித்தேன்!

    மகாநடிகன் படத்தைத் தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கிய "இங்கிலீஷ்காரன்'' படத்தில் நானும் என் மகன் சிபியும் நடித்தோம்.

    காமெடிக் கலக்கல் கதையில் பின்னப்பட்ட இந்தப் படத்தையும், ரசிகர்கள் வெற்றிபெறச் செய்தார்கள்.

    பத்துப்பதினைந்து வருஷங்களுக்கு முன்பே பெரியார் திடலில் வருஷா வருஷம் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருது கொடுத்து சிறப்பித்து வந்தார்கள். தமிழ் உணர்வுடன் கூடிய கலைஞர்கள் இந்த விழாக்களில் கவுரவிக்கப்பட்டார்கள். இப்படி எனக்கும் விருதுகள் வழங்கினார்கள்.

    நானும், தந்தை பெரியாரின் கொள்கைகளில் என்னை பிணைத்துக் கொண்டவன் என்ற முறையில், பெரியாரின் கொள்கைகள் மீதான என் ஈர்ப்பையும் இந்த மேடைகளில் வெளிப்படுத்தி வந்தேன்.

    இதனால் என் மீது அக்கறை கொண்டவர்கள் என்னிடம், "கடவுள் மறுப்பு என்பது உங்கள் கொள்கையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதை மேடை வரை ஏறி வெளிப்படுத்தணுமா?'' என்று கேட்டார்கள்.

    "மனதில் உள்ளதை வெளிப்படையாக வெளியில் சொல்வதில் என்ன தவறு?'' என்று அவர்களிடம் திருப்பிக் கேட்டேன்.

    "சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதால் உங்கள் மார்க்கெட் பாதிக்கப்படாதா?'' என்று அவர்கள் பக்க கவலையை சொன்னார்கள்.

    "நடிகவேள் எம்.ஆர்.ராதா குணசித்ரம், வில்லன் என்று எந்த வேடத்திலும் தன்னை புதிதாய் வெளிப்படுத்தியவர். "ரத்தக்கண்ணீர்'' படத்தில் ஹீரோவாக அவர் நடித்த நடிப்பு இன்று வரை பேசப்படுகிறதே! அப்படிப்பட்ட நடிகர் பெரியாரின் தொண்டராக மேடை தோறும் கடவுள் மறுப்பு கொள்கையை முழங்கினாரே! நாடக மேடையில் காட்சிக்கு காட்சி அதைத்தானே சொன்னார்! அதற்காக அவரை ரசிகர்கள் புறக்கணிக்கவா செய்தார்கள்? அவரது கொள்கையை விரும்பாதவர்கள் கூட, அவரது நடிப்புக்கு ரசிகர்களாகத்தானே இருந்தார்கள்'' என்று விளக்கம்

    அளித்தேன்."இந்த சமூகம் மீது எனக்கும் அக்கறை இருக்கிறது. ஒரு தொண்டை செய்வதன் மூலம் எனக்கு வருமான இழப்பு நேர்ந்தாலும் கவலைப்படாமல் தொண்டைத் தொடரவே செய்வேன்' என்று, தந்தை பெரியார் பொதுத் தொண்டுக்கு வந்த ஆரம்ப நாட்களிலேயே சொன்னார். அவர் வசதியாக வாழ்ந்தவர். தனது சொகுசான வாழ்க்கை, தனது மகிழ்ச்சி என்று மட்டுமே அவர் சுகபோகமாக வாழ்ந்திருக்க முடியும்.

    ஆனால் சமூக விழிப்புணர்வுக்காக தன்னை வருத்திக்கொண்டு மக்களின் அறியாமைக்காக வருந்தி இயக்கம் கண்டார். அவரது முயற்சிகளில்தான் சமூகம் தலைநிமிரத் தொடங்கியது. அது நல்லது என்பதை தெரிந்து கொண்ட பிறகே நானும் அவரது எண்ணங்களுடன் என்னைக் கலந்தேன். அதை மேடையில் வெளிப்படுத்துவதால் எனது மார்க்கெட்டே போனாலும் கவலைப்படுவதாக இல்லை'' என்றேன்.

    "மகாநடிகன்'' படம் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் பெரியார் திடலில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டேன். பெரியாரின் சிந்தனைகளுடன் ஒன்றிப்போனவன் என்ற முறையில் அந்த மேடையில், "ஒரு நடிகனாக என் லட்சியம் தந்தை பெரியாராக ஒரு படத்தில் நடிப்பதுதான். அப்படி பெரியார் வேடத்தில் நடிக்கும்போது, பணம் வாங்காமல் நடிப்பேன்'' என்றேன்.

    பெரியார் வேடம் எனக்கு பொருத்தமாக இருக்குமா என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. நடிகர் திலகம் சிவாஜியே நடிக்க ஆசைப்பட்ட வேடம். அதில் நான் நடிக்க ஆசைப்பட்டதுகூட பெரியாரின் சிந்தனைகள் என்னை முழு அளவில் ஆக்கிரமித்ததுதான் காரணமாக

    இருக்கும்.இப்படி நான் பெரியாராக நடிக்க ஆசைப்பட்டு ஒரு வருடம் ஆகியிருந்தது. "பெரியார் வேடத்தில் நடிக்க எண்ணிய ஆசை அவ்வளவுதானா?'' என்று எனக்குள் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஞானசேகரன் என்னை சந்தித்தார்.''

    சத்யராஜ் நடித்த "வள்ளல்'' படம் வெளிவருவதற்கு தடங்கல் ஏற்பட்டபோது, விஜயகாந்த் தலையிட்டு, படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி புரிந்தார்.
    சத்யராஜ் நடித்த "வள்ளல்'' படம் வெளிவருவதற்கு தடங்கல் ஏற்பட்டபோது, விஜயகாந்த் தலையிட்டு, படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி
    புரிந்தார்.சத்யராஜும், விஜயகாந்தும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். அப்போது ஏற்பட்ட நட்பு, பெரிய நடிகர்களான பிறகும் அன்று போலவே இன்றும் தொடருகிறது.

    விஜயகாந்துடன் உள்ள நட்பு குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "1977 பீரியடில், நடிப்பதற்காக நான் கோவையில் இருந்து சென்னைக்கு வந்தேன்.

    இதே நாட்களில்தான் விஜயகாந்தும் மதுரையில் இருந்து ஹீரோவாகும் கனவுடன், சென்னையில் அடியெடுத்து வைத்திருந்தார். சினிமாவில் வாய்ப்பு தேடி விட்டு தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள ஒரு மிலிட்டரி ஓட்டலில், சாப்பாட்டு நேரத்தில் இருவரும் சந்திப்போம்.

