என் மலர்
சினி வரலாறு
இசை நிகழ்ச்சிக்கு பாவலர் வரதராஜன் வராமல் போனதால், வரதராஜனாக பாஸ்கரும், பாஸ்கராக இளையராஜாவும் நடிக்க நேரிட்டது.
இசை நிகழ்ச்சிக்கு பாவலர் வரதராஜன் வராமல் போனதால், வரதராஜனாக பாஸ்கரும், பாஸ்கராக இளையராஜாவும் நடிக்க
நேரிட்டது.
இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"மேடையில் கடைசியாகப் பேசிய கம்யூனிஸ்ட்டு கட்சித் தோழர், தனது முடிவுரையில் பாவலரை பற்றி ஒரு அறிமுக உரையாற்றினார். அப்போதைக்கப்போது மக்கள் கைதட்டினார்கள். `இப்படியாகப்பட்ட பாவலர் சகோதரர்களின் இசை இப்போது தொடங்கும்' என்று அறிவித்தார்.
எத்தனை சாமர்த்தியம் பாருங்கள்! இவர்தான் பாவலர் என்று அறிமுகப்படுத்தாமல் `பாவலர் சகோதரர்கள்' என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டார். கச்சேரியின்போதோ, முடிந்த பிறகோ `எப்படி நீங்கள் பாஸ்கரை பாவலர் என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றலாம்?' என்று யாரும் கேள்வி கேட்க முடியாதல்லவா!
பாஸ்கர் துண்டோடு மேடையேறினார். மேடையில் ஏற போடப்பட்டிருந்த மரப்படிகளில் கால் வைக்கும்போது கால் இடறியது. நல்ல வேளையாகக் கீழே விழாமல் மேலே ஏறிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து நான் ஏறினேன்.
டைட்டில் மியூசிக் முடிந்தது. செங்கொடிப் பாடல் முடிந்தது. அடுத்து `வணக்கம்' பாடலைத் தொடங்கினோம்.
`வணக்கம்' பாடலில் குறைந்தது நாலு இடங்களிலாவது எல்லா ஊரிலும் கைதட்டல் கிடைக்கும். அன்றைக்கோ, இதோ இப்போது கிடைக்கும், இல்லை இப்போது கிடைக்கும் என்று முழுப்பாடலும் முடியும்வரை எதிர்பார்த்தோம்.
ஊஹும். ஒரு இடத்தில்கூட கைதட்டல் கிடைக்கவில்லை.
அப்போதே நன்றாக ஊதிவைத்த பலூனில் `புஷ்' என்று காற்றுப்போனது போலாயிற்று.
பாவலர் போல பேச பாஸ்கர் ஆயத்தமானார். பாஸ்கர் போல பேச நான் தயாரானேன்.
பாவலர் மாதிரி பாஸ்கர் பேசத்தொடங்கினார்.
சிவாஜியின் வசனத்தை ஆயிரம் நடிகர்கள், பத்தாயிரம் ரசிகர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர் வசனங்களை எப்படி ஏற்றி இறக்கிப் பேசுவார் என்பது எல்லாருக்கும் அத்துப்படி.
ஆனால் அவர் மாதிரி நமக்கும் வரும் என்று பேசிப் பார்க்கும்போதுதான், அடடா! இது அல்ல அது. அவர் பேசுவது வேறு. நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு' என்பது புரியும்.
பாவலர் பேசியதையெல்லாம் பாஸ்கர் பேசினார். பாஸ்கர் பேசியதை நான் பேசினேன்.
இருந்தாலும் இருவருக்கும் `ஏதோ ஒன்று' குறைந்திருப்பது புரிகிறது. நூற்றுக்கு நூறு தெரியும் என்ற நம்பிக்கையோடு தொடங்க, பூஜ்யம் அளவு கூட அது இல்லை என்பது தெரிய வந்ததும், அந்த இரண்டு மணி நேரக் கச்சேரி ஒரு ஜென்மம் முழுக்க நீண்டு போவதைப் போலிருந்தது.
அண்ணனுடன் பாஸ்கர் பேசும்போது இடையிடையே ஏதாவது `காமெடி' பண்ணி மக்களை சிரிக்க வைத்து விடுவார்.
நானும் பாஸ்கர் மாதிரி கைதட்டல் வாங்கி விடுவேன் என்று நம்பி, அதையே செய்தால், எனக்கு வரவேயில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் அது காமெடியாகவும் இல்லை; வேறு விதமாகவும் இல்லை.
உதாரணத்துக்கு மேடையில் அண்ணன் பாவலர் ஏதோ சொல்ல, "ஆமாண்ணே'' என்று சொல்லி விட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் சோடாவை எடுத்து `மடக்... மடக்' என்று குடிப்பார் பாஸ்கர். மக்கள் சிரிப்பார்கள்.
இந்தப் பாணி எனக்கு வரவில்லை. கைதட்டும் கிடைக்கவில்லை. அதனால் சோடாவும் உள்ளே போக மறுத்து `தும்மலை'
வரவைத்துவிட்டது.இதெல்லாம் எனக்குத்தான் காமெடியாக இருந்ததே தவிர, ஜனங்கள் கண்டுகொள்ளவில்லை.
ஊருக்குள் நுழையும்போது, உற்சாகமாக `பாவலர் வாழ்க' என்று கோஷம் போட்ட இந்த ஜனங்களுக்கு என்னதான் ஆயிற்று?
இப்போது எனக்கு புரியத்தொடங்கியது. இயல்பான தன்மை குறையும்போது, அது உள்ளங்களைத் தொடுவதும் இல்லை; கவருவதும் இல்லை.
கைதட்டல் இல்லாமலே அன்றைய கச்சேரி முடிந்தது. இன்னும் 6 நாட்கள் இதே போல் இருந்தால் என்னாவது? அண்ணன் வந்துவிடமாட்டார்களா என மனசு ஏங்கியது.
இப்படியே மூன்று நாட்கள் நாங்கள் கச்சேரி முடித்தோம். நாலாம் நாள் ஒருவழியாக அண்ணன் வந்துவிட்டார். `அப்பாடா' என்று உயிர்
வந்தது.ஆனால் இன்னுë என் ஆர்மோனியப் பெட்டி வரவில்லையே? உயிர் வந்ததும், வராத மாதிரியல்லவா இருக்கிறது?
இன்னொரு ஆர்மோனியத்தை அதிக விலை கொடுத்துக்கூட வாங்கி விடலாம். ஆனால் அதெல்லாம் அந்த ஆர்மோனியம் போல வருமா?
அடுத்த மூன்று நாட்கள் கச்சேரியையும் அண்ணனுடன் முடித்துவிட்டு மதுரை வந்து கட்சி ஆபீசுக்கு சென்றால், என் `உயிர்' அங்கே இருந்தது. நான் ரெயிலில் தவறவிட்ட அதே என் ஆர்மோனியம்.
போன உயிர் திரும்ப வந்தது போல் எனக்குள் அப்படியொரு சந்தோஷம்!
மதுரையில் இந்தப் பெட்டியை வாங்கிக்கொள்ள வந்த வெள்ளைக்காரர், அது தன்னுடையது இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதனால் இந்தப்பெட்டி யாருடையது என்று தெரிந்து கொள்வதற்காக பெட்டியை உடைத்திருக்கிறார்கள். ஆர்மோனியத்தின் மேல் மூடியில் அரிவாள் சுத்தியல் படத்துடன் பாவலர் வரதராஜன் என்றும் எழுதியிருந்ததைப் பார்த்து நேராக கம்யூனிஸ்டு கட்சி ஆபீசில் கொண்டு சேர்த்து விட்டார்கள்.
நான் ஆர்மோனியப் பெட்டியைப் பார்த்தேன். "என்னடா பசங்களா? நான் இல்லாம கச்சேரியா பண்ணிட்டு வர்றீங்க?'' என்று கேட்பது போல் இருந்தது.
ஆர்மோனியப் பெட்டியின் பூட்டை உடைத்திருந்தார்கள். பரவாயில்லை. வேறு பூட்டு கிடைக்கும்.
ஆனால் அது தொலைந்ததால் உடைந்து போன என் மனம், இப்போது உடைந்த அடையாளமே தெரியாமல் நன்றாகிவிட்டதே!
தொடர்ந்து கச்சேரிகள், கலகலப்பு என்று போய்க்கொண்டிருந்த இந்த மாதிரியான ஒரு நாளில் பாரதிக்கு நாடக ஆர்வம் இருப்பதை அண்ணன் தெரிந்து கொண்டு விசாரித்திருக்கிறார். பாரதியுடன் நாங்களும் நாடகம் போட்டதை தெரிந்து கொண்டவர், மதுரையில் நடந்த கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் நாடகம் நடத்த பாரதிக்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து கிடைத்த நாடக அனுபவங்கள் பாரதிக்கு புது உத்வேகம் கொடுத்தது உண்மை.
நேரிட்டது.
இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"மேடையில் கடைசியாகப் பேசிய கம்யூனிஸ்ட்டு கட்சித் தோழர், தனது முடிவுரையில் பாவலரை பற்றி ஒரு அறிமுக உரையாற்றினார். அப்போதைக்கப்போது மக்கள் கைதட்டினார்கள். `இப்படியாகப்பட்ட பாவலர் சகோதரர்களின் இசை இப்போது தொடங்கும்' என்று அறிவித்தார்.
எத்தனை சாமர்த்தியம் பாருங்கள்! இவர்தான் பாவலர் என்று அறிமுகப்படுத்தாமல் `பாவலர் சகோதரர்கள்' என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டார். கச்சேரியின்போதோ, முடிந்த பிறகோ `எப்படி நீங்கள் பாஸ்கரை பாவலர் என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றலாம்?' என்று யாரும் கேள்வி கேட்க முடியாதல்லவா!
பாஸ்கர் துண்டோடு மேடையேறினார். மேடையில் ஏற போடப்பட்டிருந்த மரப்படிகளில் கால் வைக்கும்போது கால் இடறியது. நல்ல வேளையாகக் கீழே விழாமல் மேலே ஏறிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து நான் ஏறினேன்.
டைட்டில் மியூசிக் முடிந்தது. செங்கொடிப் பாடல் முடிந்தது. அடுத்து `வணக்கம்' பாடலைத் தொடங்கினோம்.
`வணக்கம்' பாடலில் குறைந்தது நாலு இடங்களிலாவது எல்லா ஊரிலும் கைதட்டல் கிடைக்கும். அன்றைக்கோ, இதோ இப்போது கிடைக்கும், இல்லை இப்போது கிடைக்கும் என்று முழுப்பாடலும் முடியும்வரை எதிர்பார்த்தோம்.
ஊஹும். ஒரு இடத்தில்கூட கைதட்டல் கிடைக்கவில்லை.
அப்போதே நன்றாக ஊதிவைத்த பலூனில் `புஷ்' என்று காற்றுப்போனது போலாயிற்று.
பாவலர் போல பேச பாஸ்கர் ஆயத்தமானார். பாஸ்கர் போல பேச நான் தயாரானேன்.
பாவலர் மாதிரி பாஸ்கர் பேசத்தொடங்கினார்.
சிவாஜியின் வசனத்தை ஆயிரம் நடிகர்கள், பத்தாயிரம் ரசிகர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர் வசனங்களை எப்படி ஏற்றி இறக்கிப் பேசுவார் என்பது எல்லாருக்கும் அத்துப்படி.
ஆனால் அவர் மாதிரி நமக்கும் வரும் என்று பேசிப் பார்க்கும்போதுதான், அடடா! இது அல்ல அது. அவர் பேசுவது வேறு. நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு' என்பது புரியும்.
பாவலர் பேசியதையெல்லாம் பாஸ்கர் பேசினார். பாஸ்கர் பேசியதை நான் பேசினேன்.
இருந்தாலும் இருவருக்கும் `ஏதோ ஒன்று' குறைந்திருப்பது புரிகிறது. நூற்றுக்கு நூறு தெரியும் என்ற நம்பிக்கையோடு தொடங்க, பூஜ்யம் அளவு கூட அது இல்லை என்பது தெரிய வந்ததும், அந்த இரண்டு மணி நேரக் கச்சேரி ஒரு ஜென்மம் முழுக்க நீண்டு போவதைப் போலிருந்தது.
அண்ணனுடன் பாஸ்கர் பேசும்போது இடையிடையே ஏதாவது `காமெடி' பண்ணி மக்களை சிரிக்க வைத்து விடுவார்.
நானும் பாஸ்கர் மாதிரி கைதட்டல் வாங்கி விடுவேன் என்று நம்பி, அதையே செய்தால், எனக்கு வரவேயில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் அது காமெடியாகவும் இல்லை; வேறு விதமாகவும் இல்லை.
உதாரணத்துக்கு மேடையில் அண்ணன் பாவலர் ஏதோ சொல்ல, "ஆமாண்ணே'' என்று சொல்லி விட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் சோடாவை எடுத்து `மடக்... மடக்' என்று குடிப்பார் பாஸ்கர். மக்கள் சிரிப்பார்கள்.
இந்தப் பாணி எனக்கு வரவில்லை. கைதட்டும் கிடைக்கவில்லை. அதனால் சோடாவும் உள்ளே போக மறுத்து `தும்மலை'
வரவைத்துவிட்டது.இதெல்லாம் எனக்குத்தான் காமெடியாக இருந்ததே தவிர, ஜனங்கள் கண்டுகொள்ளவில்லை.
ஊருக்குள் நுழையும்போது, உற்சாகமாக `பாவலர் வாழ்க' என்று கோஷம் போட்ட இந்த ஜனங்களுக்கு என்னதான் ஆயிற்று?
இப்போது எனக்கு புரியத்தொடங்கியது. இயல்பான தன்மை குறையும்போது, அது உள்ளங்களைத் தொடுவதும் இல்லை; கவருவதும் இல்லை.
கைதட்டல் இல்லாமலே அன்றைய கச்சேரி முடிந்தது. இன்னும் 6 நாட்கள் இதே போல் இருந்தால் என்னாவது? அண்ணன் வந்துவிடமாட்டார்களா என மனசு ஏங்கியது.
இப்படியே மூன்று நாட்கள் நாங்கள் கச்சேரி முடித்தோம். நாலாம் நாள் ஒருவழியாக அண்ணன் வந்துவிட்டார். `அப்பாடா' என்று உயிர்
வந்தது.ஆனால் இன்னுë என் ஆர்மோனியப் பெட்டி வரவில்லையே? உயிர் வந்ததும், வராத மாதிரியல்லவா இருக்கிறது?
இன்னொரு ஆர்மோனியத்தை அதிக விலை கொடுத்துக்கூட வாங்கி விடலாம். ஆனால் அதெல்லாம் அந்த ஆர்மோனியம் போல வருமா?
அடுத்த மூன்று நாட்கள் கச்சேரியையும் அண்ணனுடன் முடித்துவிட்டு மதுரை வந்து கட்சி ஆபீசுக்கு சென்றால், என் `உயிர்' அங்கே இருந்தது. நான் ரெயிலில் தவறவிட்ட அதே என் ஆர்மோனியம்.
போன உயிர் திரும்ப வந்தது போல் எனக்குள் அப்படியொரு சந்தோஷம்!
மதுரையில் இந்தப் பெட்டியை வாங்கிக்கொள்ள வந்த வெள்ளைக்காரர், அது தன்னுடையது இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதனால் இந்தப்பெட்டி யாருடையது என்று தெரிந்து கொள்வதற்காக பெட்டியை உடைத்திருக்கிறார்கள். ஆர்மோனியத்தின் மேல் மூடியில் அரிவாள் சுத்தியல் படத்துடன் பாவலர் வரதராஜன் என்றும் எழுதியிருந்ததைப் பார்த்து நேராக கம்யூனிஸ்டு கட்சி ஆபீசில் கொண்டு சேர்த்து விட்டார்கள்.
நான் ஆர்மோனியப் பெட்டியைப் பார்த்தேன். "என்னடா பசங்களா? நான் இல்லாம கச்சேரியா பண்ணிட்டு வர்றீங்க?'' என்று கேட்பது போல் இருந்தது.
ஆர்மோனியப் பெட்டியின் பூட்டை உடைத்திருந்தார்கள். பரவாயில்லை. வேறு பூட்டு கிடைக்கும்.
ஆனால் அது தொலைந்ததால் உடைந்து போன என் மனம், இப்போது உடைந்த அடையாளமே தெரியாமல் நன்றாகிவிட்டதே!
தொடர்ந்து கச்சேரிகள், கலகலப்பு என்று போய்க்கொண்டிருந்த இந்த மாதிரியான ஒரு நாளில் பாரதிக்கு நாடக ஆர்வம் இருப்பதை அண்ணன் தெரிந்து கொண்டு விசாரித்திருக்கிறார். பாரதியுடன் நாங்களும் நாடகம் போட்டதை தெரிந்து கொண்டவர், மதுரையில் நடந்த கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் நாடகம் நடத்த பாரதிக்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து கிடைத்த நாடக அனுபவங்கள் பாரதிக்கு புது உத்வேகம் கொடுத்தது உண்மை.
கச்சேரிக்கு ரெயிலில் கோவில்பட்டி சென்றபோது, இளையராஜா மிகவும் நேசித்த ஆர்மோனியப்பெட்டி காணாமல் போய்விட்டது.
கச்சேரிக்கு ரெயிலில் கோவில்பட்டி சென்றபோது, இளையராஜா மிகவும் நேசித்த ஆர்மோனியப்பெட்டி காணாமல் போய்விட்டது.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நேரத்தில் மறுநாளே கோவில்பட்டியில் கச்சேரிக்காக புறப்பட்டோம். மதுரையில் இரவு 12-30 மணிக்கு ரெயில் வந்தது. நெல்லை எக்ஸ்பிரசோ, செங்கோட்டையோ ஞாபகம் இல்லை.
எங்களை ரெயிலேற்றிவிட பாரதியும் வந்திருந்தார். ரெயில் புறப்படும் முன்பாக அவர் விடை பெற்றுச்சென்று விட்டார்.
முந்தின நாட்களில் சரிவர தூங்காத அலுப்பு கண்களை செருக வைக்க, பெட்டி, படுக்கைகளை கீழே வைத்த நாங்கள் மேலே காலியாக இருந்த "பெர்த்''தில் ஏறி படுத்துவிட்டோம். சாதாரணமாக படுத்தவுடன் தூக்கம் வராத எங்களுக்கு முந்தின நாள் பொருட்காட்சியில் அலைந்த களைப்பில் படுத்ததும் தூக்கம் தூக்கிக்கொண்டு போனது.
ரெயில் மதுரையில் அரை மணிக்கும் மேலாக நின்றது போலும். அதுதான் பிரச்சினையாகிவிட்டது.
நாங்கள் ஏறிய ரெயிலில் கொடைக்கானல் போகவேண்டிய வெளி நாட்டுக்காரர் ஒருவர் அவரது மரப்பெட்டி ஒன்றை `கொடைக்கானல் ரோடு' ஸ்டேஷனில் இறங்கும்போது எடுக்க மறந்துவிட்டிருக்கிறார். இதனால் உடனடியாக மதுரை ஸ்டேஷன் மாஸ்டருக்கு போன் செய்து தெரியப்படுத்தி இருக்கிறார்.
இதனால் அந்த மரப்பெட்டியைத் தேடிய ரெயில்வே ஊழி யர்கள் நாங்கள் படுத்திருந்த பெட்டிக்கும் வந்திருக்கிறார்கள். எங்கள் கம்பார்ட்மென்டில் நான் ஆர்மோனியத்தை பூட்டி வைத்திருந்த மரப்பெட்டியை பார்த்து, அது அந்த வெள்ளைக்காரர் தவறவிட்ட பெட்டி என்று
எண்ணிக்கொண்டார்கள்.இருந்தும் சிறு சந்தேகம். வேறு யாருடைய பெட்டி யாகவும் இருந்தால்?
சந்தேகத்தை சரி செய்ய, உரத்த குரலில் "இந்த மரப்பெட்டி யாருது?'' என்று கேட்டிருக்கிறார்கள். நாங்கள்தான் அதற்குள் தூங்கிவிட்டோமே. அந்தக் குரல், எங்கள் தூக்கத்தை தாண்டி காதுகளை எட்டவே இல்லை.
அவர்களும் பெட்டியில் பூட்டு இருந்ததால், திறந்து பார்க்க முற்படவில்லை. பெட்டியை இறக்கிவிட்டு, பெட்டி கிடைத்து விட்டது என்ற தகவலை ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
மறுநாள் காலை 6 மணிக்கு ரெயில் கோவில்பட்டி வந்தபோதுதான் அரக்கப் பறக்க விழித்தோம். வாத்தியங்களை இறக்கி வைக்க முற்பட்டபோதுதான், ஆர்மோனியம் காணாமல் போய்விட்டது தெரிந்தது.
எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அடிவயிற்றை ஏதோ கவ்வியது போன்ற உணர்வு.
இப்போது ஆர்மோனியம் பற்றி கொஞ்சம் விளக்கவேண்டும். ஒவ்வொரு ஆர்மோனியமும் வெவ்வேறு அமைப்பில் இருக்கும்.
பெட்டிக் கட்டைகளில் ஆக்ஷனுக்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பிகளின் டென்ஷன், `கட்டை'யை அழுத்தியவுடன் அது கீழே இறங்கும் அளவு, அதிலிருந்து புறப்பட்டு வரும் நாதம் எல்லாமே பெட்டிக்கு பெட்டி மாறுபடும்.
இங்கே கச்சேரிக்கென எனக்குத்தரப்பட்ட ஆர்மோனியத்தை வாசித்துப் பார்த்தேன். திருப்தியில்லை. இருந்தாலும் வேறு வழி? ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டேன்.
ஆனால் என்னுடைய ஆர்மோனியம், `இந்தக்கால கட்டத்தில் இவன் என்னை வாசிக்கக்கூடாது' என்று முடிவு செய்து பிரிந்துபோய் விட்டபிறகு, நான் என்ன செய்ய முடியும்? இந்த சோகத்துடன் இன்னொரு சோகமும் சேர்ந்தே வந்தது.
கோவில்பட்டியில் ஒரு வார கச்சேரிக்கு அண்ணன் ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் ரெயிலில் கோவில்பட்டி போய்ச்சேர, பண்ணைபுரத்தில் இருந்து அண்ணன் பஸ் ரூட்டில் வந்து எங்களுடன் கோவில்பட்டி கச்சேரியில் கலந்து கொள்வதாக ஏற்பாடு.
