என் மலர்
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக சமந்தா நடிக்கவில்லை என படக்குழு விளக்கமளித்துள்ளது.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படம் ஆகிறது. இந்த படத்துக்கு ‘மகாநதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே, அவர் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்று தகவல் பரவியது. இணையதளங்களில் இது பரபரப்பான செய்தியானது.
இந்த நிலையில் தெலுங்கு ‘மகாநதி’ படத்தில் சமந்தா சாவித்திரி வேடத்தில் நடிக்கவில்லை என்று அந்த படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து படக்குழு கூறுகையில் "இந்த படத்தில் சமந்தா நடிப்பது உண்மை தான். அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் சாவித்திரி வேடத்தில் நடிக்கவில்லை. வேறு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் பார்வை வழியாக சாவித்திரியின் வாழ்க்கை சொல்லப்படும்.
சாவித்திரி வேடத்தில் நடிக்கும் நடிகை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். அது யார் என்றது உறுதி செய்யப்பட்டவுடன் முறைப்படி அறிவிக்கப்படும்" என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
சாவித்திரி வேடத்தில் நடிக்க நடிகைகள் நித்யாமேனன், வித்யா பாலன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'கத்தி சண்டை' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்...
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார் ஜெகபதி பாபு.
திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பாற்றி விடுகிறார்.
விஷால் திடீரென ஒருநாள் ஜெகபதி பாபுவிடம் நான் ஒரு சிபிஐ அதிகாரி அன்னைக்கு வந்த கண்டய்னர்ல 300 கோடி பணம் வந்தது. ஆனால் நீ கவர்மெண்டிடம் ஒப்படைத்தது வெறும் 50 கோடிதான் என்று தனது ஐடி கார்டைக் காட்டி மிரட்டுகிறார்.
இதற்கிடையில் வில்லன் தருண் அரோரா, ஜெகபதி பாபு இருவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அப்போது தருண் அரோரா ஜெகபதி பாபுவிடம் நீ நினைக்கிற மாதிரி விஷால் சிபிஐ ஆபிசர் கிடையாது. அவன் என்கூட தான் ஜெயிலில் இருந்தான். கண்டெயினரில் வந்த பணத்தைக் கொள்ளையடிக்க நான் திட்டம் போட்டேன். ஆனால் அவன் என்னோட திட்டத்தை ஒட்டுக்கேட்டு எனக்கு முன்னால வந்து உன்ன மிரட்ட ஆரம்பிச்சிட்டான் என்று கூறுகிறார். இதற்குப்பின் ஜெகபதி பாபு, தருண் அரோரா இருவரும் விஷாலைத் தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் விஷால் யார்? என்னும் விவரம் நாயகி தமன்னாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் விஷாலிடம் தமன்னா சண்டை போட விஷால்-தமன்னா இருவருக்குமான காதலில் விரிசல் விழுகிறது.
திடீரென நடைபெறும் சிறிய விபத்தில் நாயகன் விஷால் தனது நினைவுகளை இழந்து விடுகிறார்.விஷால் இழந்துவிட்ட பழைய நினைவுகளை மீட்க வரும் டாக்டராக வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாதியில் என்ட்ரி ஆகிறார்.
இழந்த நினைவுகளை விஷால் மீண்டும் பெற்றாரா? உண்மையில் விஷால் யார்? தமன்னா-விஷால் இருவரும் ஜோடி சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் விஷால் நடனம்,காமெடி,சண்டைக்காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நாயகி தமன்னா கவர்ச்சியான உடைகளில் வந்து ரசிகர்களின் கண்களை குளிர செய்கிறார். காதல் மற்றும் பாடல் காட்சிகளில் வந்து செல்கிறார். எனினும் சைக்கலாஜி மாணவியாக வரும் தமன்னாவின் நடிப்பு மனதில் பதியவில்லை. படத்தின் முதல்பாதி காட்சிகளில் சூரியும், இரண்டாம் பாதி காட்சிகளில் வடிவேலுவும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக வடிவேலு வரும் காட்சிகளில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.
வழக்கமாக தனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தையும் காமெடியை மையமாக வைத்தே எடுத்திருக்கிறார். படத்தில் வடிவேலு, சூரி என முன்னணி நகைச்சுவை நடிகர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். திரைக்கதையை சரியாக கையாளாததால் படத்தின் ஒருசில இடங்களில் சற்றே தொய்வு ஏற்படுகின்றது.