    இரண்டு பேருமே சினிமாவை குறி வைத்திருப்பவர்கள் என்பது தவிர, வேறெந்தவிதமான பரிச்சயமும் எங்களுக்குள் அப்போது இல்லை. ஆனாலும் ஓட்டலில் பார்க்கும்போது ஒருவருக்கொருவர் லேசாக சிரித்துக் கொள்வோம். அத்தோடு சரி. சாப்பிட்டு முடித்து விட்டு அவரவர் முயற்சியை தொடரப்போய் விடுவோம்.

    அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சினிமா சான்ஸ் தேட `பைக்'கில் சதா சுற்றிக்கொண்டு இருப்பேன். என் மாதிரியே பிரம்மச்சாரியான விஜயகாந்தும் ஒரு பைக் வைத்திருந்தார். அதுவும் சினிமா சான்சுக்காக சூடு குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தது!

    அப்போது சிவகுமார் ஹீரோவாக நடித்த "சாமந்திப்பூ'' என்ற படத்தில் எங்கள் இருவருக்கும் சின்ன வேடங்கள் கிடைத்தன. என்னிடம் பேசிய படக்குழு நிர்வாகி, "சின்ன வேஷம் என்பதால், `டிரஸ்' தரமாட்டோம். நீங்களே கொண்டு வந்து விடுங்கள்'' என்று கறாராக சொல்லிவிட்டார்.

    நடிக்க வந்து, இரண்டு வருஷம் ஆகிவிட்டது. சில படங்களில் நடித்தும் விட்டேன். இன்னும் கம்பெனி டிரெஸ் தரப்படாமல் சொந்த டிரெஸ்சில் நடிக்க வேண்டியதிருக்கிறதே என்று மனசுக்குள்ளாக வருந்தியபடியே ஒரு தோல் பையில் டிரஸ்சை எடுத்துக்கொண்டு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்தேன்.

    நான் ஸ்டூடியோவுக்கு போன நேரத்தில் விஜயகாந்த் நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர் நடித்து முடித்து புறப்பட்டபோதுதான் அவரும் சொந்த டிரஸ்சில் நடிக்க வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். புறப்படும்போது கொண்டு போயிருந்த தோல் பையில், நடிக்க பயன்படுத்திய சட்டையை மடித்து வைத்து விட்டுப் புறப்பட்டார்.

    அவர் போகும்போது, தோல் பையுடன் வந்திருந்த என்னைப் பார்த்தார். இருவரும் சிரித்துக் கொண்டோம். அந்த நேரத்திலும் எனக்குள்ளாக ஒரு ஆறுதல், விஜயகாந்த்தும் சொந்த டிரெஸ் அணிந்து நடித்தது!

    இரண்டு பேரும் நட்பு ரீதியாக பேச ஆரம்பித்தது, பழகியதுஎல்லாம் இப்படியான படப்பிடிப்புகளின் போதுதான். அவர் அவரது முயற்சிகளை கூறுவார். நான் எனது முயற்சிகளை பகிர்ந்து கொள்வேன். நாளடைவில் எங்கள் நட்பு வலுப்பட்டது. நான் அவரை `விஜி' என்பேன். அவர் என்னை `சத்யராஜ்' என்று அழைப்பார்.

    படங்களில் ஓரளவு நான் வளரத்தொடங்கி, "24 மணி நேரம்'' படத்தின் மூலம் ரசிகர்களிடம் நிலைபெற்றேன். அந்தப் படத்தில் நான் பேசிய, "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' வசனம் பிரபலமாகி, என்னை பட்டிதொட்டி வரை கொண்டு சென்றது.

    என் முகம் திரையில் தெரியத் தெரிய அதை ஒரு ரசிகனாக நானும் பார்த்து என் நிறைகுறையை ஆராய்ந்தேன். அப்போது குளோசப் காட்சிகளின்போது தூக்கலாக இருக்கும் என் பற்கள் எனக்கு குறையாகப் பட்டது. இப்படி பல் தூக்கல் தெரியாமல் இருக்க, தாடை பகுதியில் ஏதாவது ஆபரேஷன் செய்து கொள்ள முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

    நடிகர் சிவகுமார் அண்ணன் ஓவியர் அல்லவா? அவரிடம் எனது இந்த யோசனையை சொன்னேன். அவரோ, "நானே ஒரு ஓவியன். என்னிடமே படம் வரைந்து காட்டுகிறாயா?'' என்று கேட்டுவிட்டார். ஆனாலும் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.

    அப்போது எனக்கு திருமணமாகி விட்டதால், மனைவியிடம் மட்டும் இந்த ஆபரேஷன் விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். ஆபரேஷனுக்குப் பிறகு முகம் ஏடாகூடம் ஆகிவிடுமோ என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தாததால், மனைவி தரப்பில் எதிர்ப்பில்லை.

    பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனிடம் இது விஷயமாய் பேசியபோது, தாடையின் முன்பக்கமாக சிலிக்கானை ஆபரேஷன் மூலம் பொருத்தி விட்டால் முகத்தோற்றம் இன்னும் அம்சமாக அமைய வாய்ப்பிருக்கிறது'' என்றார். பிளாஸ்டிக் சர்ஜரியில் அப்போதே அவர் புகழ் பெற்றிருந்தார். அவர் சொன்னதும் ஆபரேஷனுக்கு தயாரானேன். பட சம்பந்தப்பட்ட யாருக்கும் சொல்லவில்லை. குடும்பத்தில் கூட என் மனைவிக்கு மட்டுமே தெரியும். ஆபரேஷனில் சுண்டு விரல் அளவே உள்ள சிலிக்கானை என் முன்புற தாடையின் அடிப்பக்கமாக ஆபரேஷன் மூலம் பொருத்தினார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.

    ஆபரேஷன் முடிந்து தாடையில் கட்டுப்போட்டார். அப்போது அவர் என்னிடம் "ஒரு வாரத்துக்கு முகம் வீங்கி அகோரமாகத் தெரியும். பயந்துவிடவேண்டாம். ஒரு வாரத்துக்குப் பிறகு வீக்கம் வடிந்து முகம் இயல்பான நிலைக்கு வந்துவிடும்'' என்றார்.

    முகம் சரியான பிறகும் 3 மாதம் படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    டாக்டர் சொன்னது போலவே ஆபரேஷனுக்குப்பின் கட்டு அவிழ்த்தபோது முகம் பூதாகாரமாகத் தெரிந்தது. டாக்டர் சொன்னதை நம்பினபடியால் அதிர்ச்சி அடையாமல் வீக்கம் வடியும்வரை காத்திருந்தேன். வீக்கம் வடிந்து முகம் இயல்பானபோது எனக்கே ஆச்சரியம். முகத்தில் மெருகு கூடியிருந்தது. கண்ணாடியில் பார்த்தபோது `பல் துருத்தல்' தெரியாத நிலை. அதாவது என் முகத்தைப் பார்த்தபோது எனக்குள்ளே ஒரு சந்தோஷ நிலை!