நாங்கள் கோவில்பட்டிக்கு வந்துவிட்டோம். இப்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. மாலையில் கச்சேரி. பாவலரோ வரவில்லை.
சரி, மாலையில் எப்படியும் அண்ணன் வந்து விடுவார் என்று உள்ளூர் கம்ïனிஸ்டு தோழர்களை சமாதானப்படுத்தினோம்.
கட்சியின் செயலாளருக்கு விஷயம் போயிற்று. அவர் யதார்த்தவாதி. பாவலர் வரவில்லை என்பதை கூட்டத்தில் சொல்ல முடியாது. அதே நேரம் பாவலரை அதுவரை அந்த ஊர் மக்கள் பார்த்ததில்லை.
இந்த விஷயத்தை மனதில் கணநேரம் கூட்டிக்கழித்தவர், பாஸ்கரை அழைத்தார். "பாவலர் என்று சொல்லி நீங்களே கச்சேரியை நடத்திவிட முடியுமா?'' என்று கேட்டார்.
எங்களுக்கு அதிர்ச்சி. நாங்களாக கச்சேரியை நடத்திவிட முயன்று பார்க்கலாம். ஆனால் பாவலராக நடிப்பதாவது? சினிமாவை விடத் தமாஷாக இருக்கிறதே?
சரி, பாவலராக பாஸ்கர் நடிக்கட்டும். அப்படியானால் பாஸ்க ராக நடிப்பது யார், நானா?
அண்ணன் பாவலரோடு பாட்டுக்கு இடையே காமெடியாக பாஸ்கர் சில கேள்விகள் கேட்பது வழக்கம். அதற்கு அண் ணனின் பதில்கள் மக்களி டம் கைதட்டல் பெறும்.
இப்போது பாஸ்கர் இடத்தில் நான் இருந்து கொண்டு, பாவலராக பாஸ்கரை கருதிக்கொண்டு கேள்விகள் கேட்கவேண் டும்.
கச்சேரியில் அத் தனை பாடல்களும், உரையாடல்களும் எங்க ளுக்கு மனப்பாடம். எதை, எப்படி ஏற்றி, இறக்கிப் பேசவேண்டும் என்பதும் அத்துப்படியான பாடம்.
என்றாலும் மாலை வரையில் அண் ணன் பாவலர் வந்து விடமாட்டாரா என்ற ஒரு கவலை ஓடிக்கொண்டிருந்தது. எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது.
மாறுவேடம் புனைந்து நாங்கள் நடித்தாக வேண்டும் என்றிருக்கும்போது, அண்ணன் எப்படி வருவார்? வரவேயில்லை.
கோவில்பட்டியில் இருந்து ஒரு வாடகைக்காரில் நானும் பாஸ்கரும் சென்றோம். கூடவே கட்சித்தோழர் ஒருவரும் வந்தார்.
சூரங்குடி என்ற கிராமத்தில் முதல் நாள் நிகழ்ச்சி.
அன்றைக்கென்று பார்த்து எந்த ஊரிலும் நாங்கள் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அந்த ஊரிக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். அங்கிருந்து பாவலருக்கு வரவேற்பு அளித்து மேடை அமைக்கப்பட்ட மைதானம் வரை கிராமத்தெருக்களில் ஊர்வலமாகப் போய் கூட்டம். அதைத்தொடர்ந்து கச்சேரி.
மைதானம் வந்ததும் காரைவிட்டு இறங்கினோம். எங்களைப் பார்த்ததும் "பாவலர் வரதராஜன்'' என்று ஒருவர் உரத்த குரலாய் ஒலிக்க, மக்கள் "வாழ்க'' என்று கோஷம் போட்டார்கள்.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நேரத்தில் மறுநாளே கோவில்பட்டியில் கச்சேரிக்காக புறப்பட்டோம். மதுரையில் இரவு 12-30 மணிக்கு ரெயில் வந்தது. நெல்லை எக்ஸ்பிரசோ, செங்கோட்டையோ ஞாபகம் இல்லை.
எங்களை ரெயிலேற்றிவிட பாரதியும் வந்திருந்தார். ரெயில் புறப்படும் முன்பாக அவர் விடை பெற்றுச்சென்று விட்டார்.
முந்தின நாட்களில் சரிவர தூங்காத அலுப்பு கண்களை செருக வைக்க, பெட்டி, படுக்கைகளை கீழே வைத்த நாங்கள் மேலே காலியாக இருந்த "பெர்த்''தில் ஏறி படுத்துவிட்டோம். சாதாரணமாக படுத்தவுடன் தூக்கம் வராத எங்களுக்கு முந்தின நாள் பொருட்காட்சியில் அலைந்த களைப்பில் படுத்ததும் தூக்கம் தூக்கிக்கொண்டு போனது.
ரெயில் மதுரையில் அரை மணிக்கும் மேலாக நின்றது போலும். அதுதான் பிரச்சினையாகிவிட்டது.
நாங்கள் ஏறிய ரெயிலில் கொடைக்கானல் போகவேண்டிய வெளி நாட்டுக்காரர் ஒருவர் அவரது மரப்பெட்டி ஒன்றை `கொடைக்கானல் ரோடு' ஸ்டேஷனில் இறங்கும்போது எடுக்க மறந்துவிட்டிருக்கிறார். இதனால் உடனடியாக மதுரை ஸ்டேஷன் மாஸ்டருக்கு போன் செய்து தெரியப்படுத்தி இருக்கிறார்.
இதனால் அந்த மரப்பெட்டியைத் தேடிய ரெயில்வே ஊழி யர்கள் நாங்கள் படுத்திருந்த பெட்டிக்கும் வந்திருக்கிறார்கள். எங்கள் கம்பார்ட்மென்டில் நான் ஆர்மோனியத்தை பூட்டி வைத்திருந்த மரப்பெட்டியை பார்த்து, அது அந்த வெள்ளைக்காரர் தவறவிட்ட பெட்டி என்று
எண்ணிக்கொண்டார்கள்.இருந்தும் சிறு சந்தேகம். வேறு யாருடைய பெட்டி யாகவும் இருந்தால்?
சந்தேகத்தை சரி செய்ய, உரத்த குரலில் "இந்த மரப்பெட்டி யாருது?'' என்று கேட்டிருக்கிறார்கள். நாங்கள்தான் அதற்குள் தூங்கிவிட்டோமே. அந்தக் குரல், எங்கள் தூக்கத்தை தாண்டி காதுகளை எட்டவே இல்லை.
அவர்களும் பெட்டியில் பூட்டு இருந்ததால், திறந்து பார்க்க முற்படவில்லை. பெட்டியை இறக்கிவிட்டு, பெட்டி கிடைத்து விட்டது என்ற தகவலை ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
மறுநாள் காலை 6 மணிக்கு ரெயில் கோவில்பட்டி வந்தபோதுதான் அரக்கப் பறக்க விழித்தோம். வாத்தியங்களை இறக்கி வைக்க முற்பட்டபோதுதான், ஆர்மோனியம் காணாமல் போய்விட்டது தெரிந்தது.
எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அடிவயிற்றை ஏதோ கவ்வியது போன்ற உணர்வு.
இப்போது ஆர்மோனியம் பற்றி கொஞ்சம் விளக்கவேண்டும். ஒவ்வொரு ஆர்மோனியமும் வெவ்வேறு அமைப்பில் இருக்கும்.
பெட்டிக் கட்டைகளில் ஆக்ஷனுக்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பிகளின் டென்ஷன், `கட்டை'யை அழுத்தியவுடன் அது கீழே இறங்கும் அளவு, அதிலிருந்து புறப்பட்டு வரும் நாதம் எல்லாமே பெட்டிக்கு பெட்டி மாறுபடும்.
இங்கே கச்சேரிக்கென எனக்குத்தரப்பட்ட ஆர்மோனியத்தை வாசித்துப் பார்த்தேன். திருப்தியில்லை. இருந்தாலும் வேறு வழி? ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டேன்.
ஆனால் என்னுடைய ஆர்மோனியம், `இந்தக்கால கட்டத்தில் இவன் என்னை வாசிக்கக்கூடாது' என்று முடிவு செய்து பிரிந்துபோய் விட்டபிறகு, நான் என்ன செய்ய முடியும்? இந்த சோகத்துடன் இன்னொரு சோகமும் சேர்ந்தே வந்தது.
கோவில்பட்டியில் ஒரு வார கச்சேரிக்கு அண்ணன் ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் ரெயிலில் கோவில்பட்டி போய்ச்சேர, பண்ணைபுரத்தில் இருந்து அண்ணன் பஸ் ரூட்டில் வந்து எங்களுடன் கோவில்பட்டி கச்சேரியில் கலந்து கொள்வதாக ஏற்பாடு.
நாங்கள் கோவில்பட்டிக்கு வந்துவிட்டோம். இப்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. மாலையில் கச்சேரி. பாவலரோ வரவில்லை.
சரி, மாலையில் எப்படியும் அண்ணன் வந்து விடுவார் என்று உள்ளூர் கம்ïனிஸ்டு தோழர்களை சமாதானப்படுத்தினோம்.
கட்சியின் செயலாளருக்கு விஷயம் போயிற்று. அவர் யதார்த்தவாதி. பாவலர் வரவில்லை என்பதை கூட்டத்தில் சொல்ல முடியாது. அதே நேரம் பாவலரை அதுவரை அந்த ஊர் மக்கள் பார்த்ததில்லை.
இந்த விஷயத்தை மனதில் கணநேரம் கூட்டிக்கழித்தவர், பாஸ்கரை அழைத்தார். "பாவலர் என்று சொல்லி நீங்களே கச்சேரியை நடத்திவிட முடியுமா?'' என்று கேட்டார்.
எங்களுக்கு அதிர்ச்சி. நாங்களாக கச்சேரியை நடத்திவிட முயன்று பார்க்கலாம். ஆனால் பாவலராக நடிப்பதாவது? சினிமாவை விடத் தமாஷாக இருக்கிறதே?
சரி, பாவலராக பாஸ்கர் நடிக்கட்டும். அப்படியானால் பாஸ்க ராக நடிப்பது யார், நானா?
அண்ணன் பாவலரோடு பாட்டுக்கு இடையே காமெடியாக பாஸ்கர் சில கேள்விகள் கேட்பது வழக்கம். அதற்கு அண் ணனின் பதில்கள் மக்களி டம் கைதட்டல் பெறும்.
இப்போது பாஸ்கர் இடத்தில் நான் இருந்து கொண்டு, பாவலராக பாஸ்கரை கருதிக்கொண்டு கேள்விகள் கேட்கவேண் டும்.
கச்சேரியில் அத் தனை பாடல்களும், உரையாடல்களும் எங்க ளுக்கு மனப்பாடம். எதை, எப்படி ஏற்றி, இறக்கிப் பேசவேண்டும் என்பதும் அத்துப்படியான பாடம்.
என்றாலும் மாலை வரையில் அண் ணன் பாவலர் வந்து விடமாட்டாரா என்ற ஒரு கவலை ஓடிக்கொண்டிருந்தது. எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது.
மாறுவேடம் புனைந்து நாங்கள் நடித்தாக வேண்டும் என்றிருக்கும்போது, அண்ணன் எப்படி வருவார்? வரவேயில்லை.
கோவில்பட்டியில் இருந்து ஒரு வாடகைக்காரில் நானும் பாஸ்கரும் சென்றோம். கூடவே கட்சித்தோழர் ஒருவரும் வந்தார்.
சூரங்குடி என்ற கிராமத்தில் முதல் நாள் நிகழ்ச்சி.
அன்றைக்கென்று பார்த்து எந்த ஊரிலும் நாங்கள் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அந்த ஊரிக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். அங்கிருந்து பாவலருக்கு வரவேற்பு அளித்து மேடை அமைக்கப்பட்ட மைதானம் வரை கிராமத்தெருக்களில் ஊர்வலமாகப் போய் கூட்டம். அதைத்தொடர்ந்து கச்சேரி.
மைதானம் வந்ததும் காரைவிட்டு இறங்கினோம். எங்களைப் பார்த்ததும் "பாவலர் வரதராஜன்'' என்று ஒருவர் உரத்த குரலாய் ஒலிக்க, மக்கள் "வாழ்க'' என்று கோஷம் போட்டார்கள்.
ஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.
ஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.
மதுரையில் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா விவரிக்கிறார்:-
"மதுரையில் சித்திரைத் திருநாள் வந்தால் போதும். மதுரை நகரம் முழுக்க கூட்டம் அலைமோதும். கோவிலில் மட்டுமல்ல, தெருக்களிலும் இதே நிலைதான்.
சித்திரைப் பவுர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும்போது சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் கூட்டத்தின் எண்ணிக்கை சொல்லி முடியாது.
இந்த வைபவம் முடிந்த பவுர்ணமி இரவுகளில், தண்ணீர் இல்லாத வைகை ஆற்று மணல் வெளியில் பாரதி, பாஸ்கர், நான், சுப்பிரமணியன், செல்வராஜ் என ஐவர் குழுவாக விடிய விடிய உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.
திருவிழாவையொட்டி தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறும். கச்சேரி இல்லாத நாட்களில் அங்கே சென்று, பொழுதை மகிழ்ச்சியாக கழித்து விட்டு வருவோம்.
மதுரை ரீகல் தியேட்டரில், ஜெர்ரி லூயிஸ் நடித்த ஆங்கிலப் படம் பார்த்து விட்டு அவரைப் போலவே நடிக்கும் பாஸ்கரை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சில சமயம் ஓட்டல்களில் சர்வர்களிடம் பேசும்போது அவராக வேறுவித ஸ்டைலில் நடிப்பார். அதை நாங்கள் ரசிப்போம்.
சில நேரம் பொருட்காட்சியில் பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் தாண்டிப் போயிருக்கும். கடைசி பஸ்சை தவறவிட்டு நடந்தே மீனாட்சி நிலையம் ரூமிற்கு வந்ததுண்டு.
அந்த நேரத்தில் ரோட்டில் ஆள் நடமாட்டம் இருக்காது. நான், பாஸ்கர், பாரதி மூவரும் சத்தம் போட்டு பேசி சிரித்தபடி, பல சமயங்களில் உரத்த குரலில் பாடிக்கொண்டே நடந்து வருவோம்.
இதில் பாஸ்கர்தான் எங்களுக்கு ஹீரோ. அவரை வேடிக்கை பார்ப்பதுதான் எனக்கும் பாரதிக்கும் பிடித்தமான ஒன்று.
ஒருமுறை பஸ் ஸ்டாண்ட் தங்கும் விடுதியில் உள்ள மீனாட்சி நிலையத்தில் தங்கியிருந்தபோது ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண் ஒரு நடிகை என்பது பிற்பாடுதான் தெரிந்தது.
இந்தியாவிற்கு `டிவி' வரும்முன் "டிவி'' என்பது எப்படி இருக்கும்? டிவி நிகழ்ச்சிகள் எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்பதை விளக்க, ஒரு வடநாட்டு கோஷ்டி மதுரை பொருட்காட்சியில் ஸ்டால் போட்டிருந்தது. அதில் ஒரு பெண் மேக்கப்புடன் ஆட, அதைக் காமிரா படம் பிடிக்க, பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த டிவி ஸ்கிரீனில் அதை எல்லாரும் காணும்படி ஒளிபரப்பினார்கள்.
இந்த டிவி நடிகைக்கு நாங்கள் தங்கியிருந்த மீனாட்சி நிலையத்தில் ரூம் கொடுத்திருந்தார்கள். அதுவும் எங்கள் ரூமுக்கு அடுத்த ரூம்.
நாங்கள் பகல் வேளையில் ரூமில் பயிற்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் வாசித்து பழகிக்கொண்டிருப்போம்.
அப்போது சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு'' படம் ரிலீசான நேரம். ஆதலால் அந்தப் படத்தின் பாடல்களையும் பாடி வாசித்துக் கொண்டிருப்போம்.
இப்படி வாசிக்கிற நேரத்தில் அந்த டிவி பெண்ணும் அடிக்கடி எங்கள் கண்ணில் படும். ஆனால் பேச வேண்டுமென்றோ, பழகவேண்டுமென்றோ எந்தவிதமான எண்ணமும் எங்களில் யாருக்கும் கிடையாது.
ஒருமுறை பொருட்காட்சியை சுற்றி விட்டு நான், பாஸ்கர், பாரதி, காமராஜ் (இன்னொரு நண்பர்) என நால்வரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். அங்கே புறப்படத் தயார் நிலையில் இருந்த பஸ்தான் கடைசி பஸ் என்று யாரோ சொல்லிவிட, ஓடிப்போய் ஏறிக்கொண்டோம்.
கடைசி வரிசையில் 3 சீட் காலியாக இருந்தது. என்னைத்தவிர மற்ற மூவரும் அதில் உட்கார்ந்து கொண்டார்கள்.
எனக்காக ஒரு சீட் தேடிப் பார்த்தேன். டிரைவருக்குப் பின் இருந்த சீட்டில் அந்த டிவி பெண் உட்கார்ந்திருக்க, காலியாக இருந்த ஒரேயொரு எதிர் சீட்டில் நான் உட்கார்ந்தேன்.
என்னைப் பார்த்ததும் அந்தப் பெண் அடையாளம் கண்டு கொண்டாள். உடனே பாவமன்னிப்பு படப்பாடலான "அத்தான் என்னத்தான்'' பாடலை மெதுவான குரலில் பாடத் தொடங்கினாள். அந்தப்பெண் பாடகி அல்ல; எனவே, குரல் சாதாரணமாக கீழ் ஸ்தாயியில் ஒலித்தது.
அதைக் கேட்ட மாத்திரத்தில் நான் "ஓ'' என்று கதறி அழ ஆரம்பித்தேன். அத்துடன் நில்லாமல், பாஸ்கர், பாரதி இருந்த கடைசி சீட்டுக்கு, அழுதபடி வேகமாக ஓடினேன்.
பஸ்சில் இருந்த எல்லாரும் "என்னவோ ஏதோ'' என்று பார்த்தார்கள். நான் எதற்காக அழுகிறேன் என்பது அந்தப் பெண்ணுக்கும்
புரியவில்லை.கேவிக்கேவி அழுதவாறு வந்த என்னை, "ஏய்! என்ன? என்னாச்சு?'' என்று அவர்களும் புரியாமல் கேட்டார்கள்.
இப்போதும் நான் அழுகையை மட்டும் தொடர, "சொல்லித் தொலையடா'' என்றார் பாஸ்கர், ஆத்திரமாய்.
நான் அந்தப் பெண்ணை சுட்டிக் காட்டினேன். "அதோ அந்த அம்மா பாடுறாங்க'' என்றபடி அழுகையை தொடர்ந்தேன்.
இப்போது, என் குசும்பு பாரதி, பாஸ்கர் ஆகியோருக்குப் புரிந்து விட்டது. அடக்க முடியாமல் சிரித்தார்கள்.
"என் டென்ஷன் உங்களுக்கெல்லாம் சிரிப்பாய் போச்சுதா?'' என்று நான் அழுவதற்கு மறுபடியுமாய் குரலை உயர்த்தியபோது, கண்டக்டர் அருகில் வந்தார். என் தோளில் கைபோட்டவர். "அண்ணே! விடுண்ணே'' என்றார்.
என்னுடைய இந்த கிண்டலுக்கு ஆளான அந்தப் பெண்ணுக்கு அப்போது எப்படி இருந்ததோ தெரியாது...
திடீரென ஒருநாள் அந்தப் பெண்ணின் ப டம் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்களில் காணப்பட்டது.
படத்தில் அவர் பெயரைப்போட்டு `கதாநாயகியாக நடிக்கும்' என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
"ஏய்! இது அந்த டெலிவிஷன் பொண்ணுல்ல?'' என்று அதிசயித்தோம்.
அந்தப்படம் வெளிவந்து அதன் மூலம் பெரிய கதாநாயகியாகிவிட்ட அந்த நடிகையை யாரென்று சொல்ல நான் விரும்பவில்லை.
மதுரையில் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா விவரிக்கிறார்:-
"மதுரையில் சித்திரைத் திருநாள் வந்தால் போதும். மதுரை நகரம் முழுக்க கூட்டம் அலைமோதும். கோவிலில் மட்டுமல்ல, தெருக்களிலும் இதே நிலைதான்.
சித்திரைப் பவுர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும்போது சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் கூட்டத்தின் எண்ணிக்கை சொல்லி முடியாது.
இந்த வைபவம் முடிந்த பவுர்ணமி இரவுகளில், தண்ணீர் இல்லாத வைகை ஆற்று மணல் வெளியில் பாரதி, பாஸ்கர், நான், சுப்பிரமணியன், செல்வராஜ் என ஐவர் குழுவாக விடிய விடிய உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.
திருவிழாவையொட்டி தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறும். கச்சேரி இல்லாத நாட்களில் அங்கே சென்று, பொழுதை மகிழ்ச்சியாக கழித்து விட்டு வருவோம்.
மதுரை ரீகல் தியேட்டரில், ஜெர்ரி லூயிஸ் நடித்த ஆங்கிலப் படம் பார்த்து விட்டு அவரைப் போலவே நடிக்கும் பாஸ்கரை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சில சமயம் ஓட்டல்களில் சர்வர்களிடம் பேசும்போது அவராக வேறுவித ஸ்டைலில் நடிப்பார். அதை நாங்கள் ரசிப்போம்.
சில நேரம் பொருட்காட்சியில் பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் தாண்டிப் போயிருக்கும். கடைசி பஸ்சை தவறவிட்டு நடந்தே மீனாட்சி நிலையம் ரூமிற்கு வந்ததுண்டு.
அந்த நேரத்தில் ரோட்டில் ஆள் நடமாட்டம் இருக்காது. நான், பாஸ்கர், பாரதி மூவரும் சத்தம் போட்டு பேசி சிரித்தபடி, பல சமயங்களில் உரத்த குரலில் பாடிக்கொண்டே நடந்து வருவோம்.
இதில் பாஸ்கர்தான் எங்களுக்கு ஹீரோ. அவரை வேடிக்கை பார்ப்பதுதான் எனக்கும் பாரதிக்கும் பிடித்தமான ஒன்று.
ஒருமுறை பஸ் ஸ்டாண்ட் தங்கும் விடுதியில் உள்ள மீனாட்சி நிலையத்தில் தங்கியிருந்தபோது ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண் ஒரு நடிகை என்பது பிற்பாடுதான் தெரிந்தது.