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் 'நான் கொஞ்சம் கருப்பு தான்' பாடல் காட்சி ரசிக்க வைக்கின்றது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் ஹிப்ஹாப் ஆதி ஸ்கோர் செய்கிறார். பாடல், சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் 'கத்தி சண்டை' காமெடி சண்டை.
திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பாற்றி விடுகிறார்.
விஷால் திடீரென ஒருநாள் ஜெகபதி பாபுவிடம் நான் ஒரு சிபிஐ அதிகாரி அன்னைக்கு வந்த கண்டய்னர்ல 300 கோடி பணம் வந்தது. ஆனால் நீ கவர்மெண்டிடம் ஒப்படைத்தது வெறும் 50 கோடிதான் என்று தனது ஐடி கார்டைக் காட்டி மிரட்டுகிறார்.
இதற்கிடையில் வில்லன் தருண் அரோரா, ஜெகபதி பாபு இருவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அப்போது தருண் அரோரா ஜெகபதி பாபுவிடம் நீ நினைக்கிற மாதிரி விஷால் சிபிஐ ஆபிசர் கிடையாது. அவன் என்கூட தான் ஜெயிலில் இருந்தான். கண்டெயினரில் வந்த பணத்தைக் கொள்ளையடிக்க நான் திட்டம் போட்டேன். ஆனால் அவன் என்னோட திட்டத்தை ஒட்டுக்கேட்டு எனக்கு முன்னால வந்து உன்ன மிரட்ட ஆரம்பிச்சிட்டான் என்று கூறுகிறார். இதற்குப்பின் ஜெகபதி பாபு, தருண் அரோரா இருவரும் விஷாலைத் தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் விஷால் யார்? என்னும் விவரம் நாயகி தமன்னாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் விஷாலிடம் தமன்னா சண்டை போட விஷால்-தமன்னா இருவருக்குமான காதலில் விரிசல் விழுகிறது.
திடீரென நடைபெறும் சிறிய விபத்தில் நாயகன் விஷால் தனது நினைவுகளை இழந்து விடுகிறார்.விஷால் இழந்துவிட்ட பழைய நினைவுகளை மீட்க வரும் டாக்டராக வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாதியில் என்ட்ரி ஆகிறார்.
இழந்த நினைவுகளை விஷால் மீண்டும் பெற்றாரா? உண்மையில் விஷால் யார்? தமன்னா-விஷால் இருவரும் ஜோடி சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் விஷால் நடனம்,காமெடி,சண்டைக்காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நாயகி தமன்னா கவர்ச்சியான உடைகளில் வந்து ரசிகர்களின் கண்களை குளிர செய்கிறார். காதல் மற்றும் பாடல் காட்சிகளில் வந்து செல்கிறார். எனினும் சைக்கலாஜி மாணவியாக வரும் தமன்னாவின் நடிப்பு மனதில் பதியவில்லை. படத்தின் முதல்பாதி காட்சிகளில் சூரியும், இரண்டாம் பாதி காட்சிகளில் வடிவேலுவும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக வடிவேலு வரும் காட்சிகளில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.
வழக்கமாக தனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தையும் காமெடியை மையமாக வைத்தே எடுத்திருக்கிறார். படத்தில் வடிவேலு, சூரி என முன்னணி நகைச்சுவை நடிகர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். திரைக்கதையை சரியாக கையாளாததால் படத்தின் ஒருசில இடங்களில் சற்றே தொய்வு ஏற்படுகின்றது.
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் 'நான் கொஞ்சம் கருப்பு தான்' பாடல் காட்சி ரசிக்க வைக்கின்றது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் ஹிப்ஹாப் ஆதி ஸ்கோர் செய்கிறார். பாடல், சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் 'கத்தி சண்டை' காமெடி சண்டை.
நடிகை கரீனா கபூர் மகனுக்கு தைமூர் என்ற பெயர் சூட்டியதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுக்கிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
இந்தி நடிகை கரீனா கபூர் 2012-ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு இரு தினங்களுக்கு முன்பு மும்பை ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு முன்பே தங்கள் குழந்தைக்கு சரித்திர காலத்தில் புகழ் பெற்ற ஒருவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தனர்.
ஆண் அல்லது பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று பெயரையும் தேர்வு செய்து வைத்து இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தைக்கு உடனடியாக தைமூர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை கொன்று குவித்த மங்கோலிய மன்னன் பெயரே தைமூர் என்பது ஆகும். இந்த பெயரை குழந்தைக்கு சூட்டியதால் கரீனா கபூருக்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. அந்த பெயரை மாற்ற வேண்டும் என்றும் பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.