    அப்போது "சந்தோஷக் கனவுகள்'' என்ற படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நான் வில்லன். படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடந்து கொண்டிருந்தது.

    என் சம்பந்தப்பட்ட காட்சிக்காக நான் நாகர்கோவில் படப்பிடிப்புக்குப் போனபோது, விஜயகாந்த் என்னை உன்னிப்பாக கவனித்திருக்கிறார். அதோடு நிற்காமல், "சத்யராஜிடம் ஏதோ ஒரு புது பெர்சனாலிடி கூடித் தெரியுதே'' என்று படப்பிடிப்பில் இருந்த நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். சண்டைக்காட்சிக்கு முன்னதாக என்னை சந்தித்த நேரத்தில், என்னிடமும் இதைக்கேட்டு விட்டார்.

    நண்பர் என்ற முறையில் நான் அவரிடம் உண்மையைச் சொல்லி விட்டேன். சண்டைக் காட்சியின்போது தாடையில் எதிர்பாராமல் அடிபட்டால் ஆபரேஷன் முயற்சி வீணாகிவிடும் என்பதையும் அப்போது சொன்னேன். டாக்டர் என்னிடம் மூன்று மாதத்துக்கு பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என சொல்லியும், நடிப்பு ஆர்வத்தில் இரண்டு மாதத்திலேயே படப்பிடிப்புக்கு வந்துவிட்ட தகவலையும் காதோடு போட்டு

    வைத்தேன்.அந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் என் விஷயம் சொல்லிய விஜயகாந்த், சண்டைக்காட்சியில் ரொம்பவே கவனமாக நடந்து கொண்டார். இந்த இடத்தில் விஜயகாந்தின் சண்டை போடும் ஆற்றல் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் ஒரு பாதுகாப்பான பைட்டர் ஹீரோ. அவர் அடிப்பதாகவோ குத்துவதாகவோ நடிக்கும் காட்சிகளில் ஒரு அடி கூட எதிரியின் மீது படாது. அத்தனை லாவகமாக செயல்படுவார். அன்றைய காட்சியிலும் அப்படியே நடித்து என் தாடையை காப்பாற்றினார்!

    இதற்குப் பிறகு நான் "சாவி'' படம் மூலம் ஹீரோவானேன். படம் சுமாராக ஓடியது. அடுத்து ஹீரோவாக நடித்த 2 படங்களும் கூட சரிவர போகவில்லை.

    அப்போது விஜயகாந்த் என்னை சந்திக்க முடியாமல் இருந்த போதும், என் மானேஜர் ராமநாதனை கூப்பிட்டு பேசியிருக்கிறார்.

    "பி அண்ட் சி'' ஏரியா ரசிகர்களையும் கவரக்கூடிய படத்தை தேர்வு செய்து நடிக்கச் சொல்லுங்கள். `பி அண்டு சி' ரசிகர்களிடம் பதிந்து விட்டால் சினிமாவில் நிரந்தர ஹீரோவாக நீடிக்க முடியும். அதோடு ரசிகர் மன்றங்களையும் `டெவலப்' பண்ணச் சொல்லுங்கள்'' என்றும் கூறியிருக்கிறார்.

    அவர் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. "ஈட்டி'' என்ற படத்தில் அவர் ஹீரோ. நான் வில்லன். சென்னை அடையார் பார்க் ஓட்டலில் படப்பிடிப்பு இரவு 2 மணி வரை நடந்து கொண்டிருந்தது. அப்போது விஜயகாந்த் டைரக்டரிடம் போய், "சீக்கிரம் விட்டுடுவீங்களா? நேரம் ஆகுமா?'' என்று கேட்டார்.

    இதை பார்க்கும் யாருக்கும் என்ன தோன்றும்? `சரி! தூக்கம் வந்து விட்டது போலிருக்கிறது. ஓய்வெடுக்க விரும்பி இப்படி கேட்கிறார்' என்றுதானே தோன்றும்! நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர் அதற்குப்பிறகு நடக்கும் `ஊமை விழிகள்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதற்காக அப்படி கேட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். இப்படி தூங்கும் நேரத்தைக்கூட, நடிப்பு நேரமாக மாற்றிக் கொண்டதால்தான் சினிமாவில் அவருக்கென்று ஒரு சிம்மாசனம் கிடைத்திருக்கிறது.

    ராஜ்கபூர் டைரக்ஷனில் நான் நடித்த "வள்ளல்'' படத்தை ரிலீசுக்கு தயார் நிலையில் என் மனைவியுடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் பார்த்திருக்கிறார். படம் பிரேமலதாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய் தனது கணவரிடமும் சொல்லியிருக்கிறார்.

    அந்தப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக திரைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டபோது, விஜயகாந்த் அவராகவே எனக்கு உதவ முன்வந்தார். என்னிடம் விஷயத்தை கேட்டுத் தெரிந்து கொண்டவர், "ஒரு நல்ல படம் பணப் பற்றாக்குறையால் திரைக்கு வராமல் இருந்துவிடக்கூடாது'' என்றதோடு படம் வெளிவர உதவவும் செய்தார்.

    நான் படப்பிடிப்பு இல்லாத நாளென்றால் காலை 8 மணி வரை கூட தூங்குவதுண்டு. ஆனால் பட ரிலீசுக்கு முந்தின தினத்தில் காலை 6 மணிக்கே எனக்கு போன் செய்தவர், "வாங்க! லேபுக்குப் போய் படம் ரிலீசுக்கான ஏற்பாடுகளை செய்வோம்'' என்று சொன்னார். எனக்கு முன்பாக லேபுக்கும் வந்துவிட்டார். அவரது கணிசமான உதவியால்தான் "வள்ளல்'' படம் வெளிவந்தது. படமும் விஜயகாந்த் கணித்தது போலவே, வெற்றி பெற்றது.