இந்தியாவிற்கு `டிவி' வரும்முன் "டிவி'' என்பது எப்படி இருக்கும்? டிவி நிகழ்ச்சிகள் எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்பதை விளக்க, ஒரு வடநாட்டு கோஷ்டி மதுரை பொருட்காட்சியில் ஸ்டால் போட்டிருந்தது. அதில் ஒரு பெண் மேக்கப்புடன் ஆட, அதைக் காமிரா படம் பிடிக்க, பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த டிவி ஸ்கிரீனில் அதை எல்லாரும் காணும்படி ஒளிபரப்பினார்கள்.
இந்த டிவி நடிகைக்கு நாங்கள் தங்கியிருந்த மீனாட்சி நிலையத்தில் ரூம் கொடுத்திருந்தார்கள். அதுவும் எங்கள் ரூமுக்கு அடுத்த ரூம்.
நாங்கள் பகல் வேளையில் ரூமில் பயிற்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் வாசித்து பழகிக்கொண்டிருப்போம்.
அப்போது சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு'' படம் ரிலீசான நேரம். ஆதலால் அந்தப் படத்தின் பாடல்களையும் பாடி வாசித்துக் கொண்டிருப்போம்.
இப்படி வாசிக்கிற நேரத்தில் அந்த டிவி பெண்ணும் அடிக்கடி எங்கள் கண்ணில் படும். ஆனால் பேச வேண்டுமென்றோ, பழகவேண்டுமென்றோ எந்தவிதமான எண்ணமும் எங்களில் யாருக்கும் கிடையாது.
ஒருமுறை பொருட்காட்சியை சுற்றி விட்டு நான், பாஸ்கர், பாரதி, காமராஜ் (இன்னொரு நண்பர்) என நால்வரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். அங்கே புறப்படத் தயார் நிலையில் இருந்த பஸ்தான் கடைசி பஸ் என்று யாரோ சொல்லிவிட, ஓடிப்போய் ஏறிக்கொண்டோம்.
கடைசி வரிசையில் 3 சீட் காலியாக இருந்தது. என்னைத்தவிர மற்ற மூவரும் அதில் உட்கார்ந்து கொண்டார்கள்.
எனக்காக ஒரு சீட் தேடிப் பார்த்தேன். டிரைவருக்குப் பின் இருந்த சீட்டில் அந்த டிவி பெண் உட்கார்ந்திருக்க, காலியாக இருந்த ஒரேயொரு எதிர் சீட்டில் நான் உட்கார்ந்தேன்.
என்னைப் பார்த்ததும் அந்தப் பெண் அடையாளம் கண்டு கொண்டாள். உடனே பாவமன்னிப்பு படப்பாடலான "அத்தான் என்னத்தான்'' பாடலை மெதுவான குரலில் பாடத் தொடங்கினாள். அந்தப்பெண் பாடகி அல்ல; எனவே, குரல் சாதாரணமாக கீழ் ஸ்தாயியில் ஒலித்தது.
அதைக் கேட்ட மாத்திரத்தில் நான் "ஓ'' என்று கதறி அழ ஆரம்பித்தேன். அத்துடன் நில்லாமல், பாஸ்கர், பாரதி இருந்த கடைசி சீட்டுக்கு, அழுதபடி வேகமாக ஓடினேன்.
பஸ்சில் இருந்த எல்லாரும் "என்னவோ ஏதோ'' என்று பார்த்தார்கள். நான் எதற்காக அழுகிறேன் என்பது அந்தப் பெண்ணுக்கும்
புரியவில்லை.கேவிக்கேவி அழுதவாறு வந்த என்னை, "ஏய்! என்ன? என்னாச்சு?'' என்று அவர்களும் புரியாமல் கேட்டார்கள்.
இப்போதும் நான் அழுகையை மட்டும் தொடர, "சொல்லித் தொலையடா'' என்றார் பாஸ்கர், ஆத்திரமாய்.
நான் அந்தப் பெண்ணை சுட்டிக் காட்டினேன். "அதோ அந்த அம்மா பாடுறாங்க'' என்றபடி அழுகையை தொடர்ந்தேன்.
இப்போது, என் குசும்பு பாரதி, பாஸ்கர் ஆகியோருக்குப் புரிந்து விட்டது. அடக்க முடியாமல் சிரித்தார்கள்.
"என் டென்ஷன் உங்களுக்கெல்லாம் சிரிப்பாய் போச்சுதா?'' என்று நான் அழுவதற்கு மறுபடியுமாய் குரலை உயர்த்தியபோது, கண்டக்டர் அருகில் வந்தார். என் தோளில் கைபோட்டவர். "அண்ணே! விடுண்ணே'' என்றார்.
என்னுடைய இந்த கிண்டலுக்கு ஆளான அந்தப் பெண்ணுக்கு அப்போது எப்படி இருந்ததோ தெரியாது...
திடீரென ஒருநாள் அந்தப் பெண்ணின் ப டம் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்களில் காணப்பட்டது.
படத்தில் அவர் பெயரைப்போட்டு `கதாநாயகியாக நடிக்கும்' என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
"ஏய்! இது அந்த டெலிவிஷன் பொண்ணுல்ல?'' என்று அதிசயித்தோம்.
அந்தப்படம் வெளிவந்து அதன் மூலம் பெரிய கதாநாயகியாகிவிட்ட அந்த நடிகையை யாரென்று சொல்ல நான் விரும்பவில்லை.
1962 தேர்தல் நடந்தபோது, இளையராஜாவும், அவர் சகோதரர்களும் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்கள். அப்போது போலீசார் திடீரென்று வந்து, இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை விதித்தனர்.
1962 தேர்தல் நடந்தபோது, இளையராஜாவும், அவர் சகோதரர்களும் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்கள். அப்போது போலீசார் திடீரென்று வந்து, இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை விதித்தனர்.
அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"1962-ல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில், மதுரையில் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நிறைய கூட்டங்களும், கச்சேரிகளும் நடந்தன. இதில் பாவலரின் பாடலைக் கேட்க மக்கள் அதிகம் கூடினார்கள். இதனால் எல்லா வார்டுகளிலும் பாவலரின் கச்சேரியை வைக்க ஆசைப்பட்டார்கள்.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு என்று மும்முனைப்போட்டி. அது காமராஜரின் ஆட்சிக்காலம்.
ஒரே நாளில் மூன்று கச்சேரிகள் செய்யும் அளவுக்கு அண்ணனுக்கு நெருக்கடி. ஆனால் அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று கச்சேரிகளையுமே செய்தோம்.
இதில் முதல் கச்சேரி மதுரையில் உள்ள தலைவிரிச்சான் சந்தில் இருக்கும். பாடி முடித்தவுடன் பேச்சாளர்கள் பேசத்தொடங்குவார்கள். அடுத்த கச்சேரி அரசரடியில் இருக்கும். நாங்கள் போகிற நேரத்தில் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் சென்றதும் பேச்சு நிற்கும். கச்சேரி தொடங்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எங்கள் இசைக்குழுவில் இருந்தது மொத்தம் நாலு பேர் மட்டுமே. இந்தக் குழுவிற்கு சில நேரம் டாக்சி. சில நேரம் ஜட்கா (குதிரை வண்டி).
முன்பக்கம் வண்டி ஓட்டுபவரின் அருகே பாஸ்கர் உட்கார, ஆர்மோனியம், தபேலா, கிடாரை வைத்துக்கொண்டு அமர் (கங்கை அமரன்) உட் கார, பின்னே நானும் அண்ணனும் கால்களை தொங்கப்போட்டபடி உட்கார்ந்து கொள்வோம்.
முதல் கச்சேரி முடிந்ததும், ஜட்காவை கூப்பிட்டு வாத்தியங்களை எடுத்து வைத்து உட்கார்ந்து வண்டி ஓடத்தொடங்கும்போது, ஒரு கூட்டம் அப்படியே ஜட்காவை பின்தொடர்ந்தபடி ஓடிவரும்; அடுத்த கச்சேரியை கேட்பதற்காக.
அடுத்த கச்சேரியிலும் இதே நிலைதான் தொடரும்.
காங்கிரஸ் தொண்டர்களுக்கோ, அடுத்த கட்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவது பொறுக்கவில்லை.
ஒருநாள் செல்லூரில் கைத்தறி நெசவாளர் வசிக்கும் பகுதியில் கச்சேரி. மூன்று தெருக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் மேடை போட்டிருந்தார்கள். அங்கு வாழ்ந்த அத்தனை நெசவாளர்களும் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று தெருக்களிலுமே ஏகப்பட்ட கூட்டம். ஒழுங்காக அமர்ந்து கச்சேரி கேட்கத் தயாரானார்கள்.
பேச்சாளர்கள் பேசி, அடுத்து பாவலரின் இசை நிகழ்ச்சி என்று அறிவித்ததும், மக்கள் உற்சாகமாக கைதட்டினார்கள்.
நாங்கள் அமர்ந்து `டைட்டில் மியூசிக்' வாசித்து இரண்டு மூன்று பாடல்களை அண்ணன் பாடியிருப்பார். அனைவருக்கும் வணக்கும் சொல்லும் பாடலில், "கடந்த தேர்தலில் காளை மாட்டுக்கு ஓட்டுப்போடாம விட்டவர்க்கும் வணக்கம்'' என்றார். கைதட்டல் சத்தம் வானை எட்டியது.
கைதட்டு அடங்கும் முன் "அந்தக் காளை மாட்டுக்கு ஓட்டுப்போட்டதை எண்ணி இப்போ கவலைப் படுவோர்க்கும் வணக்கம்'' என்றார். இதற்கும் பலத்த கரகோஷம்.
இப்படி அண்ணன் இரண்டொரு பாடல்களை பாடி முடித்திருந்த வேளையில் திடீரென ஒரு போலீஸ் "வேன்'' எங்கள் கச்சேரி நடக்கும் இடம் அருகே வந்து நின்றது.
போலீஸ் வேனில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீசார் பத்துப்பேருக்கு மேல் வரிசையாக அணிவகுத்து, மேடையை நோக்கி சரசரவென வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக இன்ஸ்பெக்டர் நடராஜன் என்பவர் வந்தார். எல்லாரும் வந்து மேடையை சுற்றி வளைத்து நின்றார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டர், அண்ணன் பாவலரைப் பார்த்து, "பாவலர்! நீங்கள் பாடக்கூடாது'' என்றார்.
"எதுக்கு?'' - பாவலர் கேட்டார்.
"நீங்க மைக் செட் வைத்துக்கொள்ள போலீஸ் பெர்மிஷன் வாங்கவில்லை'' என்றார், இன்ஸ்பெக்டர்.
"அப்படியா?'' என்று சாதாரணமாக கூறிய அண்ணன், ஒலிபெருக்கி வைப்பவரை பார்த்து, "மைக்கை ஆப் பண்ணுப்பா''
என்றார்.மைக்செட்காரரும் அப்படியே செய்தார்.
இப்போது அண்ணன் எங்களைப் பார்த்தார், "டேய், வாசிங்கடா!'' என்றார்.
நாங்கள் ரெடியானோம். அண்ணன் `மைக்' இல்லாமல் பாடத்தொடங்கி விட்டார். கூட்டம் அமைதியாக கேட்டது. நாங்களோ `இன்று கம்யூனிஸ்டு கட்சிக்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலில் நம் பெயரும் இடம் பெறப்போகிறது' என்று வீராவேசத்துடன் வாத்தியங்களை
அழுத்தினோம்.இன்ஸ்பெக்டரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பாவலர் அண்ணன் பேசத்தொடங்கினார். "பார்த்தீங்களா? கமëயூனிஸ்டு கட்சிக்கு மக்கள் கூடுவதைக்காண காங்கிரசுக்கு மனம் பொறுக்கவில்லை. கல்யாணத்தில், மணவறைப் பலகையை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடும் என்ற சினிமாக் காமெடி போல, இங்கே மைக்செட்டை பிடுங்கி விட்டால் பாட்டு எப்படி நடக்கும் என்று காமெடி செய்கிறார்கள்''
என்றார்.இதற்கு மக்கள் சத்தம் போட்டு சிரிக்க, "இப்படிப்பட்ட கட்சிக்கா உங்கள் ஓட்டு?'' என்றும் சமயம் பார்த்து ஆணியடித்தார். "இல்லை, இல்லை!'' என்று கூட்டம் கைதட்டியது.
மைக் இல்லாமலே அடுத்த கச்சேரிக்கு கிளம்பியபோது, கூட்டம் முழுவதும் ஜட்கா பின்னால் ஓடிவந்தது.
எந்த ஒரு இசைக்கலைஞன் சரித்திரத்திலும் காணக்கிடைக்காதது இப்படியொரு நிகழ்ச்சி. இதில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.
அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"1962-ல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில், மதுரையில் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நிறைய கூட்டங்களும், கச்சேரிகளும் நடந்தன. இதில் பாவலரின் பாடலைக் கேட்க மக்கள் அதிகம் கூடினார்கள். இதனால் எல்லா வார்டுகளிலும் பாவலரின் கச்சேரியை வைக்க ஆசைப்பட்டார்கள்.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு என்று மும்முனைப்போட்டி. அது காமராஜரின் ஆட்சிக்காலம்.
ஒரே நாளில் மூன்று கச்சேரிகள் செய்யும் அளவுக்கு அண்ணனுக்கு நெருக்கடி. ஆனால் அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று கச்சேரிகளையுமே செய்தோம்.
இதில் முதல் கச்சேரி மதுரையில் உள்ள தலைவிரிச்சான் சந்தில் இருக்கும். பாடி முடித்தவுடன் பேச்சாளர்கள் பேசத்தொடங்குவார்கள். அடுத்த கச்சேரி அரசரடியில் இருக்கும். நாங்கள் போகிற நேரத்தில் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் சென்றதும் பேச்சு நிற்கும். கச்சேரி தொடங்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எங்கள் இசைக்குழுவில் இருந்தது மொத்தம் நாலு பேர் மட்டுமே. இந்தக் குழுவிற்கு சில நேரம் டாக்சி. சில நேரம் ஜட்கா (குதிரை வண்டி).
முன்பக்கம் வண்டி ஓட்டுபவரின் அருகே பாஸ்கர் உட்கார, ஆர்மோனியம், தபேலா, கிடாரை வைத்துக்கொண்டு அமர் (கங்கை அமரன்) உட் கார, பின்னே நானும் அண்ணனும் கால்களை தொங்கப்போட்டபடி உட்கார்ந்து கொள்வோம்.
முதல் கச்சேரி முடிந்ததும், ஜட்காவை கூப்பிட்டு வாத்தியங்களை எடுத்து வைத்து உட்கார்ந்து வண்டி ஓடத்தொடங்கும்போது, ஒரு கூட்டம் அப்படியே ஜட்காவை பின்தொடர்ந்தபடி ஓடிவரும்; அடுத்த கச்சேரியை கேட்பதற்காக.
அடுத்த கச்சேரியிலும் இதே நிலைதான் தொடரும்.
காங்கிரஸ் தொண்டர்களுக்கோ, அடுத்த கட்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவது பொறுக்கவில்லை.
ஒருநாள் செல்லூரில் கைத்தறி நெசவாளர் வசிக்கும் பகுதியில் கச்சேரி. மூன்று தெருக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் மேடை போட்டிருந்தார்கள். அங்கு வாழ்ந்த அத்தனை நெசவாளர்களும் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று தெருக்களிலுமே ஏகப்பட்ட கூட்டம். ஒழுங்காக அமர்ந்து கச்சேரி கேட்கத் தயாரானார்கள்.
பேச்சாளர்கள் பேசி, அடுத்து பாவலரின் இசை நிகழ்ச்சி என்று அறிவித்ததும், மக்கள் உற்சாகமாக கைதட்டினார்கள்.
நாங்கள் அமர்ந்து `டைட்டில் மியூசிக்' வாசித்து இரண்டு மூன்று பாடல்களை அண்ணன் பாடியிருப்பார். அனைவருக்கும் வணக்கும் சொல்லும் பாடலில், "கடந்த தேர்தலில் காளை மாட்டுக்கு ஓட்டுப்போடாம விட்டவர்க்கும் வணக்கம்'' என்றார். கைதட்டல் சத்தம் வானை எட்டியது.
கைதட்டு அடங்கும் முன் "அந்தக் காளை மாட்டுக்கு ஓட்டுப்போட்டதை எண்ணி இப்போ கவலைப் படுவோர்க்கும் வணக்கம்'' என்றார். இதற்கும் பலத்த கரகோஷம்.
இப்படி அண்ணன் இரண்டொரு பாடல்களை பாடி முடித்திருந்த வேளையில் திடீரென ஒரு போலீஸ் "வேன்'' எங்கள் கச்சேரி நடக்கும் இடம் அருகே வந்து நின்றது.
போலீஸ் வேனில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீசார் பத்துப்பேருக்கு மேல் வரிசையாக அணிவகுத்து, மேடையை நோக்கி சரசரவென வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக இன்ஸ்பெக்டர் நடராஜன் என்பவர் வந்தார். எல்லாரும் வந்து மேடையை சுற்றி வளைத்து நின்றார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டர், அண்ணன் பாவலரைப் பார்த்து, "பாவலர்! நீங்கள் பாடக்கூடாது'' என்றார்.
"எதுக்கு?'' - பாவலர் கேட்டார்.
"நீங்க மைக் செட் வைத்துக்கொள்ள போலீஸ் பெர்மிஷன் வாங்கவில்லை'' என்றார், இன்ஸ்பெக்டர்.
"அப்படியா?'' என்று சாதாரணமாக கூறிய அண்ணன், ஒலிபெருக்கி வைப்பவரை பார்த்து, "மைக்கை ஆப் பண்ணுப்பா''
என்றார்.மைக்செட்காரரும் அப்படியே செய்தார்.
இப்போது அண்ணன் எங்களைப் பார்த்தார், "டேய், வாசிங்கடா!'' என்றார்.
நாங்கள் ரெடியானோம். அண்ணன் `மைக்' இல்லாமல் பாடத்தொடங்கி விட்டார். கூட்டம் அமைதியாக கேட்டது. நாங்களோ `இன்று கம்யூனிஸ்டு கட்சிக்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலில் நம் பெயரும் இடம் பெறப்போகிறது' என்று வீராவேசத்துடன் வாத்தியங்களை
அழுத்தினோம்.இன்ஸ்பெக்டரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பாவலர் அண்ணன் பேசத்தொடங்கினார். "பார்த்தீங்களா? கமëயூனிஸ்டு கட்சிக்கு மக்கள் கூடுவதைக்காண காங்கிரசுக்கு மனம் பொறுக்கவில்லை. கல்யாணத்தில், மணவறைப் பலகையை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடும் என்ற சினிமாக் காமெடி போல, இங்கே மைக்செட்டை பிடுங்கி விட்டால் பாட்டு எப்படி நடக்கும் என்று காமெடி செய்கிறார்கள்''
என்றார்.இதற்கு மக்கள் சத்தம் போட்டு சிரிக்க, "இப்படிப்பட்ட கட்சிக்கா உங்கள் ஓட்டு?'' என்றும் சமயம் பார்த்து ஆணியடித்தார். "இல்லை, இல்லை!'' என்று கூட்டம் கைதட்டியது.
மைக் இல்லாமலே அடுத்த கச்சேரிக்கு கிளம்பியபோது, கூட்டம் முழுவதும் ஜட்கா பின்னால் ஓடிவந்தது.
எந்த ஒரு இசைக்கலைஞன் சரித்திரத்திலும் காணக்கிடைக்காதது இப்படியொரு நிகழ்ச்சி. இதில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.
நாடகம் நடத்திய காலத்திலேயே, பாட்டு எழுதவும், இசை அமைக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார், இளையராஜா.
நாடகம் நடத்திய காலத்திலேயே, பாட்டு எழுதவும், இசை அமைக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார், இளையராஜா.
நாடக அனுபவங்கள் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-
"நாடகத்தின் ஒரு காட்சிக்காக எனது டி-ஷர்ட்டை வாங்கி பாரதிராஜா போட்டுக்கொண்டு, நாடகத்திலும் நடித்துவிட்டு வந்தார். அதுமுதலே எனக்குள் `நான் போட்டிருப்பது பாரதிராஜாவின் ஷர்ட் என்று யாராவது நினைத்துக்கொண்டு விட்டால் என்னாவது?' என்ற கேள்வி எழுந்தபடி இருந்தது.
இப்படி நினைத்த நான் அடுத்த கணமே யாரும் எதிர்பாராத விதமாய் ஒரு காரியம் செய்தேன். நாடகத்தில் ஒரு சீனில் சம்பந்தமே இல்லாமல் நான் போய் நின்றேன்.
என்னைப் பார்த்ததும் பாரதிராஜா திகைத்துப் போனார். `இவன் எதற்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்...' என்ற கேள்வி அவர் கண்களில் தெரிந்தது. அவர் பேசத்தொடங்குவதற்குள், "செருப்புக்கு பாலீஷ் போடு'' என்று சொன்னேன்.
"இதெல்லாம் செருப்பா?'' என்று நக்கலாக கேட்டார் பாரதிராஜா.
"ஏய் அதைவிடு! உனக்கென்ன கூலி? அதைச் சொல்'' என்றேன்.
செருப்புக்கு பாலீஷ் போடுவது போல் நடித்துக்கொண்டிருந்த பாரதிராஜா, "நாலணா கொடு'' என்றார். குரலில் இளக்காரம்
தெரிந்தது.நானும் விடவில்லை. "இந்தா எட்டணா'' என்று பாக்கெட்டில் அடுத்த நாள் டிபன் சாப்பிட வைத்திருந்த எட்டணாவை தூக்கிப்போட்டேன். அதோடு இன்னொரு வெடிகுண்டையும் போட்டேன். "இந்தக் காலத்துல யார் டி-ஷர்ட் போடுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. கண்ட பசங்கள்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று நான் பேசிக்கொண்டே புறப்பட, பாரதிராஜா முறைத்த முறைப்பு இருக்கிறதே, அப்பப்பா!
அடுத்த நாள் காலையில் அதே டி-ஷர்ட்டுடன் அல்லி நகர வீதியில் உலவினேன். கூடவே பாஸ்கர் மட்டுமல்ல, பாரதிராஜாவும் என்னுடன் வந்தார், முந்தின நாள் நாடகத்தில் நான் செய்த குறும்பை முற்றிலும் மறந்தவராய்.
பழனி செட்டிபட்டி சவுடாம்பிகை கோவிலில் நாடகம் போடும் வாய்ப்பு பாரதிராஜாவுக்கு கிடைத்தது. அதே நாடகத்தை அல்லி நகரத்திலும் போட முடிவு செய்தார்.
நாடகத்தில் நடிக்க மதுரை நடிகைகள் யாரும் கிடைக்கவில்லை. தேனியில் ஒரு நடிகை இருந்தார். அவரை போய்ப் பார்த்து பேசி ஒப்பந்தம் செய்தார். நாடகத்துக்கு ஒரு நாள் முன்பே நாடகக் குழுவினர் அனைவரும் பழனி செட்டிபட்டி போய்விட்டோம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தார்கள்.
ஒத்திகை, சாப்பாடு, தங்கல் எல்லாம் அங்கேதான்.
இங்கே தான், தேனியில் இருந்து நடிக்க வந்த நடிகைக்கும் பாஸ்கருக்கும் நட்பாகி விட்டது.
தொழில் சார்ந்த நட்புதான். அதற்குக் காரணம், பாடத்தெரிந்த எந்த நடிகையானாலும், தபேலா, மிருதங்கம் வாசிப்பவர்களுடன் நட்பாகி விடுவார்கள். அவர்கள் பாடும்போது பக்க வாத்தியத்தை சரியாக வாசிக்காவிட்டால், அவர்கள் தாளம் தப்பிப்பாடுவது போலாகி விடுமே! இதனால், வாத்தியக்காரர்களோடு சுமூகமாகப் போவது நடிகைகளின் பழக்கம். இப்படியொரு நட்பாகி விட்டது தேனி நடிகைக்கும்
"நாடகத்திற்கு எல்லாப் பாடல்களும் நம் சொந்தப் பாடல்களாக இருக்கவேண்டும். சினிமாப் பாடல்களை உபயோகிக்கக்கூடாது'' என்று பாரதிராஜா சொன்னதால், "தாயே சவடம்மா ஒரு கை கொடம்மா! வாழ்க்கை கொடம்மா'' என்ற பாடலை கம்போஸ் செய்தேன். ஏற்கனவே "பூட் பாலிஷ்'' பாட்டும் இருக்கிறது. அதோடு காமெடிக்காக "தெய்வத்தாய்'' படத்தில் வரும் "இந்தப் புன்னகை என்ன விலை?'' என்ற டிïனில் -
"இந்த வெங்காயம் என்ன விலை? - அது
கடைக்காரன் சொன்ன விலை - இந்த
வெண்டைக்காய் என்ன விலை? - அது
மண்டையை பொளக்கிற விலை''
என்ற பாடலையும் தயார் செய்திருந்தேன். இது தவிர -
"வெண்ணிலவின் காவலிலே
கங்கை நதி ஓடும்
கங்கை நதி ஓரத்திலே
கண்ணன் மனம் பாடும்'' என்றொரு பாடலும், பாரதிராஜா சோகமாகப்பாட
"இரவு முடிந்து விடும்
இயற்கை விடிந்து விடும்
கனவும் கலைவதைப்போல்
காலம் முடிந்து விட்டால்'' என்ற பாடலும் (கங்கை) அமரன் எழுதி இசையமைத்திருந்தேன்.
பாடலை கற்றுக்கொள்ளும் நேரத்தில் பாஸ்கருடன் தொடங்கிய தேனி நடிகையின் நட்பு, அந்தப்பெண் நடிக்காத நேரத்தில் தபேலாவின் பக்கத்தில் - அதாவது பாஸ்கரின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது.
இதை எல்லாம் ஒத்திகையின்போது பார்க்க நேர்ந்த பாரதிராஜா, `இதை இப்படியே விட்டு வைக்கக்கூடாது' என்ற எண்ணத்தில் பாஸ்கரை தனியே அழைத்து கண்டித்துப் பார்த்தார். பாஸ்கர் கேட்டால்தானே.
மறுநாள் நாடகம். முந்தின நாள் இரவு பள்ளிக்கூடத்தில்தான் தங்கல்.
காலையில் நானும் பாரதியும் எழுந்த நேரத்தில், பாஸ்கரையும் அந்த நடிகையையும் காணவில்லை. பாஸ்கரும் நடிகையும் பள்ளியையொட்டி இருந்த வயல் வெளியின் வரப்பிலே, வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே பேசிக்கொண்டு வந்தார்கள்.
பாரதிராஜாவுக்கும் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் பயங்கரச் சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் எங்கள் எதிரே வந்துவிட்டார்கள். நடிகையை பாரதிராஜா கோபிக்க முடியாது. `கம்'மென்றிருந்தார்.
முகமெல்லாம் சிரிப்பாக எங்களை பாஸ்கர் பார்த்தார். "என்னய்யா, இந்நேரம் வரைக்குமா தூங்கறது? சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு `பைனல் ரிகர்சலுக்கு' ரெடியாக வேண்டாமா?'' என்று கேட்டார்.
"ம்...ம்...'' என்றார் பாரதி.
அந்த நடிகை போனதும், "எமகாதகப் பயடா நீ! சினிமாவில் காதலனும் காதலியும் வர்ற மாதிரி அப்படி என்னடா பேசிக்கிட்டு வந்தீங்க?'' என்று பாரதிராஜா கேட்டார்.
"அதெல்லாம் வெளியே சொல்ல முடியுமாய்யா? ஏதோ சின்னஞ்சிறுசுங்கன்னா அப்படித்தான் இருக்கும்'' என்று கூறினார், பாஸ்கர்!
"என்ன காதலா?'' - இது பாரதிராஜா.
"சீச்சீ'' - பாஸ்கர் பதில்!
"இன்னிக்கு நாடகம் முடியற வரைக்கும் நீ அவளோட பேசக்கூடாது'' - தடை உத்தரவு போட்டார், பாரதிராஜா.
"நான் பேசவில்லை. அந்த நடிகையா என்கிட்ட வந்து பேசினாங்கன்னா?'' என்று பாஸ்கர் திருப்பிக் கேட்க, மூன்று பேருமே விழுந்து விழுந்து சிரித்தோம்.
தெருமுனையில் அன்றிரவு நாடகம் நடந்தது. முதன் முதலாக ஒரு நாடகத்துக்கு இசையமைத்த அனுபவம், எனக்கு மகிழ்ச்சியானதாகவே இருந்தது. பாடல்களை மக்கள் விரும்பி ரசித்தார்கள்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? நான் சொந்தமாக போட்ட மெட்டில் உருவான பாடல்களை விட, "இந்த புன்னகை என்ன விலை?'' மெட்டில் அமைந்த "இந்த வெங்காயம் என்ன விலை?'' பாடலுக்குத்தான் அதிக கைதட்டல்!
நாடக அனுபவங்கள் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-
"நாடகத்தின் ஒரு காட்சிக்காக எனது டி-ஷர்ட்டை வாங்கி பாரதிராஜா போட்டுக்கொண்டு, நாடகத்திலும் நடித்துவிட்டு வந்தார். அதுமுதலே எனக்குள் `நான் போட்டிருப்பது பாரதிராஜாவின் ஷர்ட் என்று யாராவது நினைத்துக்கொண்டு விட்டால் என்னாவது?' என்ற கேள்வி எழுந்தபடி இருந்தது.
இப்படி நினைத்த நான் அடுத்த கணமே யாரும் எதிர்பாராத விதமாய் ஒரு காரியம் செய்தேன். நாடகத்தில் ஒரு சீனில் சம்பந்தமே இல்லாமல் நான் போய் நின்றேன்.
என்னைப் பார்த்ததும் பாரதிராஜா திகைத்துப் போனார். `இவன் எதற்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்...' என்ற கேள்வி அவர் கண்களில் தெரிந்தது. அவர் பேசத்தொடங்குவதற்குள், "செருப்புக்கு பாலீஷ் போடு'' என்று சொன்னேன்.
"இதெல்லாம் செருப்பா?'' என்று நக்கலாக கேட்டார் பாரதிராஜா.
"ஏய் அதைவிடு! உனக்கென்ன கூலி? அதைச் சொல்'' என்றேன்.
செருப்புக்கு பாலீஷ் போடுவது போல் நடித்துக்கொண்டிருந்த பாரதிராஜா, "நாலணா கொடு'' என்றார். குரலில் இளக்காரம்
தெரிந்தது.நானும் விடவில்லை. "இந்தா எட்டணா'' என்று பாக்கெட்டில் அடுத்த நாள் டிபன் சாப்பிட வைத்திருந்த எட்டணாவை தூக்கிப்போட்டேன். அதோடு இன்னொரு வெடிகுண்டையும் போட்டேன். "இந்தக் காலத்துல யார் டி-ஷர்ட் போடுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. கண்ட பசங்கள்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று நான் பேசிக்கொண்டே புறப்பட, பாரதிராஜா முறைத்த முறைப்பு இருக்கிறதே, அப்பப்பா!
அடுத்த நாள் காலையில் அதே டி-ஷர்ட்டுடன் அல்லி நகர வீதியில் உலவினேன். கூடவே பாஸ்கர் மட்டுமல்ல, பாரதிராஜாவும் என்னுடன் வந்தார், முந்தின நாள் நாடகத்தில் நான் செய்த குறும்பை முற்றிலும் மறந்தவராய்.
பழனி செட்டிபட்டி சவுடாம்பிகை கோவிலில் நாடகம் போடும் வாய்ப்பு பாரதிராஜாவுக்கு கிடைத்தது. அதே நாடகத்தை அல்லி நகரத்திலும் போட முடிவு செய்தார்.
நாடகத்தில் நடிக்க மதுரை நடிகைகள் யாரும் கிடைக்கவில்லை. தேனியில் ஒரு நடிகை இருந்தார். அவரை போய்ப் பார்த்து பேசி ஒப்பந்தம் செய்தார். நாடகத்துக்கு ஒரு நாள் முன்பே நாடகக் குழுவினர் அனைவரும் பழனி செட்டிபட்டி போய்விட்டோம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தார்கள்.
ஒத்திகை, சாப்பாடு, தங்கல் எல்லாம் அங்கேதான்.
இங்கே தான், தேனியில் இருந்து நடிக்க வந்த நடிகைக்கும் பாஸ்கருக்கும் நட்பாகி விட்டது.
தொழில் சார்ந்த நட்புதான். அதற்குக் காரணம், பாடத்தெரிந்த எந்த நடிகையானாலும், தபேலா, மிருதங்கம் வாசிப்பவர்களுடன் நட்பாகி விடுவார்கள். அவர்கள் பாடும்போது பக்க வாத்தியத்தை சரியாக வாசிக்காவிட்டால், அவர்கள் தாளம் தப்பிப்பாடுவது போலாகி விடுமே! இதனால், வாத்தியக்காரர்களோடு சுமூகமாகப் போவது நடிகைகளின் பழக்கம். இப்படியொரு நட்பாகி விட்டது தேனி நடிகைக்கும்
"நாடகத்திற்கு எல்லாப் பாடல்களும் நம் சொந்தப் பாடல்களாக இருக்கவேண்டும். சினிமாப் பாடல்களை உபயோகிக்கக்கூடாது'' என்று பாரதிராஜா சொன்னதால், "தாயே சவடம்மா ஒரு கை கொடம்மா! வாழ்க்கை கொடம்மா'' என்ற பாடலை கம்போஸ் செய்தேன். ஏற்கனவே "பூட் பாலிஷ்'' பாட்டும் இருக்கிறது. அதோடு காமெடிக்காக "தெய்வத்தாய்'' படத்தில் வரும் "இந்தப் புன்னகை என்ன விலை?'' என்ற டிïனில் -
"இந்த வெங்காயம் என்ன விலை? - அது
கடைக்காரன் சொன்ன விலை - இந்த
வெண்டைக்காய் என்ன விலை? - அது
மண்டையை பொளக்கிற விலை''
என்ற பாடலையும் தயார் செய்திருந்தேன். இது தவிர -
"வெண்ணிலவின் காவலிலே
கங்கை நதி ஓடும்
கங்கை நதி ஓரத்திலே
கண்ணன் மனம் பாடும்'' என்றொரு பாடலும், பாரதிராஜா சோகமாகப்பாட
"இரவு முடிந்து விடும்
இயற்கை விடிந்து விடும்
கனவும் கலைவதைப்போல்
காலம் முடிந்து விட்டால்'' என்ற பாடலும் (கங்கை) அமரன் எழுதி இசையமைத்திருந்தேன்.
பாடலை கற்றுக்கொள்ளும் நேரத்தில் பாஸ்கருடன் தொடங்கிய தேனி நடிகையின் நட்பு, அந்தப்பெண் நடிக்காத நேரத்தில் தபேலாவின் பக்கத்தில் - அதாவது பாஸ்கரின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது.
இதை எல்லாம் ஒத்திகையின்போது பார்க்க நேர்ந்த பாரதிராஜா, `இதை இப்படியே விட்டு வைக்கக்கூடாது' என்ற எண்ணத்தில் பாஸ்கரை தனியே அழைத்து கண்டித்துப் பார்த்தார். பாஸ்கர் கேட்டால்தானே.
மறுநாள் நாடகம். முந்தின நாள் இரவு பள்ளிக்கூடத்தில்தான் தங்கல்.
காலையில் நானும் பாரதியும் எழுந்த நேரத்தில், பாஸ்கரையும் அந்த நடிகையையும் காணவில்லை. பாஸ்கரும் நடிகையும் பள்ளியையொட்டி இருந்த வயல் வெளியின் வரப்பிலே, வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே பேசிக்கொண்டு வந்தார்கள்.
பாரதிராஜாவுக்கும் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் பயங்கரச் சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் எங்கள் எதிரே வந்துவிட்டார்கள். நடிகையை பாரதிராஜா கோபிக்க முடியாது. `கம்'மென்றிருந்தார்.
முகமெல்லாம் சிரிப்பாக எங்களை பாஸ்கர் பார்த்தார். "என்னய்யா, இந்நேரம் வரைக்குமா தூங்கறது? சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு `பைனல் ரிகர்சலுக்கு' ரெடியாக வேண்டாமா?'' என்று கேட்டார்.
"ம்...ம்...'' என்றார் பாரதி.
அந்த நடிகை போனதும், "எமகாதகப் பயடா நீ! சினிமாவில் காதலனும் காதலியும் வர்ற மாதிரி அப்படி என்னடா பேசிக்கிட்டு வந்தீங்க?'' என்று பாரதிராஜா கேட்டார்.
"அதெல்லாம் வெளியே சொல்ல முடியுமாய்யா? ஏதோ சின்னஞ்சிறுசுங்கன்னா அப்படித்தான் இருக்கும்'' என்று கூறினார், பாஸ்கர்!
"என்ன காதலா?'' - இது பாரதிராஜா.
"சீச்சீ'' - பாஸ்கர் பதில்!
"இன்னிக்கு நாடகம் முடியற வரைக்கும் நீ அவளோட பேசக்கூடாது'' - தடை உத்தரவு போட்டார், பாரதிராஜா.
"நான் பேசவில்லை. அந்த நடிகையா என்கிட்ட வந்து பேசினாங்கன்னா?'' என்று பாஸ்கர் திருப்பிக் கேட்க, மூன்று பேருமே விழுந்து விழுந்து சிரித்தோம்.
தெருமுனையில் அன்றிரவு நாடகம் நடந்தது. முதன் முதலாக ஒரு நாடகத்துக்கு இசையமைத்த அனுபவம், எனக்கு மகிழ்ச்சியானதாகவே இருந்தது. பாடல்களை மக்கள் விரும்பி ரசித்தார்கள்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? நான் சொந்தமாக போட்ட மெட்டில் உருவான பாடல்களை விட, "இந்த புன்னகை என்ன விலை?'' மெட்டில் அமைந்த "இந்த வெங்காயம் என்ன விலை?'' பாடலுக்குத்தான் அதிக கைதட்டல்!
சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.
சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், பாவலரை ஏற்கனவே அறிந்திருந்த கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் ஒரு டேப் ரிக்கார்டரை கொடுத்தார்.
"இந்த டேப் ரிக்கார்டர் உங்களிடமே இருக்கட்டும்'' என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கொடுத்தார். இது அவருக்கு கோவை விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி.நாயுடு கொடுத்தது என்பதையும் அறிந்து கொண்டோம்.
இந்த டேப் ரிக்கார்டர் வந்த பிறகு, எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகி விட்டது. தலைவர்களின் பேச்சையும், எங்களின் கச்சேரியையும் போட்டுப் போட்டுக் கேட்போம். கைதட்டல் ஒலி ஆரவாரத்துடன் எங்கள் கச்சேரிக்கு மக்கள் அளித்த வரவேற்பை `டேப்' வாயிலாக கேட்க நேர்ந்தபோது, உற்சாகம் அதிகமானது.
வீட்டில் அந்த டேப் ரிக்கார்டர் இருந்தபோது கிடார், புல்புல்தாரா, ஆர்மோனியம், பாங்கோ சகிதம் ஏதோவொன்றை வாசிப்பேன். அதை டேப்பில் பதிவு செய்து திரும்பக் கேட்கும்போது வேறு ஏதோ மாதிரி இருக்கும்.
இது எனக்குள் ஒரு புதிய இசைப்பரிமாணத்தை கொண்டு வந்தது. அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகளை டேப்பில் தொடர்ந்தேன்.
ஆனால், இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. "தலைவர் ஜீவானந்தம் கொடுத்த டேப் ரிக்கார்டரை கட்சி ஆபீசில் ஒப்படைக்கவும்'' என்று கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து கடிதம் வந்தது. அதே வேகத்தில், டேப் ரிக்கார்டரையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
அது வீட்டில் இருந்தபோது நானும் பாஸ்கரும் "மனோகரா'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'' படங்களில் சிவாஜி பேசிய வசனங்களை எங்கள் ஆக்ரோஷ குரலில் பேசி பதிவு செய்து கொள்வோம். பிறகு போட்டுக் கேட்போம். இதில் பாரதிராஜாவும் அவரது நண்பர் `டெய்லர்' மணியுடன் வந்து சேர்ந்து கொள்வார். பாரதிராஜா எழுதிய வசனத்தை அவரும், `டெய்லர்' மணியும் பேசி பதிவு செய்து போட்டுக்
கேட்பார்கள்.இப்படியெல்லாம் வசனம் பேசி, வசனம் பேசி கேட்டுப் பழகியதால்தான் அவருக்கு நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.
இதற்குப் பின்பே பழனி செட்டிப்பட்டி கோவில் திருவிழாவிலும், அல்லி நகரம் (பாரதிராஜாவின் சொந்த ஊர்) கோவில் திருவிழாவிலும் இரண்டு நாடகங்களை நடத்தினார், பாரதிராஜா.
நாடகத்தில் பாரதிராஜா நடிக்கவும் செய்தார். பாரதிராஜா மதுரை நடிகையுடன் பாடி நடிப்பதற்காக, சிவாஜி - பானுமதி நடித்த `அம்பிகாபதி' படப்பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'' என்ற பாடலை தேர்ந்தெடுத்தோம். நாடகத்தில் அப்போதெல்லாம் பெரும்பாலும் சினிமாப் பாடல்களையே பயன்படுத்துவார்கள்.
அல்லி நகரத்தில் நடந்த நாடகத்தில் மதுரையில் இருந்து நடிகைகள் சீன் செட்டிங்ஸ் மேக்கப்பிற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு பள்ளிக்கூடத்திலும், அரியநாயகம் என்பவர் வீட்டிலும் ஒத்திகை பார்த்தோம். "பூட் மேக்கர் பி.ஏ'' என்பது நாடகத்தின் பெயர். எனக்குத் தெரிந்து இதுதான் பாரதிராஜாவின் முதல் நாடக அரங்கேற்றம்.
பாரதிராஜா ஹீரோவாக - செருப்பு தைக்கும் "பி.ஏ'' பட்டதாரி இளைஞராக நடித்தார். நாடகத்தில் அவர் ரோட்டில் ஷூ பாலீஷ் போடுவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களை தவிர்த்து புதிதாக ஒரு பாடல் கம்போஸ் செய்யச் சொன்னார்.
சட்டென பாட்டு பிறந்தது. `பாலீஷ் பூட் பாலிஷ்' என்று தொடங்கி, "செருப்பப்பா இது செருப்பு! சுறுசுறுப்பா எனக்கிருப்பு'' என்று ஒரு பாடலை கம்போஸ் செய்தேன்.
இந்த காலக்கட்டத்தில் பாவலர் அண்ணனுடன் இடைவிடாத கச்சேரி இருக்கும். இப்படிப் போகும் ஊர்களில் புதிய நவநாகரீகம் எங்கள் உடைகளில் வெளிப்படும். புதிதாக உடையிலும், ஹேர்ஸ்டைலிலும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதற்கேற்ப நாங்கள் மாறி விடுவோம். அதாவது `லேட்டஸ்ட் பேஷன்' எது என்பதை எங்கள் ஆடை, தலைமுடி அறிவிக்கும். கவுபாய் பேண்ட், சம்மர் கிராப் போன்றவை அப்போது ஏற்பட்ட மாற்றங்கள்.
இப்படி லேட்டஸ்ட்டாக ஒரு "டீ'' சர்ட் அணிந்து நாடகத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். என் `டிசர்ட்' பாரதிராஜாவை கவர்ந்திருக்க வேண்டும். ஒரு சீனில் நடிக்கும்போது மேடையில் தோன்ற எனது `டிசர்ட்'டை கழற்றித் தரும்படி கேட்டார்.
நான் இதற்கு உடன்படுவேனா? ஷர்ட்டை கழற்றிவிட்டு வெறும் பனியனோடு ஆர்மோனியம் வாசிப்பதாவது? அதுவும் மதுரை நடிகைகள்
முன்பாக?ஷர்ட்டை தருவதற்கில்லை என்று நான் மறுக்க, பாரதி விடாப்பிடியாக ஷர்ட் வேண்டும் என்று அடம் பிடிக்க, ஒரு கட்டத்தில் என் பிடிவாதத்தைவிட பாரதிராஜாவின் பிடிவாதம் அதிகமாக ஷர்ட்டை கழற்றிக் கொடுத்தேன். ஆசைப்பட்டபடியே ஒரு சீனில் என் டிஷர்ட்டை போட்டு நடித்து விட்டு வந்தார் பாரதிராஜா.