    என் மகன் சிபி நடிக்க வந்தபோது, `ஆக்ஷன் படமாக தேர்ந்தெடுத்து நடிக்க வையுங்கள். சீக்கிரமே ரசிகர்கள் மத்தியில் பாப்புலாரிட்டி கிடைக்கும்'' என்றார். சிபியை எப்போது பார்த்தாலும் அப்படியொரு பாசம்! அதோடு அக்கறையாக அவன் வளர்ச்சிக்கு ஆலோசனையும் சொல்வார்.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    "வில்லாதி வில்லன்'' படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்தார்
    "வில்லாதி வில்லன்'' படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில்

    நடித்தார்.நடிக்க வந்த புதிதில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், டைரக்டராக ஆக விரும்பினார், சத்யராஜ். அதற்காக ஒரு கதையையும் தயார் செய்தார். அந்தக் கதை தெலுங்கில் படமாகி வெற்றியும் பெற்றது.

    இதற்குள் சத்யராஜ் நடிப்பில் வெற்றி பெற்று பிசியாகிவிட்டதால், டைரக்ஷன் ஆசையை தள்ளி வைத்தார்.

    நடிப்பில் நூறு படங்களை தாண்டிவிட்ட பின்னர், மீண்டும் டைரக்ஷன் ஆசை துளிர்க்க, துணிச்சலாக அவர் இயக்க முன்வந்த படமே "வில்லாதி வில்லன்.''

    டைரக்ஷன் அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "அமைதிப்படை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு பலரும் என்னிடம் "இனிமேல் நீங்க என்ன நடிச்சிடப் போறீங்க?'' என்று கேட்டார்கள்.

    இந்த நேரத்தில் `நாமே ஒரு படத்தை டைரக்ட் செய்யலாமே' என்று தோன்றியது. அதோடு எனது 125-வது படமாக அமைய இருந்ததால் என் எண்ணம் உறுதிப்பட்டது. `படம் பேசப்பட வேண்டும்; என் நடிப்புக்காக மட்டுமின்றி, டைரக்ஷனுக்காகவும் பேசப்பட வேண்டும்' என்று விரும்பினேன். அப்படியொரு கதையையும் தயார் செய்தேன்.

    ஒரு வக்கீல். அவருக்கு கால் நடக்க வராது. வீல் சேரில் தான் வாழ்க்கைப் பயணம். ஒரு வில்லன். ஒரு கண் பார்வை கிடையாது. அடுத்தது இளைஞன். பெரியார், அம்பேத்கார் கொள்கைகளில் ஊறித் திளைத்தவன். இந்த இளைஞன் அம்பேத்கார் மன்ற தலைவனாகவும் இருப்பான். இப்படி மாறுபட்ட 3 கேரக்டர்களின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கினேன்.

    படத்தில் பம்பாய் மாமி கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, `சட்'டென நினைவுக்கு வந்தவர், ராதிகா. அவருக்கு போன் போட்டு பேசினேன். "நான் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்கிறீங்க. கதை கேட்க எப்ப வர்றீங்க?'' என்று கேட்டேன். "இப்பவே வர்றேன்'' என்று புறப்பட்டு வந்தார்.

    நான், "கதை சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தபோது, "நீங்க என்ன கதை சொல்றது? நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நான் நடிக்கிறேன். போதுமா?'' என்று சொல்லி முதல் ஆனந்த அதிர்ச்சி கொடுத்துவிட்டார், ராதிகா.

    கவிஞர் வைரமுத்துவிடம் விஷயம் சொன்னபோது, வீட்டுக்கே வந்தார். நான் முதன் முதலில் டைரக்ட் செய்யும் படம் என்பதால் பெரியாரும், எம்.ஜி.ஆரும் வருகிற மாதிரி ஒரு பாட்டு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். வைரமுத்து கொஞ்சமும் தயங்கவில்லை. `புறப்படு தமிழா புறப்படு' என்று எழுதிய பாட்டில் `சொல்லித் தருவேன் தந்தை பெரியார் போல்', அள்ளித்தருவேன் வள்ளல் எம்.ஜி.ஆர். போல்' என்று பொருத்தமாக இணைத்து விட்டார்.

    படத்தின் `கிளாமர் நாயகி'யாக நக்மாவை ஒப்பந்தம் செய்தேன். அப்போது கிளாமரில் நக்மா கலக்கிய படம் இதுதான்.

    இந்தப் படத்தின் சண்டைக் காட்சியிலும் இதுவரை யாரும் செய்திராத புதுமையை புகுத்த விரும்பினேன்.

    சினிமாவில் கம்புச் சண்டை, கத்திச்சண்டை என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். சண்டைக் காட்சிகளில் அவர் மாதிரி லாவகம் யாருக்குமே வராது. இந்த கத்தி, கம்பு என 2 வகை சண்டைகளையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பினேன். அதாவது ஒரு கையில் கம்பு, அடுத்த கையில் கத்தி! கம்புச் சண்டையின்போது, சிலம்ப வீச்சின் வேகம் இருக்க வேண்டும்; அதே நேரம் அடுத்த கையில் உள்ள கத்தியைக் கொண்டும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடவேண்டும்.

    படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரிடம் எனது இந்த `கம்பு - கத்தி' சண்டை பற்றி விவரித்து, "முடியுமா?'' என்று கேட்டேன். நான் சொன்ன விஷயம் அத்தனை சாத்தியமில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் முடியாததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து விட்டால் வெற்றியே கிடைக்கும்.

    ராம்போ ராஜ்குமார் ஒருகணம் யோசித்தார். என் கையில் சிலம்பம் வீசும்போது தப்பாத கால் வரிசை, அடுத்த கையில் கத்தி சுழற்றும்போது முன்னேறிப் போவது போன்ற வேகம் இந்த இரண்டும் ஒரே சண்டைக் காட்சியில் சாத்தியமா என்ற யோசனை அவர் மனதில் ஓடியிருக்கிறது. என் ஆர்வத்தில் இருந்த தீவிரம் அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும். "சரி சார்! செய்யலாம்'' என்று ஒப்புக்கொண்டார்.

    இதற்குப்பிறகு நாங்கள் எடுத்த முயற்சிகள் வேகமானவை. எம்.ஜி.ஆர். படங்களில் கத்திச்சண்டை போடும் படங்கள், சிலம்பம் வீசும் படங்களை தேடிப்பிடித்து பார்த்தோம். 6 மாத இடைவிடாப் பயிற்சியில் இரண்டு கைகளிலும் இரண்டு வித்தைகள் பக்குவப்பட்டன.

    இந்த சண்டைக் காட்சி படமானபோது, எங்கள் ïனிட்டில் உள்ளவர்கள் கூட ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

    டைரக்ஷனோடு படத்துக்கு கதை-வசனமும் நானே எழுதினேன். படத்தை என் மானேஜர் ராமநாதன் தயாரித்தார்.

    டைரக்டர் பொறுப்பு என்பது, எத்தனை முக்கியமானது என்பதை இந்தப்படம் என்னை உணரவைத்தது. படத்தின் ஒரு காட்சி பற்றிய சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஹேர் டிரஸ்ஸர் வருவார். `சார்' தில்லாலே பாடல் சீனுக்கு நக்மாவுக்கு கொண்டை போடலாமா? ஜடை பின்னலாமா? அல்லது முடியை அவிழ்த்து விடலாமா?' என்று கேட்பார். அவருக்கு பதில் சொல்லி அனுப்புவதற்குள் ஆர்ட் டைரக்டர் வந்து, "சார் நாளைக்கு எடுக்கிற சீனில் ஸ்கிரீன் போடவா?'' என்று கேட்டு வந்து நிற்பார். இதற்குள் உதவி இயக்குனர் வந்து, "சார்! 3 மணிக்கு விட்டுட முடியுமான்னு அந்த ஆர்ட்டிஸ்ட் கேட்கிறார்'' என்று சொல்லி பதில் எதிர்பார்ப்பார்.

    இதற்கிடையே புரொடக்ஷனில் இருந்து, "சார்! டப்பிங் தியேட்டர் எப்ப புக் பண்றது?'' என்று கேட்டுக்கொண்டு வந்து நிற்பார்கள். அத்தனை பேருக்கும் பதில் சொல்லி முடிப்பதற்குள், "சார்! நான் டிஸ்ட்ரிபிïட்டர் பேசறேன். திருச்சிக்கு இந்த விலைக்கு படத்தை கொடுக்கலாமா?'' என்று அடுத்த பதிலுக்கான கேள்வி தயாராக இருக்கும்.

    அத்தனை பேருக்கும் அவர்கள் தேவைக்கான பதில்களை சொல்லும் அதே நேரத்தில், படம் தொடர்பான பணிகளும் நடந்தாக வேண்டும். ஒரு டைரக்டரின் பொறுப்பு என்பது எந்த அளவுக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லாத அளவுக்கு பொறுப்பானது என்பதற்காக இதைச் சொல்ல

    வந்தேன்.டைரக்ஷனோடு நானே மூன்று வேடத்திலும் என்னை வெளிப்படுத்தியாகவேண்டும். என்னுடன் நடிப்பவர்கள் எப்படி நடித்தால் காட்சிக்கு கனம் சேர்க்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அதுவும் நடந்தது.

    படத்துக்கு வித்யா சாகர் இசை அமைத்தார். `பம்பாய் மாமி', `தில்லாலங்கடி தில்லாலே' பாடல்கள் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாயின.

    நண்பர் மணிவண்ணனுக்கு இந்த நேரத்தில் ஒரு சின்ன ஆபரேஷன் நடந்தது. படத்தில் அவரும் நடிக்கவிருந்தார். எனவே, அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை மட்டும் 2 மாதம் `வெயிட்' பண்ணி எடுத்தேன்.

    முழுப் படத்தையும் எடுத்து முடிக்க 110 நாட்கள் ஆனது. `பில்லா' படத்தை இயக்கிய `பில்லா கிருஷ்ணமூர்த்தி' டைரக்ஷன் விஷயத்தில் எனக்கு பயனுள்ள பல ஆலோசனைகள் கூறினார். இது விஷயத்தில் அவர் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர் புரொடக்ஷன் மானேஜராக இருந்து இயக்குனர் ஆனவர் என்பதால், தயாரிப்பில் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்பட்டன.

    படத்துக்கு மொத்தம் 110 பிரிண்டுகள் போட்டோம். ஒரு படத்துக்கு அதுவரை இல்லாமல் அதிக பிரிண்டுகள் போட்ட முதல் படம் இதுதான். அதுமாதிரி சென்னை அண்ணா சாலையில் 2 தியேட்டர்களில் அடுத்தடுத்து ரிலீசான முதல் படமும் இதுதான்.

    படம் நன்றாக ஓடியதுடன், மலையாளத்தில் `டப்' செய்யப்பட்டு, பெரிய வெற்றி பெற்றது. அதோடு நான் எதிர்பார்த்த மாதிரியே ஒரே நேரத்தில் நான் போட்ட கத்தி - கம்பு சண்டைக்கும், பெரிய வரவேற்பு கிடைத்தது.

    மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ஒரு மலையாளப் படத்தின் ஒரு காட்சியை கேரள பார்டரில் உள்ள ஒரு `டூரிங்' தியேட்டரில் எடுத்திருக்கிறார்கள். அந்த தியேட்டரில் ஹீரோ படம் பார்க்கிற மாதிரி காட்சி. இந்த படப்பிடிப்புக்கு மோகன்லால் வந்த நேரத்தில், நான் நடித்த `வில்லாதி வில்லன்' படம் அங்கு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அதுவும் ஒரு கையில் கத்தியும் மறு கையில் கம்புமாக நான் வில்லன்களுடன் மோதுகிற காட்சி அந்த நேரம் திரையில் ஓட, மோகன்லால் அதை பிரமிப்பாக பார்த்திருக்கிறார்.

    உடனே தனது படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம், "நம்ம படத்தில் இப்படி ஒரு `பைட்' ரெடி பண்ண முடியுமா?'' என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு மாஸ்டர் அவரிடம், "இது மாதிரி ஒரிஜினலாக எடுக்கணும்னா குறைஞ்சது 6 மாசமாவது பயிற்சி பெறவேண்டிவரும். அவசரமா எடுத்தே ஆகணும்னு நினைத்து ஏதாவது `டிரிக்ஸ்' பண்ணினா, தெரிஞ்சுப்போயிடும்'' என்று கூறியிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டாரையே `ஆசைப்பட வைத்த' சண்டைக் காட்சியை படத்திற்கு தந்த வகையில், ஒரு டைரக்டராகவும் எனக்கு பெருமை.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    "தாய் மாமன்'' படத்தில், அரசியல்வாதிகளை சகட்டு மேனிக்கு தாக்கி வசனம் பேசினார் சத்யராஜ். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
    "தாய் மாமன்'' படத்தில், அரசியல்வாதிகளை சகட்டு மேனிக்கு தாக்கி வசனம் பேசினார் சத்யராஜ். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குருதனபால் டைரக்ஷனில் உருவான "தாய்மாமன்'' படத்தில், படம் முழுவதும் கறுப்புத்துண்டு போட்டு நடித்தார், சத்யராஜ்.

    சத்யராஜின் ஜோடியாக நடிகை மீனா நடித்த முதல் படம் இதுதான். இந்த வகையில் சத்யராஜின் உயரமான கதாநாயகிகள் பட்டியலில் மீனாவும் இடம் பெற்றார்.

    இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்.பாஸ்கர் "தீர்ப்புகள் திருத்தப்படலாம்'' என்ற படத்தை எடுத்தபோது சிவகுமார் நாயகன். நான் வில்லன். இந்தப் படத்தில் குழந்தையாக நடித்தவர் மீனா.

    கால ஓட்டத்தில் "தாய்மாமன்'' படத்தில் மீனா எனக்கு ஜோடியாகி விட்டார்.

    இந்தப்படத்தை இயக்கிய குருதனபால் என் பாணியில் தயார் செய்த இந்தக் கதையும் ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பை பெற்று, படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது. அமைதிப்படையில் நானும் மணிவண்ணனும் காமெடியில் கலக்கியது போல, இந்தப் படத்தில் என்னுடன் காமெடிக்கு கைகோர்த்தவர் கவுண்டமணி அண்ணன்.

    படத்தை முடிக்கும்போது அதுவரை யாரும் செய்திராத ஒரு புரட்சியையும் டைரக்டர் செய்திருந்தார். எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடலான `உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்'' என்ற பாடலில் வரும் `மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்குமாலைகள் விழவேண்டும்' என்ற வரிகளுடன் படத்தை முடித்தார். இது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

    படம் வெளிவந்தபோது பார்த்த ஒரு பிரபல ஹீரோ எனக்கு போன் செய்து, "என்ன இப்படி பண்ணிட்டீங்க?'' என்று கேட்டார். படத்தில் நான் பேசிய அரசியல் தொடர்பான வசனங்கள் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

    இப்படி படத்தில் காரசாரமான வசனங்கள் இருப்பது ரஜினி சாருக்கு தெரியவர, ஒரு மாலை நேரம் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். நான் உங்க `தாய்மாமன்' படம் பார்க்கணுமே என்றார்.

    ஒரு படம் பேசப்படுகிறது என்றால், அந்தப் படத்தை பார்க்க ரஜினி சார் விரும்புவார். `அமைதிப்படை' படத்தில் நான் வில்லனாகவும் நடித்தது தெரியவந்ததும் இதே மாதிரி என்னிடம் கேட்டுக்கொண்டு அந்தப் படத்தை பார்த்தார். படம் முடிந்ததும், "இப்ப எனக்கே மறுபடியும் வில்லனாக நடிக்கும் ஆசை வந்திருக்கு'' என்று பாராட்டினார்.

    இப்போது `தாய்மாமன்' படம் பற்றி கேள்விப்பட்டு பார்க்க விரும்ப, உடனடியாக பிலிம் சேம்பர் திரையரங்கில் ஏற்பாடு செய்தேன்.

    படம் முடிந்ததும் என் கைகளை பற்றிக் கொண்டவர், "ரொம்ப ஓவர் தைரியம் உங்களுக்கு! இந்த மாதிரி வசனங்களை பேசும்போது பயம் ஏற்படவில்லையா?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "நான் ஏன் சார் பயப்படணும்? நான் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இருந்தால் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் நான் அவர்களை தாக்கியதாக எண்ணிக் கொள்வார்கள். நான்தான் எந்தக் கட்சியிலும் இல்லையே! எனவே படத்தில் நான் பேசிய வசனங்களை கதையோடு ஒட்டிய விஷயங்களாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்'' என்றேன்.

    அப்போதும் அவருக்கு மனது கேட்கவில்லை. என் நடிப்பு வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமோ என்று கவலை தெரிவித்தார். இப்போது நான் தெளிவாக, "நான் பொதுவானவன். போதுமானவன் என்றேன். கட்சி எதையும் சாராமல் பொதுவாக நான் பேசிய இந்த வசனங்கள் என் நடிப்பு வாழ்க்கையை பாதித்தால் அதற்காக எனக்கு கவலையில்லை. இதுவரை நடித்து சம்பாதித்தது போதும் என்ற மன நிறைவுடன் இருந்து விடுவேன்'' என்றேன்.

    ரஜினி சார் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் கைகுலுக்கி, தோளில் தட்டிக்கொடுத்து விட்டு சென்றார். அவரைப் பொறுத்தவரையில் நண்பர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புபவர். நான் "ஓஷோ'' புத்தகங்களை விரும்பி படிப்பதை தெரிந்து கொண்டவர் வீட்டுக்கு வரவழைத்து "ஓஷோ'' தத்துவங்களுடன் கூடிய வீடியோ கேசட்டை கொடுத்தார். அதோடு `லைனிங் வித் எ ஹிமாலயா மாஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தையும் தந்து அனுப்பினார்.

    நாலே நாளில் எனக்கு போன் செய்தவர், "புத்தகம் படித்தீர்களா? எப்படி இருந்தது?'' என்று கேட்டார்.

    நமக்குத்தான் இங்கிலீஷ் தட்டுத்தடுமாறுமே! மெதுவாக நிதானமாக படித்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதனால் அவரிடம் "சார்! இங்கிலீஷ் புத்தகம்னா கொஞ்சம் டைம் எடுத்தே படிக்கணும். அதனால ஒரு மூணு மாசமாவது கொடுங்க'' என்றேன். எதிர்முனையில் ரஜினி சார் சிரித்தது கேட்டது.

    இந்தப் படத்தை பார்க்க வைகோவும் விரும்பினார். குட்லக் தியேட்டரில் படம் பார்க்க வந்த அவரை வரவேற்க தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். படம் தொடங்கும் நேரம் வரை அவர் வரவில்லை. அப்புறம் விசாரித்தபோதுதான், `வைகோ வந்து அரை மணி நேரம் ஆயிற்று' என்றார்கள். வழக்கமாக வேட்டி - சட்டை - கறுப்புத்துண்டு சகிதம் வருவார் என்று எதிர்பார்த்து நான் நிற்க, அவரோ சாம்பல் கலர் சபாரி உடையில் வந்திருக்கிறார். என்னைக் கடந்துதான் தியேட்டருக்குள் போயிருக்கிறார். நான் கவனிக்கவில்லை.

    அவரை சந்தித்து நான் வருத்தம் தெரிவித்தபோது, "நானும் உங்களை பார்க்க முடியாததால்தான் தியேட்டரின் முதல் மாடிக்கு வந்துவிட்டேன்'' என்று சிரித்தார். படத்தைப் பார்த்துவிட்டு அவர் ரொம்பவும் பாராட்டியது தனிக்கதை.