இப்போது, எனக்கு புதுக்கவலை. இந்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டுதானே நாளை அல்லி நகர வீதிகளில் நடக்கவேண்டும். அப்படி யாராவது பார்த்தால், `இது பாரதிராஜாவின் ஷர்ட். அவர்தானே நாடகத்தில் இந்த ஷர்ட்டுடன் தோன்றினார்' என்று எண்ணி, என்னை "இரவல் சட்டைக்காரன்'' என்று நினைத்துவிட்டால் என்னாவது?
இதோ இப்போதே இது என் ஷர்ட்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கொரு ஐடியாவும் வந்தது.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், பாவலரை ஏற்கனவே அறிந்திருந்த கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் ஒரு டேப் ரிக்கார்டரை கொடுத்தார்.
"இந்த டேப் ரிக்கார்டர் உங்களிடமே இருக்கட்டும்'' என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கொடுத்தார். இது அவருக்கு கோவை விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி.நாயுடு கொடுத்தது என்பதையும் அறிந்து கொண்டோம்.
இந்த டேப் ரிக்கார்டர் வந்த பிறகு, எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகி விட்டது. தலைவர்களின் பேச்சையும், எங்களின் கச்சேரியையும் போட்டுப் போட்டுக் கேட்போம். கைதட்டல் ஒலி ஆரவாரத்துடன் எங்கள் கச்சேரிக்கு மக்கள் அளித்த வரவேற்பை `டேப்' வாயிலாக கேட்க நேர்ந்தபோது, உற்சாகம் அதிகமானது.
வீட்டில் அந்த டேப் ரிக்கார்டர் இருந்தபோது கிடார், புல்புல்தாரா, ஆர்மோனியம், பாங்கோ சகிதம் ஏதோவொன்றை வாசிப்பேன். அதை டேப்பில் பதிவு செய்து திரும்பக் கேட்கும்போது வேறு ஏதோ மாதிரி இருக்கும்.
இது எனக்குள் ஒரு புதிய இசைப்பரிமாணத்தை கொண்டு வந்தது. அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகளை டேப்பில் தொடர்ந்தேன்.
ஆனால், இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. "தலைவர் ஜீவானந்தம் கொடுத்த டேப் ரிக்கார்டரை கட்சி ஆபீசில் ஒப்படைக்கவும்'' என்று கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து கடிதம் வந்தது. அதே வேகத்தில், டேப் ரிக்கார்டரையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
அது வீட்டில் இருந்தபோது நானும் பாஸ்கரும் "மனோகரா'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'' படங்களில் சிவாஜி பேசிய வசனங்களை எங்கள் ஆக்ரோஷ குரலில் பேசி பதிவு செய்து கொள்வோம். பிறகு போட்டுக் கேட்போம். இதில் பாரதிராஜாவும் அவரது நண்பர் `டெய்லர்' மணியுடன் வந்து சேர்ந்து கொள்வார். பாரதிராஜா எழுதிய வசனத்தை அவரும், `டெய்லர்' மணியும் பேசி பதிவு செய்து போட்டுக்
கேட்பார்கள்.இப்படியெல்லாம் வசனம் பேசி, வசனம் பேசி கேட்டுப் பழகியதால்தான் அவருக்கு நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.
இதற்குப் பின்பே பழனி செட்டிப்பட்டி கோவில் திருவிழாவிலும், அல்லி நகரம் (பாரதிராஜாவின் சொந்த ஊர்) கோவில் திருவிழாவிலும் இரண்டு நாடகங்களை நடத்தினார், பாரதிராஜா.
நாடகத்தில் பாரதிராஜா நடிக்கவும் செய்தார். பாரதிராஜா மதுரை நடிகையுடன் பாடி நடிப்பதற்காக, சிவாஜி - பானுமதி நடித்த `அம்பிகாபதி' படப்பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'' என்ற பாடலை தேர்ந்தெடுத்தோம். நாடகத்தில் அப்போதெல்லாம் பெரும்பாலும் சினிமாப் பாடல்களையே பயன்படுத்துவார்கள்.
அல்லி நகரத்தில் நடந்த நாடகத்தில் மதுரையில் இருந்து நடிகைகள் சீன் செட்டிங்ஸ் மேக்கப்பிற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு பள்ளிக்கூடத்திலும், அரியநாயகம் என்பவர் வீட்டிலும் ஒத்திகை பார்த்தோம். "பூட் மேக்கர் பி.ஏ'' என்பது நாடகத்தின் பெயர். எனக்குத் தெரிந்து இதுதான் பாரதிராஜாவின் முதல் நாடக அரங்கேற்றம்.
பாரதிராஜா ஹீரோவாக - செருப்பு தைக்கும் "பி.ஏ'' பட்டதாரி இளைஞராக நடித்தார். நாடகத்தில் அவர் ரோட்டில் ஷூ பாலீஷ் போடுவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களை தவிர்த்து புதிதாக ஒரு பாடல் கம்போஸ் செய்யச் சொன்னார்.
சட்டென பாட்டு பிறந்தது. `பாலீஷ் பூட் பாலிஷ்' என்று தொடங்கி, "செருப்பப்பா இது செருப்பு! சுறுசுறுப்பா எனக்கிருப்பு'' என்று ஒரு பாடலை கம்போஸ் செய்தேன்.
இந்த காலக்கட்டத்தில் பாவலர் அண்ணனுடன் இடைவிடாத கச்சேரி இருக்கும். இப்படிப் போகும் ஊர்களில் புதிய நவநாகரீகம் எங்கள் உடைகளில் வெளிப்படும். புதிதாக உடையிலும், ஹேர்ஸ்டைலிலும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதற்கேற்ப நாங்கள் மாறி விடுவோம். அதாவது `லேட்டஸ்ட் பேஷன்' எது என்பதை எங்கள் ஆடை, தலைமுடி அறிவிக்கும். கவுபாய் பேண்ட், சம்மர் கிராப் போன்றவை அப்போது ஏற்பட்ட மாற்றங்கள்.
இப்படி லேட்டஸ்ட்டாக ஒரு "டீ'' சர்ட் அணிந்து நாடகத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். என் `டிசர்ட்' பாரதிராஜாவை கவர்ந்திருக்க வேண்டும். ஒரு சீனில் நடிக்கும்போது மேடையில் தோன்ற எனது `டிசர்ட்'டை கழற்றித் தரும்படி கேட்டார்.
நான் இதற்கு உடன்படுவேனா? ஷர்ட்டை கழற்றிவிட்டு வெறும் பனியனோடு ஆர்மோனியம் வாசிப்பதாவது? அதுவும் மதுரை நடிகைகள்
முன்பாக?ஷர்ட்டை தருவதற்கில்லை என்று நான் மறுக்க, பாரதி விடாப்பிடியாக ஷர்ட் வேண்டும் என்று அடம் பிடிக்க, ஒரு கட்டத்தில் என் பிடிவாதத்தைவிட பாரதிராஜாவின் பிடிவாதம் அதிகமாக ஷர்ட்டை கழற்றிக் கொடுத்தேன். ஆசைப்பட்டபடியே ஒரு சீனில் என் டிஷர்ட்டை போட்டு நடித்து விட்டு வந்தார் பாரதிராஜா.
இப்போது, எனக்கு புதுக்கவலை. இந்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டுதானே நாளை அல்லி நகர வீதிகளில் நடக்கவேண்டும். அப்படி யாராவது பார்த்தால், `இது பாரதிராஜாவின் ஷர்ட். அவர்தானே நாடகத்தில் இந்த ஷர்ட்டுடன் தோன்றினார்' என்று எண்ணி, என்னை "இரவல் சட்டைக்காரன்'' என்று நினைத்துவிட்டால் என்னாவது?
இதோ இப்போதே இது என் ஷர்ட்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கொரு ஐடியாவும் வந்தது.
சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.
சிறு வயதில், பாரதிராஜாவுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித்திரிந்த நாட்களை இளையராஜா நினைவு கூர்ந்தார்.
அவர் கூறினார்:-
"ஊரில் வலம் வந்தாலும் திடீர் திடீரென கச்சேரி அழைப்புகளுக்கும் போய்வர வேண்டியிருக்கும். சில சமயங்களில் பாரதியும் எங்களுடன் கலந்து கொள்வார். மதுரையைச் சுற்றி கச்சேரி இருந்தால், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் வந்து சேர்ந்து
கொள்வார்.மதுரைக் கச்சேரி என்றால் கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் தங்குவோம். கச்சேரிக்கு முன்போ, பின்போ மேட்னி, நைட்ஷோ என்று பார்ப்பதுண்டு. பார்த்த படம் பற்றி விடிய விடிய விமர்சனம் தொடரும்.
மதுரை வீதிகளில் நானும் பாரதியும் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. நானும் அவரும் எந்த திட்டமும் இல்லாமல் வீதியில் சும்மா நடந்து போய்க்கொண்டிருப்போம். அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் திடீரென்று ஒரு ஐடியா வரும். அப்போது தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு வருகிற பஸ்சை அது எந்த ஊருக்குப் போகிற பஸ் என்றுகூட பார்க்காமல் கையைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொள்வோம். அப்படி ஏறும்போது, `இது எந்த ஊருக்குப் போகிறது' என்று கேட்போம். ஏதோ ஒரு ஊரைச் சொல்வார்கள். `அப்படியென்றால் நாம் போகவேண்டிய ஊர் வழியாகத்தானே இந்தப் பஸ் போகும். அங்கே இறங்கிக் கொள்வோமே' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.
அந்த பஸ் எங்கேயோ சுற்றி ஏதோ கிராமத்துக்குள் நுழையும். அங்கே திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் இறங்கி விடுவோம்.
முன்பின் அறிமுகம் இல்லாத அந்த சிறிய ஊரில் எங்களை பார்ப்பவர்கள், "இது யார்டா? புதுசா ரெண்டு பேர்?'' என்கிற மாதிரி பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களில் யாராவது, எங்களை யாரென்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களிடம் வந்தால், நாங்களாக முந்திக்கொண்டு பேசத்தொடங்கி விடுவோம். "ஏண்ணே! மீசைக்காரர் வேலுச்சாமி அண்ணன் வீடு எதுண்ணே?'' என்று கேட்போம்.
"மீசை வேலுச்சாமியா? அப்படி யாருமே இங்கே இல்லையே?'' என்பார்கள்.
இந்த இடத்தில், புதியவர்களுக்கு பதில் சொல்லும் நல்ல நோக்கத்தில் ஊரில் உள்ள வேறு சிலரும் கலந்து கொண்டு விளக்கம் சொல்ல முற்படுவார்கள். வீடுகளில் இருக்கும் தாய்மார்களும், பெண்களும்கூட எட்டிப் பார்ப்பார்கள். தங்களுக்குத் தெரிந்த எதையாவது எங்களுக்கு உதவும் நோக்கத்தில் சொல்லவும் செய்வார்கள்.
எல்லாவற்றையும் கேட்பது போல் பாவனை செய்துவிட்டு, "அப்போ இது புதுப்பட்டிதானே'' என்போம்.
"ஆமாம்'' என்பார்கள்.
உடனே முகத்தை குழந்தைத்தனமாக வைத்துக்கொண்டு, "வாடிப்பட்டி புதுப்பட்டிதானே'' என்போம். முகத்தில், எதுவுமே தெரியாத அப்பாவித்தனம் குடிகொண்டிருக்கும்.
உடனே அவர்கள் அக்கறையுடன் "இல்லையே! வாடிப்பட்டி இங்கேயிருந்து பத்து மைல். அதுக்குப் பக்கத்துலதானே அந்தப் புதுப்பட்டி இருக்குது'' என்பார்கள்.
நாங்கள் கொஞ்சம் ஏமாந்தது போல் நடித்து, "அப்ப இது அந்தப் புதுப்பட்டி இல்லையா?'' என்போம்.
இப்போது அவர்களிடம் ஒரு `அச்சச்சோ' அனுதாபம் தெரியும்.
"சரி! அடுத்த பஸ் எப்போ வரும்?'' என்று கேட்போம்.
"அது ராத்திரி 7 மணிக்குத்தானே வரும். அதுவும் பெரிய குளம் பஸ்'' என்பார்கள்.
"அப்படியா? அப்போ ரொம்ப லேட்டாயிடுமே, என்னய்யா பண்றது?'' என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். பிறகு எதுவும் பேசாமல், அந்த ஊரை விட்டு வெளியே வந்து சிரிப்போம். பாருங்கள்... அப்படியொரு சிரிப்பு!
வயலில் வேலை செய்பவர்கள் எங்கள் சிரிப்பைக் கேட்ட மாத்திரத்தில் "யாரோ வெளிïர் பசங்க போல இருக்காங்க'' என்பார்கள்.
"ரோட்டுல சிரி சிரின்னு சிரிச்சிட்டுப் போறதைப் பாரேன்'' என்று சில குரல்கள் ஒலிக்கும்.
சிலர் மட்டும் எங்கள் சீரியசான சிரிப்பை சிரித்த முகமாய் பார்த்து விட்டுப் போவார்கள்.
அப்புறம் எங்கேயோ போய் மெயின் ரோட்டுக்கு வந்து மறுபடியும் கிடைக்கிற ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி எங்காவது போவோம்.
இப்படி நாங்கள் போகிற சில பஸ்களில் எங்களுக்கு பழக்கமான சில டிரைவர், கண்டக்டர் இருப்பார்கள். பஸ்சில் நாங்கள் அடிக்கடி கச்சேரிக்காக பயணம் செய்யும்போது இவர்கள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போயிருப்பார்கள். இப்படிப் போகிற போக்கில் எங்களுக்குத் தெரிந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் இருந்தால் தமாஷாகப் பேசுவார்கள். தெரிந்த கண்டக்டர்கள், "எங்கண்ணே டிக்கெட் கொடுக்கட்டும்?'' என்று கேட்பார்கள்.
"பஸ் எங்கே போகுதோ, அங்கே கொடுங்க'' என்போம், நாங்களும் தமாஷுக்கு குறைவில்லாமல்.
கண்டக்டரும் டிக்கெட் தர முயலும்போது, அது அதிகபட்சத் தொகையாக இருந்தால் கையில் இருக்கிற கொஞ்சப் பணமும் குறைந்து விடுமே. எனவே, ஒரு ஐடியா பண்ணுவோம். நான் பாரதியிடம் "ஏன்யா பர்ஸ் உங்கிட்டயா இருக்கு?'' என்று கேட்பேன்.
பதிலுக்கு பாரதி, "இல்லையே! காபி சாப்பிட்டுட்டு அப்பவே உன்கிட்டத்தானே கொடுத்தேன்'' என்பார்.
"ஏய் பொய் சொல்றியா? எங்கே உன் பாக்கெட்டைக்காட்டு'' என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் தேடுவேன்.
பஸ்சே இப்போது எங்களை வேடிக்கை பார்க்கும். பைக்குள் கிடைத்த பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து, "குறையும் பணத்தை அப்புறமாகக் கொடுத்து விடுகிறோம்'' என்போம்.
"அதுக்கென்னண்ணே! பரவாயில்லை'' என்று சொல்லியபடி டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்.
பெரியகுளம் போல ஒரு ஊரில் கடைசியாக பஸ் நிற்கும்போது எங்கள் கையில் காசில்லை என்று தெரிந்தால், கண்டக்டர் எங்களிடம் வந்து, "வாங்கண்ணே! டீ சாப்பிட்டுட்டுப் போவோம்'' என்பார்.
"வேணாம்ணே! அடுத்த பஸ்சில் அல்லி நகரம் போறோம்'' என்போம்.
ஓட்டலுக்கு அவர் பின்னாகவே போய் உட்கார்ந்தால், "ஒரு ஸ்பெஷல் தோசை'' என்று சர்வர் சத்தமாக யாருக்காகவோ ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பார்.
உடனே பாரதி, "ஒரு ஸ்பெஷல் என்னண்ணே! மூணு ஸ்பெஷல்'' என்பார். பிறகென்ன! கண்டக்டர் எங்களுக்கும் சேர்த்து பில்லுக்கு பணம் கொடுப்பார்.
அதோடு எங்களை விட்டு விடாமல், ஏதாவது ஒரு பஸ்சில் அந்த கண்டக்டரே சொல்லி எங்களை ஏற்றி விடுவார்.
அண்ணன் பாவலரும் பாஸ்கரும் அழகான கையெழுத்தைக் கொண்டவர்கள். போர்டெல்லாம் அழகாக பெயிண்டில் எழுதிக் கொடுப்பார்கள்.
ஒருமுறை பாவலர் அண்ணன் கச்சேரியில்லாத நாட்களில் பண்ணைபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 7 கிராமங்களின் வீடுகளுக்கும் `டோர் நம்பர்' எழுதும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து வந்துவிட்டார்.
ஒரு மாத காலம் இப்படி வீடு வீடாக நம்பர் எழுதப்போன நேரத்தில் மனிதர்களை விட எங்களை அதிகம் வரவேற்றது நாய்கள்தான்.
பாஸ்கரும் நானும் நம்பர் எழுதப் போய் பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. கையில் கறுப்பு-வெள்ளை பெயிண்ட் டப்பாவை நான் பிடித்துக்கொள்ள, பாஸ்கர் டோர் நம்பரை எழுதுவார்.
பழைய நம்பரை பார்த்து, அதன் மேலே வெள்ளைப் பெயிண்டால் வட்டம் போட்டு மறைத்து விட்டு, புதிதாக கறுப்பு பெயிண்டால் நம்பர் எழுதவேண்டும்.
கையில், உடம்பில், சட்டையில் அங்கங்கே பெயிண்ட் கறைகளும், பிரஷ் - எக்ஸ்ட்ரா பெயிண்ட் டப்பாக்களுடனும் நானும் பாஸ்கரும் நுழைவதை ஊர்க்காரர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த ஊர் நாய்கள் பார்த்து விடும்.
அவர் கூறினார்:-
"ஊரில் வலம் வந்தாலும் திடீர் திடீரென கச்சேரி அழைப்புகளுக்கும் போய்வர வேண்டியிருக்கும். சில சமயங்களில் பாரதியும் எங்களுடன் கலந்து கொள்வார். மதுரையைச் சுற்றி கச்சேரி இருந்தால், என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் வந்து சேர்ந்து
கொள்வார்.மதுரைக் கச்சேரி என்றால் கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் தங்குவோம். கச்சேரிக்கு முன்போ, பின்போ மேட்னி, நைட்ஷோ என்று பார்ப்பதுண்டு. பார்த்த படம் பற்றி விடிய விடிய விமர்சனம் தொடரும்.
மதுரை வீதிகளில் நானும் பாரதியும் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. நானும் அவரும் எந்த திட்டமும் இல்லாமல் வீதியில் சும்மா நடந்து போய்க்கொண்டிருப்போம். அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் திடீரென்று ஒரு ஐடியா வரும். அப்போது தான் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு வருகிற பஸ்சை அது எந்த ஊருக்குப் போகிற பஸ் என்றுகூட பார்க்காமல் கையைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொள்வோம். அப்படி ஏறும்போது, `இது எந்த ஊருக்குப் போகிறது' என்று கேட்போம். ஏதோ ஒரு ஊரைச் சொல்வார்கள். `அப்படியென்றால் நாம் போகவேண்டிய ஊர் வழியாகத்தானே இந்தப் பஸ் போகும். அங்கே இறங்கிக் கொள்வோமே' என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.
அந்த பஸ் எங்கேயோ சுற்றி ஏதோ கிராமத்துக்குள் நுழையும். அங்கே திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் இறங்கி விடுவோம்.
முன்பின் அறிமுகம் இல்லாத அந்த சிறிய ஊரில் எங்களை பார்ப்பவர்கள், "இது யார்டா? புதுசா ரெண்டு பேர்?'' என்கிற மாதிரி பார்ப்பார்கள். அப்படிப் பார்ப்பவர்களில் யாராவது, எங்களை யாரென்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் எங்களிடம் வந்தால், நாங்களாக முந்திக்கொண்டு பேசத்தொடங்கி விடுவோம். "ஏண்ணே! மீசைக்காரர் வேலுச்சாமி அண்ணன் வீடு எதுண்ணே?'' என்று கேட்போம்.
"மீசை வேலுச்சாமியா? அப்படி யாருமே இங்கே இல்லையே?'' என்பார்கள்.
இந்த இடத்தில், புதியவர்களுக்கு பதில் சொல்லும் நல்ல நோக்கத்தில் ஊரில் உள்ள வேறு சிலரும் கலந்து கொண்டு விளக்கம் சொல்ல முற்படுவார்கள். வீடுகளில் இருக்கும் தாய்மார்களும், பெண்களும்கூட எட்டிப் பார்ப்பார்கள். தங்களுக்குத் தெரிந்த எதையாவது எங்களுக்கு உதவும் நோக்கத்தில் சொல்லவும் செய்வார்கள்.
எல்லாவற்றையும் கேட்பது போல் பாவனை செய்துவிட்டு, "அப்போ இது புதுப்பட்டிதானே'' என்போம்.
"ஆமாம்'' என்பார்கள்.
உடனே முகத்தை குழந்தைத்தனமாக வைத்துக்கொண்டு, "வாடிப்பட்டி புதுப்பட்டிதானே'' என்போம். முகத்தில், எதுவுமே தெரியாத அப்பாவித்தனம் குடிகொண்டிருக்கும்.
உடனே அவர்கள் அக்கறையுடன் "இல்லையே! வாடிப்பட்டி இங்கேயிருந்து பத்து மைல். அதுக்குப் பக்கத்துலதானே அந்தப் புதுப்பட்டி இருக்குது'' என்பார்கள்.
நாங்கள் கொஞ்சம் ஏமாந்தது போல் நடித்து, "அப்ப இது அந்தப் புதுப்பட்டி இல்லையா?'' என்போம்.
இப்போது அவர்களிடம் ஒரு `அச்சச்சோ' அனுதாபம் தெரியும்.
"சரி! அடுத்த பஸ் எப்போ வரும்?'' என்று கேட்போம்.
"அது ராத்திரி 7 மணிக்குத்தானே வரும். அதுவும் பெரிய குளம் பஸ்'' என்பார்கள்.
"அப்படியா? அப்போ ரொம்ப லேட்டாயிடுமே, என்னய்யா பண்றது?'' என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். பிறகு எதுவும் பேசாமல், அந்த ஊரை விட்டு வெளியே வந்து சிரிப்போம். பாருங்கள்... அப்படியொரு சிரிப்பு!
வயலில் வேலை செய்பவர்கள் எங்கள் சிரிப்பைக் கேட்ட மாத்திரத்தில் "யாரோ வெளிïர் பசங்க போல இருக்காங்க'' என்பார்கள்.
"ரோட்டுல சிரி சிரின்னு சிரிச்சிட்டுப் போறதைப் பாரேன்'' என்று சில குரல்கள் ஒலிக்கும்.
சிலர் மட்டும் எங்கள் சீரியசான சிரிப்பை சிரித்த முகமாய் பார்த்து விட்டுப் போவார்கள்.
அப்புறம் எங்கேயோ போய் மெயின் ரோட்டுக்கு வந்து மறுபடியும் கிடைக்கிற ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி எங்காவது போவோம்.
இப்படி நாங்கள் போகிற சில பஸ்களில் எங்களுக்கு பழக்கமான சில டிரைவர், கண்டக்டர் இருப்பார்கள். பஸ்சில் நாங்கள் அடிக்கடி கச்சேரிக்காக பயணம் செய்யும்போது இவர்கள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போயிருப்பார்கள். இப்படிப் போகிற போக்கில் எங்களுக்குத் தெரிந்த கண்டக்டர்கள், டிரைவர்கள் இருந்தால் தமாஷாகப் பேசுவார்கள். தெரிந்த கண்டக்டர்கள், "எங்கண்ணே டிக்கெட் கொடுக்கட்டும்?'' என்று கேட்பார்கள்.
"பஸ் எங்கே போகுதோ, அங்கே கொடுங்க'' என்போம், நாங்களும் தமாஷுக்கு குறைவில்லாமல்.
கண்டக்டரும் டிக்கெட் தர முயலும்போது, அது அதிகபட்சத் தொகையாக இருந்தால் கையில் இருக்கிற கொஞ்சப் பணமும் குறைந்து விடுமே. எனவே, ஒரு ஐடியா பண்ணுவோம். நான் பாரதியிடம் "ஏன்யா பர்ஸ் உங்கிட்டயா இருக்கு?'' என்று கேட்பேன்.
பதிலுக்கு பாரதி, "இல்லையே! காபி சாப்பிட்டுட்டு அப்பவே உன்கிட்டத்தானே கொடுத்தேன்'' என்பார்.
"ஏய் பொய் சொல்றியா? எங்கே உன் பாக்கெட்டைக்காட்டு'' என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுத் தேடுவேன்.
பஸ்சே இப்போது எங்களை வேடிக்கை பார்க்கும். பைக்குள் கிடைத்த பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து, "குறையும் பணத்தை அப்புறமாகக் கொடுத்து விடுகிறோம்'' என்போம்.
"அதுக்கென்னண்ணே! பரவாயில்லை'' என்று சொல்லியபடி டிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்.
பெரியகுளம் போல ஒரு ஊரில் கடைசியாக பஸ் நிற்கும்போது எங்கள் கையில் காசில்லை என்று தெரிந்தால், கண்டக்டர் எங்களிடம் வந்து, "வாங்கண்ணே! டீ சாப்பிட்டுட்டுப் போவோம்'' என்பார்.
"வேணாம்ணே! அடுத்த பஸ்சில் அல்லி நகரம் போறோம்'' என்போம்.
ஓட்டலுக்கு அவர் பின்னாகவே போய் உட்கார்ந்தால், "ஒரு ஸ்பெஷல் தோசை'' என்று சர்வர் சத்தமாக யாருக்காகவோ ஆர்டர் கொடுத்துக் கொண்டிருப்பார்.
உடனே பாரதி, "ஒரு ஸ்பெஷல் என்னண்ணே! மூணு ஸ்பெஷல்'' என்பார். பிறகென்ன! கண்டக்டர் எங்களுக்கும் சேர்த்து பில்லுக்கு பணம் கொடுப்பார்.
அதோடு எங்களை விட்டு விடாமல், ஏதாவது ஒரு பஸ்சில் அந்த கண்டக்டரே சொல்லி எங்களை ஏற்றி விடுவார்.
அண்ணன் பாவலரும் பாஸ்கரும் அழகான கையெழுத்தைக் கொண்டவர்கள். போர்டெல்லாம் அழகாக பெயிண்டில் எழுதிக் கொடுப்பார்கள்.
ஒருமுறை பாவலர் அண்ணன் கச்சேரியில்லாத நாட்களில் பண்ணைபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 7 கிராமங்களின் வீடுகளுக்கும் `டோர் நம்பர்' எழுதும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து வந்துவிட்டார்.
ஒரு மாத காலம் இப்படி வீடு வீடாக நம்பர் எழுதப்போன நேரத்தில் மனிதர்களை விட எங்களை அதிகம் வரவேற்றது நாய்கள்தான்.
பாஸ்கரும் நானும் நம்பர் எழுதப் போய் பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. கையில் கறுப்பு-வெள்ளை பெயிண்ட் டப்பாவை நான் பிடித்துக்கொள்ள, பாஸ்கர் டோர் நம்பரை எழுதுவார்.
பழைய நம்பரை பார்த்து, அதன் மேலே வெள்ளைப் பெயிண்டால் வட்டம் போட்டு மறைத்து விட்டு, புதிதாக கறுப்பு பெயிண்டால் நம்பர் எழுதவேண்டும்.
கையில், உடம்பில், சட்டையில் அங்கங்கே பெயிண்ட் கறைகளும், பிரஷ் - எக்ஸ்ட்ரா பெயிண்ட் டப்பாக்களுடனும் நானும் பாஸ்கரும் நுழைவதை ஊர்க்காரர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அந்த ஊர் நாய்கள் பார்த்து விடும்.
இளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி? இளையராஜா வெளியிடும் தகவல்கள் சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள். இவர்களுக்கிடையே நட்புறவு ஏற்பட்டதே சுவையான கதை. அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
இளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி? இளையராஜா வெளியிடும் தகவல்கள் சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.
இவர்களுக்கிடையே நட்புறவு ஏற்பட்டதே சுவையான கதை. அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"என் இளமைக்கால தோழர்கள் என்றால் அதில் முதல் இடம் கரியணம்பட்டி சுப்பிரமணியத்துக்குத்தான். பலரும் இருந்தார்கள் என்றாலும் மிகவும் உயர்ந்த நட்பு இவருடன்தான் இருந்தது. ஜெயகரன், ரங்கசாமி, மகேஸ்வரன் என்பவர்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு.
சுப்பிரமணியுடன் ஆறு, ஏழு, எட்டு என ஒன்றாகப் படித்த பின்னே, அவர் பெரியகுளம் ஆஸ்டலில் தங்கிப் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர், அப்போதிருந்த "பி.ï.சி'' முடித்து ஊருக்கு வந்த நேரத்தில்தான் எங்கள் நட்பு வலுத்தது.
இந்த நேரத்தில்தான் இந்திய அரசு "என்.எம்.இ.பி'' என்றொரு அமைப்பை தொடங்கியிருந்தது. இது மலேரியா காய்ச்சல் வரும் முன் காக்கும் அமைப்பு.
கிராமங்களுக்குப்போய் வீடு வீடாக இருப்பவர்களிடம் ரத்தம் எடுப்பார்கள். அதை பரிசோதனைக்கு வத்தலக்குண்டுக்கு அனுப்புவார்கள். இந்த சோதனையில் மலேரியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் கொடுப்பார்கள்.
இந்த வேலையை பார்ப்பதற்காக எங்கள் ஊர் பண்ணைபுரத்தை சென்டராக்கி 7 கிராமங்களுக்கு மூன்று பேர் இருந்தார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக இன்ஸ்பெக்டராக ஒரு ஆள் வந்தார்.
ஒருநாள் தற்செயலாக நானும், அண்ணன் பாஸ்கரும் பண்ணைபுரம் அத்தி மர பஸ் ஸ்டாண்ட் பக்கமாய் போய்க்கொண்டிருந்தோம். பஸ்சில் இருந்து பேண்ட் - ஷர்ட்டுடன் இறங்கிய ஒருவர், எங்களைக் கடந்து ஊருக்குள் போனார்.
"அது யார்றா பேண்ட் - ஷர்ட் போட்டுக்கிட்டு நம்ம ஊருக்கு வர்றது?'' என்று எங்களுக்குள் கேட்டுக்கொண்டோம். உடனே விடை கிடைக்கவில்லை. மதிய உணவு முடிந்து சாயங்காலம் காபி சாப்பிட கடைத் தெருவுக்குப் போனால் அங்கே பாஸ்கரும், காலையில் பார்த்த பேண்ட் - ஷர்ட் ஆளும் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் பாஸ்கர் "இவர்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிற என்.எம்.இ.பி. இன்ஸ்பெக்டர். பெயர் சின்னசாமி'' என்று அந்த புதியவரை அறிமுகப்படுத்தினார். நானும் உடனே கைகொடுத்து `ஹலோ சார்' என்று அறிமுகமாகிக் கொண்டேன்.
காபி குடித்து முடித்ததும் அப்படியே பேசிக்கொண்டே நடந்தபோது ஒரு மாதிரியான ரசனை உள்ளவராகத் தெரிந்தது.
மறுநாள் காலையில் கிணற்றடியில் குளிக்கப்போனோம். முதல் நாள் அவரை `சார்... சார்...' என்று அழைத்த பாஸ்கர், `ஏய், என்னப்பா' என்று மாற்றி, அதையும் தாண்டி `அடப்போய்யா' என்ற லெவலுக்கு நெருக்கமாகி விட்டார்.
நான் சிறுவன். நானும் பாஸ்கரும் அண்ணன் - தம்பி என்றாலும் நண்பர்கள் போலத்தான் பழகுவோம். இப்போது பிரச்சினை என்னவென்றால் சின்னச்சாமியுடன் பாஸ்கர் நெருக்கம் காட்டியதில் என்னை வெட்டி விட்டார். அவர்கள் போகிற இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்லமாட்டார்கள். மீறி அவர்களுடன் போக முயன்றால் "டேய், நீ சின்னப்பையன்! எங்களோடு வராதே!'' என்பார்கள்.
இந்த சின்னச்சாமி வேறு யாருமல்ல. பின்னாளில் சினிமா டைரக்டராக மாறி, `மண்வாசனை'யுடன் ரசிகர்கள் மனதில் குடிகொண்டுவிட்ட பாரதிராஜாதான்.
பண்ணைபுரத்திலேயே பாரதி ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டார். இன்ஸ்பெக்ஷனுக்கு போய்வரவேண்டும் என்று அவ்வப்போது புறப்பட்டுப்போவார்.
"என்னய்யா, பெரிய இன்ஸ்பெக்ஷன்? அப்புறம் போகலாம்'' என்பார், பாஸ்கர்,
"டூட்டியில் கரெக்டா இருக்கணும்'' என்பார், பாரதி. "நீயே இன்ஸ்பெக்டர்தானே. எப்ப வேணும்னாலும் போகலாமில்லே?'' - இது
பாஸ்கர்."மேல இருந்து யாராவது வந்து நான் மாட்டிக்கக் கூடாதில்லே?'' - இது பாரதி.
பாரதி அங்கே இங்கே இன்ஸ்பெக்ஷனுக்காக சுற்றுகிற நேரம்தவிர, மற்ற நேரங்களில் எங்களோடுதான் இருப்பார். எங்களோடுதான் சுற்றுவார். நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம்.
சீட்டாடுவது; சினிமாவுக்குப் போவது; பிடித்த நடிகர்கள் பற்றி பேசுவது; எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி அலசுவது; புளியந்தோப்பில் காக்கா குஞ்சு விளையாடுவது; கிணற்றில் நீச்சலில் தலைகீழாகத் தாவுவது; கிணற்றுக்குள்ளேயே ஒளிந்து பிடித்து விளையாடுவது என இப்படி நாங்கள் சுதந்திரப் பறவைகளாகத் திரிந்தோம்.
ஆனாலும் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை என்னை ஒதுக்கிவிடுவார்கள். `நீ சின்னப்பையன். எங்களுடன் வரக்கூடாது' என்று "தடா'' போடுவார்கள். நானும் ஒதுங்கி விடுவேன்.
`ஏன் இப்படி?' கேட்பீர்கள். அந்த நேரம் ஸ்கூல் முடிந்து மாணவிகள் வீடு வரும் நேரம்! இதுதான் காரணம்.
இப்படி `தடா' போட்டவர்கள் நாளடைவில் நான் வளர்ந்ததாக கருதினார்களோ என்னவோ, என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்.
பாரதி நன்றாக ஓவியம் வரைவார். நானும் கொஞ்சம் வரைவேன். எல்லாம் பென்சில் டிராயிங்தான். சமயத்தில் எங்கள் இருவருக்கும் ஓவியம் வரைவதில் போட்டி வந்துவிடும். யார் வரைவது நன்றாக இருக்கும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. இரண்டுமே நன்றாக
இருக்கும்.ஆனால் எனக்கு மட்டுமே தெரியும், பாரதி என்னைவிட நன்றாக ஓவியம் வரைவார் என்பது.
இப்படி எங்களுடன் தெருவில் ஆரம்பித்த நட்பு வீடு வரை வந்துவிட்டது. வீட்டுக்கும் வந்து, `ஜோக்' அடித்து கலகலப்பு ஏற்படுத்திவிட்டுப் போவார்.
ஆனால் இப்படி நெருக்கம் காட்டி பழகிய பாரதி என்னைவிட எங்களிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்தது. அதற்கு பாஸ்கர்தான் காரணம்.
பாஸ்கர் ஒருமுறை கோம்பை டூரிங் தியேட்டரில் படம் பார்க்க பாரதியை அழைத்துப்போனார். டிக்கெட் வாங்காமல் நண்பர்கள் மூலம் பெஞ்ச் டிக்கெட்டில் ஓசியில் படம் பார்க்க ஏற்பாடு செய்தார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, போதாத நேரம் செக்கிங் அதிகாரி வந்துவிட, பாரதிக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு வழியாக செக்கிங் பார்வைக்கு போகாமல் தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர், பாஸ்கரை கோபத்தில் திட்டித் தீர்த்துவிட்டார்.
அடுத்த நாள் காலையில் கடை வீதியில் டிபன் சாப்பிடப் போனால் அங்கிருந்தார். ஆனால் எங்களைப் பார்த்த பிறகும் பேசாமல் இருந்தார். "சரி; கோபம் போலிருக்கிறது'' என்றெண்ணி சாப்பிடும் நேரத்தில் மெள்ள பேச்சுக் கொடுத்தோம்.
அப்போதுகூட தீராத கோபத்துடன்தான் பாஸ்கரை பார்த்தபடி, "டேய் இவன் இருக்கானே...'' என்று ஆரம்பித்தார்.
ஆனால் அந்தக் கோபம் நிற்கவில்லை. பாஸ்கர் முகத்தைப் பார்த்ததும் புரையேறும் அளவுக்கு சிரிக்கத் தொடங்கி விட்டார். கூடவே நாங்களும் சேர்ந்து கொள்ள, நிறுத்த முடியாத சிரிப்பாகி விட்டது.
சிரிப்பு ஓய்ந்த நேரத்தில் பாஸ்கரிடம், "எப்படிய்யா உனக்கு இந்த மாதிரி ஒரு தைரியம் வந்தது?'' என்று கேட்டார்.
பாஸ்கர் அவரிடம், "இன்ஸ்பெக்டர் அய்யாவாச்சே! நல்ல படம் ஓடுது. அதைப் பார்க்கட்டுமேன்னு `ஓசி'யில ஏற்பாடு செய்தேன். ஆனா உன்னோட நேரம் சரியில்லை'' என்றார்.
பாரதியும் விடவில்லை. "ஏண்டா கூட்டிட்டுப்போனது நீ! ஆனால் என் நேரம் சரியில்லையா?'' என்று மடக்கினார்.
பாஸ்கரும் விடுவதாக இல்லை.
"இத்தனை நாள் நாங்க போயிருக்கோம். யாராவது செக்கிங் வந்தார்களா? அதென்ன நீ வந்தப்போ மட்டும் செக்கிங்? அப்ப உன் நேரம் சரியில்லையா? என் நேரம் சரியில்லையா?''
பாஸ்கர் விடாப்பிடியாகக் கேட்க, பாரதி அதற்கு சிரிக்க, கோபம் காணாமல் போயிருந்தது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளால் எங்கள் நட்பு மேலும் வலுப்பட்டது.
இவர்களுக்கிடையே நட்புறவு ஏற்பட்டதே சுவையான கதை. அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"என் இளமைக்கால தோழர்கள் என்றால் அதில் முதல் இடம் கரியணம்பட்டி சுப்பிரமணியத்துக்குத்தான். பலரும் இருந்தார்கள் என்றாலும் மிகவும் உயர்ந்த நட்பு இவருடன்தான் இருந்தது. ஜெயகரன், ரங்கசாமி, மகேஸ்வரன் என்பவர்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு.
சுப்பிரமணியுடன் ஆறு, ஏழு, எட்டு என ஒன்றாகப் படித்த பின்னே, அவர் பெரியகுளம் ஆஸ்டலில் தங்கிப் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர், அப்போதிருந்த "பி.ï.சி'' முடித்து ஊருக்கு வந்த நேரத்தில்தான் எங்கள் நட்பு வலுத்தது.
இந்த நேரத்தில்தான் இந்திய அரசு "என்.எம்.இ.பி'' என்றொரு அமைப்பை தொடங்கியிருந்தது. இது மலேரியா காய்ச்சல் வரும் முன் காக்கும் அமைப்பு.
கிராமங்களுக்குப்போய் வீடு வீடாக இருப்பவர்களிடம் ரத்தம் எடுப்பார்கள். அதை பரிசோதனைக்கு வத்தலக்குண்டுக்கு அனுப்புவார்கள். இந்த சோதனையில் மலேரியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் கொடுப்பார்கள்.
இந்த வேலையை பார்ப்பதற்காக எங்கள் ஊர் பண்ணைபுரத்தை சென்டராக்கி 7 கிராமங்களுக்கு மூன்று பேர் இருந்தார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக இன்ஸ்பெக்டராக ஒரு ஆள் வந்தார்.
ஒருநாள் தற்செயலாக நானும், அண்ணன் பாஸ்கரும் பண்ணைபுரம் அத்தி மர பஸ் ஸ்டாண்ட் பக்கமாய் போய்க்கொண்டிருந்தோம். பஸ்சில் இருந்து பேண்ட் - ஷர்ட்டுடன் இறங்கிய ஒருவர், எங்களைக் கடந்து ஊருக்குள் போனார்.
"அது யார்றா பேண்ட் - ஷர்ட் போட்டுக்கிட்டு நம்ம ஊருக்கு வர்றது?'' என்று எங்களுக்குள் கேட்டுக்கொண்டோம். உடனே விடை கிடைக்கவில்லை. மதிய உணவு முடிந்து சாயங்காலம் காபி சாப்பிட கடைத் தெருவுக்குப் போனால் அங்கே பாஸ்கரும், காலையில் பார்த்த பேண்ட் - ஷர்ட் ஆளும் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் பாஸ்கர் "இவர்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிற என்.எம்.இ.பி. இன்ஸ்பெக்டர். பெயர் சின்னசாமி'' என்று அந்த புதியவரை அறிமுகப்படுத்தினார். நானும் உடனே கைகொடுத்து `ஹலோ சார்' என்று அறிமுகமாகிக் கொண்டேன்.
காபி குடித்து முடித்ததும் அப்படியே பேசிக்கொண்டே நடந்தபோது ஒரு மாதிரியான ரசனை உள்ளவராகத் தெரிந்தது.
மறுநாள் காலையில் கிணற்றடியில் குளிக்கப்போனோம். முதல் நாள் அவரை `சார்... சார்...' என்று அழைத்த பாஸ்கர், `ஏய், என்னப்பா' என்று மாற்றி, அதையும் தாண்டி `அடப்போய்யா' என்ற லெவலுக்கு நெருக்கமாகி விட்டார்.
நான் சிறுவன். நானும் பாஸ்கரும் அண்ணன் - தம்பி என்றாலும் நண்பர்கள் போலத்தான் பழகுவோம். இப்போது பிரச்சினை என்னவென்றால் சின்னச்சாமியுடன் பாஸ்கர் நெருக்கம் காட்டியதில் என்னை வெட்டி விட்டார். அவர்கள் போகிற இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்லமாட்டார்கள். மீறி அவர்களுடன் போக முயன்றால் "டேய், நீ சின்னப்பையன்! எங்களோடு வராதே!'' என்பார்கள்.
இந்த சின்னச்சாமி வேறு யாருமல்ல. பின்னாளில் சினிமா டைரக்டராக மாறி, `மண்வாசனை'யுடன் ரசிகர்கள் மனதில் குடிகொண்டுவிட்ட பாரதிராஜாதான்.
பண்ணைபுரத்திலேயே பாரதி ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டார். இன்ஸ்பெக்ஷனுக்கு போய்வரவேண்டும் என்று அவ்வப்போது புறப்பட்டுப்போவார்.
"என்னய்யா, பெரிய இன்ஸ்பெக்ஷன்? அப்புறம் போகலாம்'' என்பார், பாஸ்கர்,
"டூட்டியில் கரெக்டா இருக்கணும்'' என்பார், பாரதி. "நீயே இன்ஸ்பெக்டர்தானே. எப்ப வேணும்னாலும் போகலாமில்லே?'' - இது
பாஸ்கர்."மேல இருந்து யாராவது வந்து நான் மாட்டிக்கக் கூடாதில்லே?'' - இது பாரதி.
பாரதி அங்கே இங்கே இன்ஸ்பெக்ஷனுக்காக சுற்றுகிற நேரம்தவிர, மற்ற நேரங்களில் எங்களோடுதான் இருப்பார். எங்களோடுதான் சுற்றுவார். நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம்.
சீட்டாடுவது; சினிமாவுக்குப் போவது; பிடித்த நடிகர்கள் பற்றி பேசுவது; எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி அலசுவது; புளியந்தோப்பில் காக்கா குஞ்சு விளையாடுவது; கிணற்றில் நீச்சலில் தலைகீழாகத் தாவுவது; கிணற்றுக்குள்ளேயே ஒளிந்து பிடித்து விளையாடுவது என இப்படி நாங்கள் சுதந்திரப் பறவைகளாகத் திரிந்தோம்.
ஆனாலும் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை என்னை ஒதுக்கிவிடுவார்கள். `நீ சின்னப்பையன். எங்களுடன் வரக்கூடாது' என்று "தடா'' போடுவார்கள். நானும் ஒதுங்கி விடுவேன்.