    டைரக்டர் குருதனபாலின் அடுத்த படமான "மாமன் மகள்'' படத்திலும் மீனாவே என் ஜோடியாக நடித்தார். இந்தப் படமும் வெற்றி பெற்றது. இதே டைரக்டர் பின்னாளில் தயாரிப்பாளராகி என்னை இயக்கிய `பெரிய மனுஷன்' படம் பெரிதாக ஓடவில்லை. அதுவும் `லொள்ளு ஜொள்ளு' படம்தான். ஆனால் `ஜொள்ளு' அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் எண்ணினார்களோ என்னவோ!''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    சத்யராஜ் கதாநாயகனாக நடித்த "வால்டர் வெற்றிவேல்'', மகத்தான வெற்றி பெற்றதால், அதன்பின் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். அதன் காரணமாக, மணிவண்ணனின் "அமைதிப்படை'' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தார்.
    சத்யராஜ் கதாநாயகனாக நடித்த "வால்டர் வெற்றிவேல்'', மகத்தான வெற்றி பெற்றதால், அதன்பின் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். அதன் காரணமாக, மணிவண்ணனின் "அமைதிப்படை'' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தார்.

    கதாநாயகனாக நடிப்பதற்கு முன் வில்லன் வேடங்களில் நடித்து `வில்ல நடிப்பில்' முத்திரை பதித்தவர் சத்யராஜ். பின்னாளில் ஹீரோவான பிறகு வில்லன் நடிப்பைத் தொடரவில்லை. முன்னணி ஹீரோவாகி விட்ட நிலையில், ஹீரோ - வில்லன் என 2 வேடங்களில் சத்யராஜ் நடிக்கும் விதத்தில், ஒரு கதையை டைரக்டர் மணிவண்ணன் தயார் செய்தார்.

    ஆனால், படத்தில் வில்லன் வேடத்திலும் நடிக்க வேண்டும் என்று மணிவண்ணன் கேட்டபோது, இந்தப் படமே வேண்டாம் என்று கூறிவிட்டார், சத்யராஜ்.

    இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

    "வால்டர் வெற்றிவேல்'' படத்துக்குப் பிறகு நான் ரொம்பவே ரசித்து செய்த படம் `ஏர்போர்ட்.' மலையாளப்பட உலகில் பிரபல இயக்குனர் ஜோஷி டைரக்ட் செய்தார்.

    இந்தப் படத்தின் கதையை டைரக்டர் சொல்லும்போதே மிரட்டலாக இருந்தது. அந்த அளவுக்கு அரசியல் பின்னணியிலான கிரைம் சப்ஜெக்ட். ஆனால் படத்தின் தயாரிப்பு 3 வருஷமாக நீடித்ததில் படம் வெளிவந்தபோது எதிர்பார்த்த வெற்றியை எட்டமுடியவில்லை.

    எந்தத் துறையிலுமே வெற்றி - தோல்வி சகஜம். சினிமாத் துறையிலும் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியது. எனது படங்கள் ஏதாவது ஓடவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். ரசிகர்கள் எதிர்பார்த்த ஏதோ ஒன்றை நாம் கொடுக்காமல் இருக்கிறோம். அதனால் படம் போகவில்லை என்று எனக்கு நானே சமாதானமாகி விடுவேன்.

    ஆனால் `ஏர்போர்ட்' விஷயத்தில், படத்தின் ரிசல்ட் சரியாக அமையாததில் வருத்தமாகி விட்டது. எனது படம் ஓடவில்லை என்பதற்காக நான் வருத்தப்பட்ட ஒரே படம் "ஏர்போர்ட்''டாகத்தான் இருக்கும். ஒரு வெற்றிப் படத்துக்குத் தேவையான `திரில்லர்' காட்சிகள், ரசிகர்கள் விருப்பத்திற்குரிய இயற்கை சூழலுடனான காட்சிப் பின்னணி என்று `ஏர்போர்ட்' அமைந்து ரொம்பவே எதிர்பார்க்க வைத்தது என்னை வருத்தப்படுத்தியிருக்கலாம். என்றாலும் படம் 4 வாரம் ஓடவே செய்தது.

    இந்தப் படத்தில் என் நடிப்பை விமர்சித்த ஒரு வார பத்திரிகை "சத்யராஜ் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையானவர்'' என்று பாராட்டியிருந்தது. இதே பத்திரிகையின் மறுவாரத்தில் ஒரு ரசிகர் அந்த விமர்சனத்துக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். அந்த ரசிகர் யாரென்று பார்த்தால் `நடிகர் கார்த்திக்' என்று இருந்தது.

    எனக்கு `திக்' என்றாகிவிட்டது. என் மீது எத்தனை அன்பு இருந்தால் பத்திரிகையில் ஒரு வாசகராக என்னை பாராட்ட முன்வருவார்? அவர் ஹீரோவாக நடித்த பல படங்களில், நான் `எஸ் பாஸ்' என்று சொல்லும் சின்ன கேரக்டரில் கூட வந்து போயிருக்கிறேன். அப்போது காட்டிய அந்த அன்பைத்தான் இப்போதும் அவரிடம் காண முடிகிறது. படத்தில் காமெடி காட்சிகள் என்றால் அவரும் என் மாதிரியே சிரித்து விடுவார். இதனால் பல காட்சிகளை திரும்ப எடுக்க வேண்டி வரும்.

    கார்த்திக்கின் அம்மாவுக்கு என் மீது ரொம்பவே பாசம். கொஞ்சம் முக ஜாடையில் நான் கார்த்திக்கின் அப்பா (நடிகர் முத்துராமன்) சாயலில் இருப்பதாக சொல்வார்கள். கார்த்திக் என்னைப் பார்க்கும்போதெல்லாம் "உங்களை வைத்து நான் ஒரு படத்தை டைரக்ட் செய்யவேண்டும். ஆனால் அந்தப் படத்தில் நான் நடிக்க மாட்டேன்'' என்று சொல்வார்.

    கார்த்திக் நடித்த "கிழக்கு வாசல்'' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தபோது நான், விஜயகாந்த், பிரபு நடித்த படங்களின் படப்பிடிப்பும் சுற்று வட்டாரத்தில் நடந்தன.

    படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைவருமே பொள்ளாச்சியில் உள்ள சக்திமணி ஓட்டலில் தங்கினோம். படப்பிடிப்பு முடிந்து இரவு ஓட்டல் அறைக்கு வந்ததும் நான், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என எல்லாருமே ஓட்டலின் மொட்டை மாடிக்கு போய் பொதுவான விஷயங்கள் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருப்போம்.

    நடு ராத்திரி வரை இப்படி பேசிக் கொண்டிருந்தாலும் காலையில் படப்பிடிப்புக்கு போக யார் முதலில் தயாராகிறார் என்பதில் போட்டியே வரும். `ஹீரோ' என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு நண்பர்களாக நாங்கள் பேசி மகிழ்ந்த அந்த நாட்கள் எப்போதுமே மறக்க

    "ஏப்போர்ட்''டுக்குப் பிறகு நடிக்க ஒப்புக்கொண்ட படம் மணிவண்ணனின் "அமைதிப்படை.'' ஏற்கனவே "கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தை சொந்தமாக எடுத்து இழப்பை சந்தித்தவர் என்பதால், "இந்தத்தடவை கவனமாக இருந்து ஜெயிக்கப் பார்ப்போம்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதில் உற்சாகமான மணிவண்ணன், "தலைவரே! படத்தில் 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோ வில்லன். இரண்டு வேடத்திலும் நீங்களே நடிக்கிறீங்க'' என்றார்.

    இரண்டில் ஒரு கேரக்டர் வில்லன் என்றதும், எனக்கு உற்சாகம் போய்விட்டது. "தலைவரே! இப்ப நான் "ஸ்ட்ராங் ஹீரோ'' ஆயிட்டேன். இப்பப்போய் வில்லனாக நடித்து "பழைய சத்யராஜை'' ஞாபகப்படுத்தணுமா?'' என்று கேட்டேன்.

    நான் இப்படிச் சொன்னதை மணிவண்ணன் எதிர்பார்க்கவில்லை போலும். என்னையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

    நான் இப்போது அவரை இயல்புக்கு கொண்டு வரும் விதத்தில் பேசினேன். "ஜனங்க என்னை வால்டர் வெற்றிவேல் வரை கொண்டு வந்திருக்காங்க. இப்பப்போய் மறுபடியும் `வில்லனா' நடிச்சா சரியாக இருக்குமா?'' என்று கேட்டேன்.

    என்றாலும் என்னிடம் கதை சொல்ல வந்திருக்கும் மணிவண்ணன் இதற்கும் கவலைப்படவில்லை. "தலைவரே! முதல்ல கதையை கேளுங்க. அப்புறம் நடிக்கிற முடிவைச் சொல்லுங்க'' என்றார்.

    இந்த விஷயத்தில் மணிவண்ணனின் திறமை எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு கதை சொல்லும்போதே நமக்கு அதில் உடன்பாடு இல்லை என்று தெரிந்து விட்டால் உடனே வேறு கதை சொல்வார். ஒரு கதைக்கு திரைக்கதை வடிவம் தரும்போதே, கதை கேட்பவர்களை கதைக்குள் ஐக்கியமாக்கி விடுவார். அதனால் அவர் சொல்கிற கதையை மறுக்கவே முடியாது.

    ஆனாலும் எனக்குள் ஒரு முடிவு எடுத்திருந்தேன். அவர் சொல்லும் `வில்லன்' கதையில் நடிக்கவே கூடாது என்பதுதான் அந்த முடிவு. அதாவது அவர் சொல்லும் கதை தங்கமாகவே இருந்தாலும் அதை தகரமாகவே கருதி தவிர்க்க வேண்டும்!

    மணிவண்ணன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். வில்லன் போர்ஷன் வருகிறது. அமாவாசை, நாகராஜசோழனாக மாறுகிற கட்டம் வருகிறது. அமாவாசை போட்டியிடும் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது. முதலில் நாற்காலியின் நுனியில் தயங்கித் தயங்கி உட்காரும், அமாவாசை `5 ஆயிரம் ஓட்டு முன்னணி' என்று அறிவிக்கப்பட்டதும், சேரில் சாய்ந்து உட்காருகிறான்! 10 ஆயிரம் ஓட்டு முன்னணி என்றதும் சேரில் கால் மேல் கால் போட்டு உட்காருகிறான்!

    வெற்றி அறிவிக்கப்பட்டதும் தன்னை தேர்தலில் நிறுத்திய அரசியல் பிரமுகர் முகத்திலேயே சிகரெட் புகையை ஊதுகிறான்!

    கதை சொல்லத் தொடங்கி அரை மணி நேரத்தில் இந்தக் காட்சி வர, அந்த அமாவாசை கேரக்டர் எனக்குள் முழுமையாக வியாபித்ததில் என் பிடிவாதம் மறந்து போயிற்று! "நடிக்கிறேன்'' என்று சொல்லி விட்டேன்.

    இந்தப் படத்தில் நடிகை கஸ்தூரிக்கு அல்வா கொடுத்து நான் ஏமாற்றும் காட்சியை வைத்தார், மணிவண்ணன். இதன்பிறகு `அல்வா' என்றாலே ஏமாற்றுவது என்று ரசிகர்கள் மனதில் பதிந்து போயிற்று. படத்தின் தொடக்க விழா அன்றே எல்லா ஏரியாக்களும் விற்று படத்துக்கு இன்னும் பரபரப்பு சேர்த்துவிட்டது.

    மணிவண்ணனிடம் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம், வேகம். அதே நேரத்தில் குவாலிட்டியும் `மிஸ்' ஆகாது. "நூறாவது நாள்'' படத்தை 25 நாளில் எடுத்து முடித்தார். 24 மணி நேரம் படத்தை 28 நாளில் முடித்தார். ஆனால் இந்தப் படத்துக்கு அவர் 90 நாட்கள் எடுத்துக் கொண்டார். நான்கூட ஒரு தடவை அவரிடம், "என்ன தலைவரே! சொந்தப்படம் எடுக்கறீங்க. 90 நாள் வரை படப்பிடிப்பு போகுதே'' என்று என் கவலையை வெளியிட்டேன். பதிலுக்கு அவரோ, "தலைவரே! படத்தை எக்கச்சக்க விலைக்கு விற்றுவிட்டேன். கொஞ்சம் கூடுதலா செலவு பண்ணிதான் எடுப்போமே'' என்றார்.

    தன்னை நம்பி பணம் போட்டவர்களுக்கு அந்தப்பணம் லாபமாக திரும்பிப்போகவேண்டும் என்ற எண்ணம்தான் அவரை அப்படிப்பேச வைத்தது.

    சொன்னது போலவே படத்தில் வரும் ஒரு சாதாரண ஊர்வல காட்சிக்கு 5 ஆயிரம் பேரை நடிக்க வைத்து காட்சிக்கே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    "அமைதிப்படை'' வெளியானபோது என்னையும், மணிவண்ணனையும் உச்சாணிக் கொம்புக்கு தூக்கிக் கொண்டு போனது. படம் மிகப்பெரிய வெற்றி. வில்லன் அமாவாசையை ரசிகர்கள் அப்படி கொண்டாடினார்கள்.

    இந்தப்படம் இந்தியில் தயாரானபோது மிதுன் சக்ரவர்த்தி நடித்தார். தெலுங்கில் மோகன்பாபு நடித்தார். இரண்டுமே வெற்றி.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    ×