`ஏன் இப்படி?' கேட்பீர்கள். அந்த நேரம் ஸ்கூல் முடிந்து மாணவிகள் வீடு வரும் நேரம்! இதுதான் காரணம்.
இப்படி `தடா' போட்டவர்கள் நாளடைவில் நான் வளர்ந்ததாக கருதினார்களோ என்னவோ, என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்.
பாரதி நன்றாக ஓவியம் வரைவார். நானும் கொஞ்சம் வரைவேன். எல்லாம் பென்சில் டிராயிங்தான். சமயத்தில் எங்கள் இருவருக்கும் ஓவியம் வரைவதில் போட்டி வந்துவிடும். யார் வரைவது நன்றாக இருக்கும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. இரண்டுமே நன்றாக
இருக்கும்.ஆனால் எனக்கு மட்டுமே தெரியும், பாரதி என்னைவிட நன்றாக ஓவியம் வரைவார் என்பது.
இப்படி எங்களுடன் தெருவில் ஆரம்பித்த நட்பு வீடு வரை வந்துவிட்டது. வீட்டுக்கும் வந்து, `ஜோக்' அடித்து கலகலப்பு ஏற்படுத்திவிட்டுப் போவார்.
ஆனால் இப்படி நெருக்கம் காட்டி பழகிய பாரதி என்னைவிட எங்களிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்தது. அதற்கு பாஸ்கர்தான் காரணம்.
பாஸ்கர் ஒருமுறை கோம்பை டூரிங் தியேட்டரில் படம் பார்க்க பாரதியை அழைத்துப்போனார். டிக்கெட் வாங்காமல் நண்பர்கள் மூலம் பெஞ்ச் டிக்கெட்டில் ஓசியில் படம் பார்க்க ஏற்பாடு செய்தார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, போதாத நேரம் செக்கிங் அதிகாரி வந்துவிட, பாரதிக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு வழியாக செக்கிங் பார்வைக்கு போகாமல் தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர், பாஸ்கரை கோபத்தில் திட்டித் தீர்த்துவிட்டார்.
அடுத்த நாள் காலையில் கடை வீதியில் டிபன் சாப்பிடப் போனால் அங்கிருந்தார். ஆனால் எங்களைப் பார்த்த பிறகும் பேசாமல் இருந்தார். "சரி; கோபம் போலிருக்கிறது'' என்றெண்ணி சாப்பிடும் நேரத்தில் மெள்ள பேச்சுக் கொடுத்தோம்.
அப்போதுகூட தீராத கோபத்துடன்தான் பாஸ்கரை பார்த்தபடி, "டேய் இவன் இருக்கானே...'' என்று ஆரம்பித்தார்.
ஆனால் அந்தக் கோபம் நிற்கவில்லை. பாஸ்கர் முகத்தைப் பார்த்ததும் புரையேறும் அளவுக்கு சிரிக்கத் தொடங்கி விட்டார். கூடவே நாங்களும் சேர்ந்து கொள்ள, நிறுத்த முடியாத சிரிப்பாகி விட்டது.
சிரிப்பு ஓய்ந்த நேரத்தில் பாஸ்கரிடம், "எப்படிய்யா உனக்கு இந்த மாதிரி ஒரு தைரியம் வந்தது?'' என்று கேட்டார்.
பாஸ்கர் அவரிடம், "இன்ஸ்பெக்டர் அய்யாவாச்சே! நல்ல படம் ஓடுது. அதைப் பார்க்கட்டுமேன்னு `ஓசி'யில ஏற்பாடு செய்தேன். ஆனா உன்னோட நேரம் சரியில்லை'' என்றார்.
பாரதியும் விடவில்லை. "ஏண்டா கூட்டிட்டுப்போனது நீ! ஆனால் என் நேரம் சரியில்லையா?'' என்று மடக்கினார்.
பாஸ்கரும் விடுவதாக இல்லை.
"இத்தனை நாள் நாங்க போயிருக்கோம். யாராவது செக்கிங் வந்தார்களா? அதென்ன நீ வந்தப்போ மட்டும் செக்கிங்? அப்ப உன் நேரம் சரியில்லையா? என் நேரம் சரியில்லையா?''
பாஸ்கர் விடாப்பிடியாகக் கேட்க, பாரதி அதற்கு சிரிக்க, கோபம் காணாமல் போயிருந்தது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளால் எங்கள் நட்பு மேலும் வலுப்பட்டது.
அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.
அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.
குரு என்று தனியாக யாரும் இல்லாமலே, ஆர்மோனியத்தை கற்றுக்கொள்ளத் தொடங்கினார், இளையராஜா. கொஞ்சம் பழகிய நிலையில் கச்சேரியில் அவர் வாசிப்புக்கு கிடைத்த கைத்தட்டல், இதை முழுமையாக கற்றே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அவரை உந்தித் தள்ளியது.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"கச்சேரியில் கிடைத்த கரகோஷம் எனக்குள் புது உத்வேகம் ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் நான் ஆர்மோனியம் வாசிக்கப் பழகும் நேரம் அதிகமானது.
இதில் கூட இன்னொரு வித சிக்கல் இருந்தது. வாசித்து வாசித்துப் பழகி வந்தாலும் ராகங்களின் பெயர்கள் தெரிந்தாலும், ஸப்த ஸ்வரத்தில் எது `ஸ, ரி, க' என்று தெரியாது. எந்த ஸ்ருதியில் வாசிக்கிறோமோ அதுதான் `ஸ' என்று எண்ணிக் கொள்வேன். தெள்ளத் தெளிவாக தெரியாது. ஆனால் ஒரு முறைக்கு இரு முறை ஒரு பாடலைக் கேட்டால் போதும். முழுவதையும் வாசித்து விடுவேன்.
பிராக்டீசில் அதிக கவனம் இருந்ததால் சாதாரணமாகவே என் கைவிரல்கள் ஏதாவது பாடலுக்குத்தக்கபடி அசைந்து கொண்டிருக்கும். இது நாளடைவில் அதிகமாகி, ஒரு கட்டத்தில் நெஞ்சை ஆர்மோனியக் கட்டைகளாக நினைத்து, விரல்கள் அதில் மேலும் கீழும் போய்வரும் அளவுக்கு ஐக்கியமாகிவிட்டேன்.
தூங்கும்போதும் இது தொடர, ஒரு நாள் அம்மா கவனித்திருக்கிறார். காலையில் விடிந்ததும் விடியாததுமாக என்னிடம் வந்தவர், "ஏம்ப்பா! நேத்து தூங்கும்போது உன் நெஞ்சு மேலே விரலு மேலும் கீழுமா போச்சுதே! ஏதாவது ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரி கனவு கண்டியா?'' என்று கேட்டார்.
அம்மாவை சமாளித்து அனுப்பினேன். தூக்கத்திலும் என் பிராக்டீஸ் தொடர்ந்திருக்கிறது என்பது புரிந்தது.
நாங்கள் ஒரு குழுவாக ஆரம்பித்து, எங்கள் காலடி படாத சிற்றூரே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு, எல்லா இடங்களிலும் அண்ணனோடு எங்கள் இசை ஒலித்திருக்கிறது. அப்போது நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் எண்ணப் பிரதிபலிப்பை கண்ட பிறகுதான், எந்த மாதிரியான இசை விருப்பம் அவர்களுடையது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சினிமாவுக்கு வந்த பிறகு இசையால் மக்களைக் கவர, எது எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு பிடிமானம் கிடைத்தது.
எனக்கு கிடைத்த, அதாவது தானாக அமைந்த இந்த அனுபவங்கள், உலகின் எந்தவொரு இசைக் கலைஞனுக்கும் இதுவரை கிடைத்திராது. இனிமேல் எவருக்கும் கிடைக்காது என்று கூட சொல்வேன்.
கச்சேரியில் படிப்படியாக பக்குவப்பட்டேன். வழக்கமாக கச்சேரியில் அண்ணன் பாடும் ஒரு குறிப்பிட்ட ஸ்ருதியில்தான் நன்றாக பிராக்டீஸ் செய்து வைத்திருப்பேன். அதை வேறு ஏதாவது ஸ்ருதியில் வாசிக்கச் சொன்னால் தப்பும் தவறுமாகத்தான் வரும். ஆர்மோனியத்திலோ, பியானாவிலோ ஒரு ஸ்ருதிக்கு வந்த `விரல்வித்தை' இன்னொரு ஸ்ருதிக்கு வராது.
ஆனால் எல்லா ஸ்ருதியிலும் என்னைப் பழக்க, இசையே எனக்கொரு பரீட்சை வைத்தது.
எங்கள் கச்சேரி முதல் நாள் நாகர்கோவிலில் இருக்கும். மறுநாள் ஊட்டியில் இருக்கும். நாகர்கோவிலில் இரவு 10 மணிக்கு கச்சேரி முடிந்தால் அதற்கு மேல் ஊட்டி பஸ் இருக்காது. எப்படியோ அடித்துப் பிடித்து காலை 5 மணி பஸ்சைப் பிடித்து, திண்டுக்கல், அங்கிருந்து கோவை, அங்கிருந்து ஊட்டி என்று விழுந்தடித்து மாலை ஆறுமணிக்குள்ளாக போய்ச் சேர்ந்து விடுவோம்.
பயணத்தின்போது அண்ணனால் சரிவரத் தூங்க முடியாமல் சமயத்தில் குரல் சரியில்லாமல் போகும். இப்படி குரல் சரியில்லாத நாட்களில் `ஒரு அரைக்கட்டை கம்மி பண்ணு' என்று ஸ்ருதியை குறைக்கச் சொல்வார்.
அவருக்கு பிரச்சினை இல்லை. தபேலா வாசிக்கும் பாஸ்கருக்கும் பிரச்சினை இல்லை. எந்த ஸ்ருதி என்றாலும், கட்டையை தட்டி சேர்த்து விட்டால், தபேலாவில் விரல் அசைவு மாறப்போவதில்லை. நான்தான் மாட்டிக்கொள்வேன். தப்பும் தவறுமாக அந்த கச்சேரியை எப்படியாவது சமாளித்து விட்டு, அடுத்த நாள் பகல் முழுவதும் அந்த மாறிய `ஸ்ருதி'யில் பிராக்டீஸ் செய்வேன். ஓரளவு தயார் ஆகிவிடுவேன்.
இப்படியே கொஞ்ச நாள் ஓடும். பிறகு இன்னும் அரைக் கட்டை குறையும். அதிலும் இதே கதைதான்.
இதற்குள் புதிய பாடல்கள் ஏதாவது எழுதிச் சேர்த்தால், குறைந்த ஸ்ருதியிலேயே பிராக்டீஸ் செய்து கரெக்டாக ரெடியாகி இருப்பேன். அன்றைக்கென்று பார்த்து அண்ணன் "ஸ்ருதியை, பழைய ஸ்ருதிக்கு ஏற்றி வை'' என்பார்.
வம்புதான். மறுபடி அவசர கதியில் பதட்டமும் பரபரப்புமாய் `மாற்றல்' வேலையை தொடர்வேன்.
இன்றைக்கு என்னுடைய பல பாடல்களில் உருகி, கண்ணீர் விட்டு, துன்பமடைந்து, ஆறுதலடையும் ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இசையால், ஸ்ருதியால், வாசிக்க இயலாமையால் நான் எவ்வளவு துன்பப்பட்டு, தூக்கம் கெட்டு நொந்திருந்தேன் என்பது உங்களில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பெரும்பாலும் எங்கள் கச்சேரியில் சினிமா டிïன்களில்தான் அண்ணன் பாடல் எழுதிப்பாடுவார். இடையிடையே அவர் இசையமைத்த பாடல்களும் இடம் பெறும்.
என் வாழ்வில் அதிகப் படிப்பினைகள் தொடங்கிய நேரம் இதுதான் என்பேன்.
அண்ணனின் இசை நிகழ்ச்சிகளை மதுரை மாவட்ட கம்ïனிஸ்டு கட்சி அலுவலகம்தான் முடிவு செய்யும். கிரி என்பவர் அதை உறுதி செய்வார். அதன் பிறகே கச்சேரி நடக்கும். இதனால் கச்சேரி நடத்துவதில் ஒரு ஒழுங்கு ஏற்பட்டது. ஒரு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் ஆறேழு இடங்களில் கச்சேரி நடந்தால், அடுத்த வாரம் இன்னொரு மாவட்டம்.
தொடர்ந்து இப்படி இரண்டு மாவட்டங்களில் 15 நாட்கள் கச்சேரி செய்து விட்டு, அடுத்த கச்சேரிக்கான இடைவெளி நேரத்தில் எங்கள் ஊருக்கு (பண்ணைபுரம்) வந்து போவோம்.
அந்த நேரத்தில் அண்ணன் தன்னிடம் இருக்கும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பார். அம்மா அதை வீட்டுச் செலவுக்கு வைத்துக்
கொள்வார்கள்.அண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் சில நேரங்களில் அம்மாவிடம் பணம் கொடுக்க மறந்தோ அல்லது முடியாமலோ போனால் அம்மா வருந்துவார். ஒரு கட்டத்தில் இந்த வருத்தம், கோபத்தில் கொண்டு விட்டது. அண்ணன் பணம் கொடுக்காத ஒரு நாளில் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் வாக்குவாதம் வலுத்து, மனத்தாங்கலில் முடிந்த நேரத்தில், "இனி உன் பணத்தை என்னிடம் தரவேண்டாம். கச்சேரிக்காக நீ வாங்கும் பணத்தில் பாஸ்கருக்கும், ராஜையாவுக்கும் உள்ள பங்கை மட்டும் கொடுத்தால் போதும்'' என்று சொல்லி விட்டார்
அம்மா.அண்ணனுக்கும் அது நியாயமாகப் பட்டதால், அடுத்த கச்சேரியில் இருந்து அது அமுலுக்கு வந்தது. பாஸ்கருக்கும் எனக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு என்று ஒதுக்கப்பட்டது. அது பாஸ்கர் கையில் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஊர் வரும்போது அதை அம்மாவிடம் பாஸ்கர் கொடுத்துவிடுவான்.
குரு என்று தனியாக யாரும் இல்லாமலே, ஆர்மோனியத்தை கற்றுக்கொள்ளத் தொடங்கினார், இளையராஜா. கொஞ்சம் பழகிய நிலையில் கச்சேரியில் அவர் வாசிப்புக்கு கிடைத்த கைத்தட்டல், இதை முழுமையாக கற்றே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அவரை உந்தித் தள்ளியது.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"கச்சேரியில் கிடைத்த கரகோஷம் எனக்குள் புது உத்வேகம் ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் நான் ஆர்மோனியம் வாசிக்கப் பழகும் நேரம் அதிகமானது.
இதில் கூட இன்னொரு வித சிக்கல் இருந்தது. வாசித்து வாசித்துப் பழகி வந்தாலும் ராகங்களின் பெயர்கள் தெரிந்தாலும், ஸப்த ஸ்வரத்தில் எது `ஸ, ரி, க' என்று தெரியாது. எந்த ஸ்ருதியில் வாசிக்கிறோமோ அதுதான் `ஸ' என்று எண்ணிக் கொள்வேன். தெள்ளத் தெளிவாக தெரியாது. ஆனால் ஒரு முறைக்கு இரு முறை ஒரு பாடலைக் கேட்டால் போதும். முழுவதையும் வாசித்து விடுவேன்.
பிராக்டீசில் அதிக கவனம் இருந்ததால் சாதாரணமாகவே என் கைவிரல்கள் ஏதாவது பாடலுக்குத்தக்கபடி அசைந்து கொண்டிருக்கும். இது நாளடைவில் அதிகமாகி, ஒரு கட்டத்தில் நெஞ்சை ஆர்மோனியக் கட்டைகளாக நினைத்து, விரல்கள் அதில் மேலும் கீழும் போய்வரும் அளவுக்கு ஐக்கியமாகிவிட்டேன்.
தூங்கும்போதும் இது தொடர, ஒரு நாள் அம்மா கவனித்திருக்கிறார். காலையில் விடிந்ததும் விடியாததுமாக என்னிடம் வந்தவர், "ஏம்ப்பா! நேத்து தூங்கும்போது உன் நெஞ்சு மேலே விரலு மேலும் கீழுமா போச்சுதே! ஏதாவது ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரி கனவு கண்டியா?'' என்று கேட்டார்.
அம்மாவை சமாளித்து அனுப்பினேன். தூக்கத்திலும் என் பிராக்டீஸ் தொடர்ந்திருக்கிறது என்பது புரிந்தது.
நாங்கள் ஒரு குழுவாக ஆரம்பித்து, எங்கள் காலடி படாத சிற்றூரே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு, எல்லா இடங்களிலும் அண்ணனோடு எங்கள் இசை ஒலித்திருக்கிறது. அப்போது நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் எண்ணப் பிரதிபலிப்பை கண்ட பிறகுதான், எந்த மாதிரியான இசை விருப்பம் அவர்களுடையது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சினிமாவுக்கு வந்த பிறகு இசையால் மக்களைக் கவர, எது எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு பிடிமானம் கிடைத்தது.
எனக்கு கிடைத்த, அதாவது தானாக அமைந்த இந்த அனுபவங்கள், உலகின் எந்தவொரு இசைக் கலைஞனுக்கும் இதுவரை கிடைத்திராது. இனிமேல் எவருக்கும் கிடைக்காது என்று கூட சொல்வேன்.
கச்சேரியில் படிப்படியாக பக்குவப்பட்டேன். வழக்கமாக கச்சேரியில் அண்ணன் பாடும் ஒரு குறிப்பிட்ட ஸ்ருதியில்தான் நன்றாக பிராக்டீஸ் செய்து வைத்திருப்பேன். அதை வேறு ஏதாவது ஸ்ருதியில் வாசிக்கச் சொன்னால் தப்பும் தவறுமாகத்தான் வரும். ஆர்மோனியத்திலோ, பியானாவிலோ ஒரு ஸ்ருதிக்கு வந்த `விரல்வித்தை' இன்னொரு ஸ்ருதிக்கு வராது.
ஆனால் எல்லா ஸ்ருதியிலும் என்னைப் பழக்க, இசையே எனக்கொரு பரீட்சை வைத்தது.
எங்கள் கச்சேரி முதல் நாள் நாகர்கோவிலில் இருக்கும். மறுநாள் ஊட்டியில் இருக்கும். நாகர்கோவிலில் இரவு 10 மணிக்கு கச்சேரி முடிந்தால் அதற்கு மேல் ஊட்டி பஸ் இருக்காது. எப்படியோ அடித்துப் பிடித்து காலை 5 மணி பஸ்சைப் பிடித்து, திண்டுக்கல், அங்கிருந்து கோவை, அங்கிருந்து ஊட்டி என்று விழுந்தடித்து மாலை ஆறுமணிக்குள்ளாக போய்ச் சேர்ந்து விடுவோம்.
பயணத்தின்போது அண்ணனால் சரிவரத் தூங்க முடியாமல் சமயத்தில் குரல் சரியில்லாமல் போகும். இப்படி குரல் சரியில்லாத நாட்களில் `ஒரு அரைக்கட்டை கம்மி பண்ணு' என்று ஸ்ருதியை குறைக்கச் சொல்வார்.
அவருக்கு பிரச்சினை இல்லை. தபேலா வாசிக்கும் பாஸ்கருக்கும் பிரச்சினை இல்லை. எந்த ஸ்ருதி என்றாலும், கட்டையை தட்டி சேர்த்து விட்டால், தபேலாவில் விரல் அசைவு மாறப்போவதில்லை. நான்தான் மாட்டிக்கொள்வேன். தப்பும் தவறுமாக அந்த கச்சேரியை எப்படியாவது சமாளித்து விட்டு, அடுத்த நாள் பகல் முழுவதும் அந்த மாறிய `ஸ்ருதி'யில் பிராக்டீஸ் செய்வேன். ஓரளவு தயார் ஆகிவிடுவேன்.
இப்படியே கொஞ்ச நாள் ஓடும். பிறகு இன்னும் அரைக் கட்டை குறையும். அதிலும் இதே கதைதான்.
இதற்குள் புதிய பாடல்கள் ஏதாவது எழுதிச் சேர்த்தால், குறைந்த ஸ்ருதியிலேயே பிராக்டீஸ் செய்து கரெக்டாக ரெடியாகி இருப்பேன். அன்றைக்கென்று பார்த்து அண்ணன் "ஸ்ருதியை, பழைய ஸ்ருதிக்கு ஏற்றி வை'' என்பார்.
வம்புதான். மறுபடி அவசர கதியில் பதட்டமும் பரபரப்புமாய் `மாற்றல்' வேலையை தொடர்வேன்.
இன்றைக்கு என்னுடைய பல பாடல்களில் உருகி, கண்ணீர் விட்டு, துன்பமடைந்து, ஆறுதலடையும் ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இசையால், ஸ்ருதியால், வாசிக்க இயலாமையால் நான் எவ்வளவு துன்பப்பட்டு, தூக்கம் கெட்டு நொந்திருந்தேன் என்பது உங்களில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பெரும்பாலும் எங்கள் கச்சேரியில் சினிமா டிïன்களில்தான் அண்ணன் பாடல் எழுதிப்பாடுவார். இடையிடையே அவர் இசையமைத்த பாடல்களும் இடம் பெறும்.
என் வாழ்வில் அதிகப் படிப்பினைகள் தொடங்கிய நேரம் இதுதான் என்பேன்.
அண்ணனின் இசை நிகழ்ச்சிகளை மதுரை மாவட்ட கம்ïனிஸ்டு கட்சி அலுவலகம்தான் முடிவு செய்யும். கிரி என்பவர் அதை உறுதி செய்வார். அதன் பிறகே கச்சேரி நடக்கும். இதனால் கச்சேரி நடத்துவதில் ஒரு ஒழுங்கு ஏற்பட்டது. ஒரு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் ஆறேழு இடங்களில் கச்சேரி நடந்தால், அடுத்த வாரம் இன்னொரு மாவட்டம்.
தொடர்ந்து இப்படி இரண்டு மாவட்டங்களில் 15 நாட்கள் கச்சேரி செய்து விட்டு, அடுத்த கச்சேரிக்கான இடைவெளி நேரத்தில் எங்கள் ஊருக்கு (பண்ணைபுரம்) வந்து போவோம்.
அந்த நேரத்தில் அண்ணன் தன்னிடம் இருக்கும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பார். அம்மா அதை வீட்டுச் செலவுக்கு வைத்துக்
கொள்வார்கள்.அண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் சில நேரங்களில் அம்மாவிடம் பணம் கொடுக்க மறந்தோ அல்லது முடியாமலோ போனால் அம்மா வருந்துவார். ஒரு கட்டத்தில் இந்த வருத்தம், கோபத்தில் கொண்டு விட்டது. அண்ணன் பணம் கொடுக்காத ஒரு நாளில் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் வாக்குவாதம் வலுத்து, மனத்தாங்கலில் முடிந்த நேரத்தில், "இனி உன் பணத்தை என்னிடம் தரவேண்டாம். கச்சேரிக்காக நீ வாங்கும் பணத்தில் பாஸ்கருக்கும், ராஜையாவுக்கும் உள்ள பங்கை மட்டும் கொடுத்தால் போதும்'' என்று சொல்லி விட்டார்
அம்மா.அண்ணனுக்கும் அது நியாயமாகப் பட்டதால், அடுத்த கச்சேரியில் இருந்து அது அமுலுக்கு வந்தது. பாஸ்கருக்கும் எனக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு என்று ஒதுக்கப்பட்டது. அது பாஸ்கர் கையில் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஊர் வரும்போது அதை அம்மாவிடம் பாஸ்கர் கொடுத்துவிடுவான்.
இளையராஜா அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.
இளையராஜா அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.
பாவலரின் கச்சேரிகளில் பெண் குரலில் பாடி அசத்திய இளையராஜாவை, திடீரென்று "நீ பாடவேண்டாம்'' என்று பாவலர் கூறிவிட்டார். அதற்குக் காரணம் இளையராஜாவின் குரலில் ஏற்பட்ட மாற்றம்தான்.
இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"நாளொரு கச்சேரி, பொழுதொரு ஊர் என்று போய்க்கொண்டிருந்த அந்த உற்சாக நாட்களில், ஆண்களுக்கு பருவ வயதில் வரும் "மகரக்கட்டு'' எனக்கு வந்துவிட்டது. அதாவது குரல் உடைந்து, ஆண் குரலாக மாறுவதை "மகரக்கட்டு'' என்பார்கள். என் குரல் பெண் குரல் போல் இல்லாததால், என்னை விட்டு விட்டு தம்பி அமரனை (கங்கை அமரன்) கச்சேரியில் டூயட் பாட அழைத்துக்கொண்டு போனார், அண்ணன்.
"படிப்பும் போச்சு; பாட்டும் போச்சு! இதென்ன பெரிய பாடாய்ப் போச்சுதே!'' என்ற வேதனையுடன் பண்ணைபுரம் கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.
என்னுடன் படித்த நண்பர்கள் மதுரையில் கல்லூரிகளில் சேர்ந்து படித்து லீவு நாட்களில் ஊர் வருவார்கள். ஊரில் இருக்கும் நான், அவர்களை சந்திக்க நேரும்போது படிப்பின் இழப்பைப்பற்றி நினைத்து, மனம் துன்பப்படும்.
அதே நேரம் அதிகமாக ஊர் சுற்றியதால் கிடைத்த அனுபவத்தில், அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நான் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டு, அவர்கள் பொறாமைப் படுவதைக் காணப் பெருமையாகவும் இருக்கும்!
எப்படியோ! எப்போதும் நான் தனிதான் என்று இறைவன் எழுதி வைத்து விட்டதால், அதை என்னால் எப்படி மாற்ற முடியும்?
இந்தத் தனிமையைப் போக்க, "கல்கி''யின் சரித்திர நாவல்கள் எனக்கு உதவின. பள்ளியில் படிக்கும்போது ஏற்கனவே இந்த நாவல்களை படித்திருந்தாலும், என்றைக்குப் படித்தாலும் அன்றைக்குத்தான் எழுதியதைப் போலிருக்கும்.
இதற்கிடையே கோவையில் கச்சேரிக்கு சென்று வந்த அண்ணன் ஆர்மோனியம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதன் விலை 85 ரூபாய் என்றார். அதை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். யாரும் தொடக்கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.
இது தெரிந்தும், அவர் வீட்டில் இல்லாத ஒரு நாள் நான் அந்த ஆர்மோனியத்தை எடுத்து சும்மா வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராமல் அந்த நேரத்தில் அண்ணன் வந்துவிட்டார். நான் ஆர்மோனியமும் கையுமாக இருந்ததை பார்த்தவருக்கு, கோபம் வந்துவிட்டது. புறங்கையை நீட்டச்சொல்லி, பிரம்பால் விளாசிவிட்டார்.''
- இவ்வாறாக இளமைப் பருவத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார், இளையராஜா.
இளையராஜா இப்படி பிரம்படி வாங்கியிருக்கிறாரே என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏற்கனவே அண்ணனிடம் அடிவாங்கிய அனுபவமும் இருக்கிறது. அதை அவரே கூறுகிறார்:
"சிறு வயதில் கிணற்றில் நீச்சலடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாதுகாப்புக்கு ஆளில்லாமல் சிறுவர்களாக சேர்ந்து குளித்ததை தெரிந்து கொண்டவர், என்னை வீட்டுத்தூணில் கட்டிப்போட்டார். மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வந்ததற்காக, அம்மாவே என்னையும் பாஸ்கரையும் தூணில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல் கண்ணில் மிளகாயை அரைத்து வைத்தார்கள். அப்புறம் தண்டனையைக் குறைக்க வெங்காயத்தை அரைத்து வைப்பது வழக்கமாயிற்று.
குறைந்தது மூன்று மணி நேரமாவது இப்படி தூணில் கட்டிப் போட்டிருப்பார்கள். பின்பு பரிதாபப்பட்டு அவிழ்த்து விடுவார்கள்.
இப்படி தண்டனை வாங்குகிற அன்று இரவு சாப்பாட்டின்போது, கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் போட்டிருக்கிறார்கள். அதுதான் சமயம் என்று நானும் பாஸ்கரும் "இந்த வீட்டைப்போல் எந்த வீடும் இருக்க முடியாது'' என்று ஆரம்பிப்போம்.
"ஏண்டா அப்படிச் சொல்றீங்க?'' என்று அம்மா திருப்பிக் கேட்பார்.
"குளிக்கிறதுக்குப் போய் எந்த வீட்டிலாவது அடிப்பாங்களா?'' என்று தொடங்கி "இனிமே தீபாவளி தீபாவளிக்குத்தான் `கங்கா ஸ்நானம்' பண்ணணுமாக்கும்?'' என்று சொல்லும்போதே சிரிப்பு வந்து சிரித்து விடுவோம்.
ஆர்மோனியத்துக்காகவும் அடி வாங்க நேர்ந்ததால், அதன் பிறகு அண்ணன் வீட்டில் இருக்கும் நேரங்களில் ஆர்மோனியத்தை தொடுவதில்லை. அவர் இல்லாதபோது எடுத்து வாசிப்பது, வருவது தெரிந்தால் எடுத்து மூடி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.
அம்மா, அண்ணனை கண்டிக்கவும் மாட்டார்கள்; நான் வாசிப்பதை தடுக்கவும் மாட்டார்கள். இதனால் அம்மாவின் மானசீக அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், சீக்கிரமே ஓரளவுக்கு ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டு விட்டேன்.
ஆர்மோனியம் வீட்டுக்கு வந்த புதிதில், அண்ணனுடன் கச்சேரிக்கு வரும் சங்கரதாசிடம், எனக்கு ஆர்மோனியம் கற்றுத்தரும்படி கேட்டிருக்கிறேன். அவரும் `சரி' என்றார். ஆனால் வாய்ப்பு அமையாததால் அவரிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போயிற்று. ஆனாலும் அவர் வாசிக்கிற பாணியை மனதில் கொண்டு வந்து `இப்படி வாசிப்பாரா? இல்லை, இப்படி வாசிப்பாரா?' என்று வாசித்து வாசித்து, ஓரளவுக்கு என்னால் வாசிக்க முடியும் என்ற தெளிவுடன், அதே நேரம் திருப்தியில்லாமலும் இருந்தேன்.
இந்த நிலையில்தான் அண்ணனுக்கும், சங்கரதாசுக்கும் ஏதோ மனஸ்தாபம். கம்பத்தில் நடக்கவிருந்த ஒரு கச்சேரிக்கு, முந்தின நாள் தன்னால் வர இயலாது என்று சொல்லியனுப்பி விட்டார், சங்கரதாஸ்.
அணணன் தவித்துப் போனார். ஒருநாள் இடைவெளியில் வேறு ஒருவரை பார்க்க வேண்டும். அதற்கு மதுரைக்குத்தான் போகவேண்டும். அப்படியே ஆள் கிடைத்தாலும் ஒத்திகை பார்க்க நேரம் வேண்டும்.
இப்போதும் அம்மாதான் கைகொடுத்தார். அம்மா அண்ணனிடம், "தம்பி ராஜையாவை கூட்டிட்டுப் போகலாமே'' என்றார்.
அம்மா இப்படிச் சொன்னதும், அண்ணன் ஒருமுறை என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிராக்டீஸ் செய்து வைத்திருப்பதை அவராகத் தெரிந்து கொண்டாரோ அல்லது எனக்குத் தெரியாமல் அம்மாதான் சொல்லியிருந்தாரோ, "சரி, வா!'' என்றார்.
என் இசை வாழ்வுக்கு போடப்படும் முதல் அஸ்திவாரக்கல் அது என்று தெரியாமல், ஆர்மோனியத்துடன் அண்ணன் கச்சேரிக்கு புறப்பட்டேன்.
கம்பத்தில் மெயின் ரோட்டில் மேடை போடப்பட்டிருந்தது. ஒரு சிறுவன் (இளையராஜா) அரை டிராயருடன் ஆர்மோனியம்வாசிக்க, பாஸ்கர் தபேலா வாசிக்க, அண்ணன் பாட கச்சேரி தொடங்கியது. என் கைகள் நடுக்கத்துடன் ஆர்மோனியம் வாசிக்க, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, என் வாசிப்புக்கும் கைதட்டல் கிடைக்குமென்று!
தப்பும் தவறுமாய் வாசித்ததற்கே இவ்வளவு கைதட்டல் கிடைக்கிறதே, இன்னும் சரியாக வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று
எண்ணினேன்.இதன் பிறகு, வீட்டில் ஆர்மோனியத்தை நான் தொட்டால், அண்ணன் அடிப்பதில்லை.
பாவலரின் கச்சேரிகளில் பெண் குரலில் பாடி அசத்திய இளையராஜாவை, திடீரென்று "நீ பாடவேண்டாம்'' என்று பாவலர் கூறிவிட்டார். அதற்குக் காரணம் இளையராஜாவின் குரலில் ஏற்பட்ட மாற்றம்தான்.
இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"நாளொரு கச்சேரி, பொழுதொரு ஊர் என்று போய்க்கொண்டிருந்த அந்த உற்சாக நாட்களில், ஆண்களுக்கு பருவ வயதில் வரும் "மகரக்கட்டு'' எனக்கு வந்துவிட்டது. அதாவது குரல் உடைந்து, ஆண் குரலாக மாறுவதை "மகரக்கட்டு'' என்பார்கள். என் குரல் பெண் குரல் போல் இல்லாததால், என்னை விட்டு விட்டு தம்பி அமரனை (கங்கை அமரன்) கச்சேரியில் டூயட் பாட அழைத்துக்கொண்டு போனார், அண்ணன்.
"படிப்பும் போச்சு; பாட்டும் போச்சு! இதென்ன பெரிய பாடாய்ப் போச்சுதே!'' என்ற வேதனையுடன் பண்ணைபுரம் கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.
என்னுடன் படித்த நண்பர்கள் மதுரையில் கல்லூரிகளில் சேர்ந்து படித்து லீவு நாட்களில் ஊர் வருவார்கள். ஊரில் இருக்கும் நான், அவர்களை சந்திக்க நேரும்போது படிப்பின் இழப்பைப்பற்றி நினைத்து, மனம் துன்பப்படும்.
அதே நேரம் அதிகமாக ஊர் சுற்றியதால் கிடைத்த அனுபவத்தில், அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நான் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டு, அவர்கள் பொறாமைப் படுவதைக் காணப் பெருமையாகவும் இருக்கும்!
எப்படியோ! எப்போதும் நான் தனிதான் என்று இறைவன் எழுதி வைத்து விட்டதால், அதை என்னால் எப்படி மாற்ற முடியும்?
இந்தத் தனிமையைப் போக்க, "கல்கி''யின் சரித்திர நாவல்கள் எனக்கு உதவின. பள்ளியில் படிக்கும்போது ஏற்கனவே இந்த நாவல்களை படித்திருந்தாலும், என்றைக்குப் படித்தாலும் அன்றைக்குத்தான் எழுதியதைப் போலிருக்கும்.
இதற்கிடையே கோவையில் கச்சேரிக்கு சென்று வந்த அண்ணன் ஆர்மோனியம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதன் விலை 85 ரூபாய் என்றார். அதை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். யாரும் தொடக்கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.
இது தெரிந்தும், அவர் வீட்டில் இல்லாத ஒரு நாள் நான் அந்த ஆர்மோனியத்தை எடுத்து சும்மா வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராமல் அந்த நேரத்தில் அண்ணன் வந்துவிட்டார். நான் ஆர்மோனியமும் கையுமாக இருந்ததை பார்த்தவருக்கு, கோபம் வந்துவிட்டது. புறங்கையை நீட்டச்சொல்லி, பிரம்பால் விளாசிவிட்டார்.''
- இவ்வாறாக இளமைப் பருவத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார், இளையராஜா.
இளையராஜா இப்படி பிரம்படி வாங்கியிருக்கிறாரே என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏற்கனவே அண்ணனிடம் அடிவாங்கிய அனுபவமும் இருக்கிறது. அதை அவரே கூறுகிறார்:
"சிறு வயதில் கிணற்றில் நீச்சலடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாதுகாப்புக்கு ஆளில்லாமல் சிறுவர்களாக சேர்ந்து குளித்ததை தெரிந்து கொண்டவர், என்னை வீட்டுத்தூணில் கட்டிப்போட்டார். மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வந்ததற்காக, அம்மாவே என்னையும் பாஸ்கரையும் தூணில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல் கண்ணில் மிளகாயை அரைத்து வைத்தார்கள். அப்புறம் தண்டனையைக் குறைக்க வெங்காயத்தை அரைத்து வைப்பது வழக்கமாயிற்று.
குறைந்தது மூன்று மணி நேரமாவது இப்படி தூணில் கட்டிப் போட்டிருப்பார்கள். பின்பு பரிதாபப்பட்டு அவிழ்த்து விடுவார்கள்.
இப்படி தண்டனை வாங்குகிற அன்று இரவு சாப்பாட்டின்போது, கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் போட்டிருக்கிறார்கள். அதுதான் சமயம் என்று நானும் பாஸ்கரும் "இந்த வீட்டைப்போல் எந்த வீடும் இருக்க முடியாது'' என்று ஆரம்பிப்போம்.
"ஏண்டா அப்படிச் சொல்றீங்க?'' என்று அம்மா திருப்பிக் கேட்பார்.
"குளிக்கிறதுக்குப் போய் எந்த வீட்டிலாவது அடிப்பாங்களா?'' என்று தொடங்கி "இனிமே தீபாவளி தீபாவளிக்குத்தான் `கங்கா ஸ்நானம்' பண்ணணுமாக்கும்?'' என்று சொல்லும்போதே சிரிப்பு வந்து சிரித்து விடுவோம்.
ஆர்மோனியத்துக்காகவும் அடி வாங்க நேர்ந்ததால், அதன் பிறகு அண்ணன் வீட்டில் இருக்கும் நேரங்களில் ஆர்மோனியத்தை தொடுவதில்லை. அவர் இல்லாதபோது எடுத்து வாசிப்பது, வருவது தெரிந்தால் எடுத்து மூடி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.
அம்மா, அண்ணனை கண்டிக்கவும் மாட்டார்கள்; நான் வாசிப்பதை தடுக்கவும் மாட்டார்கள். இதனால் அம்மாவின் மானசீக அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், சீக்கிரமே ஓரளவுக்கு ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டு விட்டேன்.
ஆர்மோனியம் வீட்டுக்கு வந்த புதிதில், அண்ணனுடன் கச்சேரிக்கு வரும் சங்கரதாசிடம், எனக்கு ஆர்மோனியம் கற்றுத்தரும்படி கேட்டிருக்கிறேன். அவரும் `சரி' என்றார். ஆனால் வாய்ப்பு அமையாததால் அவரிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போயிற்று. ஆனாலும் அவர் வாசிக்கிற பாணியை மனதில் கொண்டு வந்து `இப்படி வாசிப்பாரா? இல்லை, இப்படி வாசிப்பாரா?' என்று வாசித்து வாசித்து, ஓரளவுக்கு என்னால் வாசிக்க முடியும் என்ற தெளிவுடன், அதே நேரம் திருப்தியில்லாமலும் இருந்தேன்.
இந்த நிலையில்தான் அண்ணனுக்கும், சங்கரதாசுக்கும் ஏதோ மனஸ்தாபம். கம்பத்தில் நடக்கவிருந்த ஒரு கச்சேரிக்கு, முந்தின நாள் தன்னால் வர இயலாது என்று சொல்லியனுப்பி விட்டார், சங்கரதாஸ்.
அணணன் தவித்துப் போனார். ஒருநாள் இடைவெளியில் வேறு ஒருவரை பார்க்க வேண்டும். அதற்கு மதுரைக்குத்தான் போகவேண்டும். அப்படியே ஆள் கிடைத்தாலும் ஒத்திகை பார்க்க நேரம் வேண்டும்.
இப்போதும் அம்மாதான் கைகொடுத்தார். அம்மா அண்ணனிடம், "தம்பி ராஜையாவை கூட்டிட்டுப் போகலாமே'' என்றார்.
அம்மா இப்படிச் சொன்னதும், அண்ணன் ஒருமுறை என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிராக்டீஸ் செய்து வைத்திருப்பதை அவராகத் தெரிந்து கொண்டாரோ அல்லது எனக்குத் தெரியாமல் அம்மாதான் சொல்லியிருந்தாரோ, "சரி, வா!'' என்றார்.
என் இசை வாழ்வுக்கு போடப்படும் முதல் அஸ்திவாரக்கல் அது என்று தெரியாமல், ஆர்மோனியத்துடன் அண்ணன் கச்சேரிக்கு புறப்பட்டேன்.
கம்பத்தில் மெயின் ரோட்டில் மேடை போடப்பட்டிருந்தது. ஒரு சிறுவன் (இளையராஜா) அரை டிராயருடன் ஆர்மோனியம்வாசிக்க, பாஸ்கர் தபேலா வாசிக்க, அண்ணன் பாட கச்சேரி தொடங்கியது. என் கைகள் நடுக்கத்துடன் ஆர்மோனியம் வாசிக்க, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, என் வாசிப்புக்கும் கைதட்டல் கிடைக்குமென்று!
தப்பும் தவறுமாய் வாசித்ததற்கே இவ்வளவு கைதட்டல் கிடைக்கிறதே, இன்னும் சரியாக வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று
எண்ணினேன்.இதன் பிறகு, வீட்டில் ஆர்மோனியத்தை நான் தொட்டால், அண்ணன் அடிப்பதில்லை.
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.
"இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.
அவர் கூறுகிறார்:-
"கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்யூனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.
அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜுரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜுரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.
இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜுரரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.
ஜுரரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.
அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.
அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.
மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.
அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.
அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.
இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.
இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.
டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.
சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.
1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்
பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்
ஒனப்பத் தட்டும் தாரேன்
ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்
மாட்டப் பாத்து குத்து''
- இது அண்ணன்.
"ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க
ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க
ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள
ஒழிச்சிக் கட்டப் போறோம்''
- இது நான்.
இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?
இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி
இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?
கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.
"இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.
அவர் கூறுகிறார்:-
"கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்யூனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.
அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜுரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜுரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.
இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜுரரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.
ஜுரரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.
அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.
அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.
மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.
அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.
அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.
இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.
இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.
டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.
சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.
1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்
பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்
ஒனப்பத் தட்டும் தாரேன்
ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்
மாட்டப் பாத்து குத்து''
- இது அண்ணன்.
"ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க
ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க
ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள
ஒழிச்சிக் கட்டப் போறோம்''
- இது நான்.
இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?
இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி
இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?
கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.
கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.
தேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:
"சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா
வெட்கங்கெட்ட காளை ரெண்டு
முட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது
மூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''
என்று பாடினார்.
பாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.
இடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.
`இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்!
நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், "வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,
அப்போது, "பாவலரே! கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.
அந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.
எதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்ïனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்ïனிஸ்டு கட்சி மந்திரிசபை
அமைத்தது.வெற்றி விழாவில் நம்பூதிரிபாடு
மூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, "இவடே பாவலர் வரதராஜன் ஆரானு?'' என்று கேட்டார்.
கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருëëத பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே! இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.
அப்போது நம்பூதிரிபாடு "ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்ïனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
பாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.
அதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:
"பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.
அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.
பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா?
ஜோதிடர்களை பார்த்தேன். "நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன்.
அவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், "கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.
"அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.
அப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.
பள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.
அன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜ×ரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.
மைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.
என் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.
அதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.
இப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.
தேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:
"சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா
வெட்கங்கெட்ட காளை ரெண்டு
முட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது
மூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''
என்று பாடினார்.
பாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.
இடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.
`இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்!
நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், "வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,
அப்போது, "பாவலரே! கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.
அந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.
எதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்ïனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்ïனிஸ்டு கட்சி மந்திரிசபை
அமைத்தது.வெற்றி விழாவில் நம்பூதிரிபாடு
மூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, "இவடே பாவலர் வரதராஜன் ஆரானு?'' என்று கேட்டார்.
கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருëëத பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே! இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.
அப்போது நம்பூதிரிபாடு "ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்ïனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
பாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.
அதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:
"பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.
அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.
பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா?
ஜோதிடர்களை பார்த்தேன். "நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன்.
அவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், "கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.
"அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.
அப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.
பள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.
அன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜ×ரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.
மைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.
என் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.
அதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.
இப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.