‘பாகிஸ்தான் ஏவுகணையின் பெயரும் கரீனா கபூர் குழந்தையின் பெயரும் ஒன்றுதான்’, என்றும் விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கரீனா கபூர் குழந்தை பெயரை விமர்சிப்பவர்களுக்கு அவரது உறவினரும் நடிகருமான ரிஷி கபூர் கண்டனம் தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பெற்றோர்கள் அவர்களின் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டினால் மக்களுக்கு என்ன? அவரவர் வேலையை பாருங்கள். பெயர் சூட்டியதற்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெயர் சூட்டுவது பெற்றோரின் விருப்பம்’ என்று கூறி இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும் கரீனா கபூர்-சயீப் அலிகானுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். குழந்தை பெயர் சர்ச்சையாகி இருப்பது கரீனா கபூருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். பெயரை மாற்றுவது குறித்து அவர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆண் அல்லது பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று பெயரையும் தேர்வு செய்து வைத்து இருந்தார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தைக்கு உடனடியாக தைமூர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை கொன்று குவித்த மங்கோலிய மன்னன் பெயரே தைமூர் என்பது ஆகும். இந்த பெயரை குழந்தைக்கு சூட்டியதால் கரீனா கபூருக்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. அந்த பெயரை மாற்ற வேண்டும் என்றும் பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.
‘பாகிஸ்தான் ஏவுகணையின் பெயரும் கரீனா கபூர் குழந்தையின் பெயரும் ஒன்றுதான்’, என்றும் விமர்சித்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கரீனா கபூர் குழந்தை பெயரை விமர்சிப்பவர்களுக்கு அவரது உறவினரும் நடிகருமான ரிஷி கபூர் கண்டனம் தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பெற்றோர்கள் அவர்களின் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டினால் மக்களுக்கு என்ன? அவரவர் வேலையை பாருங்கள். பெயர் சூட்டியதற்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெயர் சூட்டுவது பெற்றோரின் விருப்பம்’ என்று கூறி இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும் கரீனா கபூர்-சயீப் அலிகானுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். குழந்தை பெயர் சர்ச்சையாகி இருப்பது கரீனா கபூருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். பெயரை மாற்றுவது குறித்து அவர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
போர்ப்ஸ் வணிக பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் இந்தி நடிகர் சல்மான்கான் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் மெகா ஸ்டார் ஷாருக்கான் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2015 அக்டோபர் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலத்தில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், வருவாய் அடிப்படையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரது வருவாய் ரூ.270 கோடியாக இருக்கிறது.
இதனையடுத்து முதலிடத்தில் இருந்த ஷாருக்கான் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார். ஷாருக்கானின் வருவாய் ரூ.222 கோடி ஆகும். எனினும், ‘புகழ்’ அடிப்படையில் பார்க்கும்போது சல்மான்கான் இரண்டாவது இடத்திலும், ஷாருக்கான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருக்கிறார்.
போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 4-வது இடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் ரூ.203 கோடியாக உள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி வருவாய் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், புகழ் அடிப்படையில் 4-வது இடத்திலும் இருக்கிறார்.
போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 பிரபலங்களின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,745 கோடியாக உள்ளது. இதில், சல்மான் கான் ஈட்டிய வருமானத்தின் பங்கு 9.84 சதவீதமாகும்.
இதனையடுத்து முதலிடத்தில் இருந்த ஷாருக்கான் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார். ஷாருக்கானின் வருவாய் ரூ.222 கோடி ஆகும். எனினும், ‘புகழ்’ அடிப்படையில் பார்க்கும்போது சல்மான்கான் இரண்டாவது இடத்திலும், ஷாருக்கான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருக்கிறார்.
போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 4-வது இடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் ரூ.203 கோடியாக உள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி வருவாய் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், புகழ் அடிப்படையில் 4-வது இடத்திலும் இருக்கிறார்.
போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 பிரபலங்களின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,745 கோடியாக உள்ளது. இதில், சல்மான் கான் ஈட்டிய வருமானத்தின் பங்கு 9.84 சதவீதமாகும்.
10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.
10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.
தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்தவர் நடிகை ரோஜா.
1991-ம் ஆண்டில் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய "செம்பருத்தி'' படத்தில் அறிமுகமான ரோஜா, தொடர்ந்து 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்றவர். தமிழிலும், தெலுங்கிலுமாக 140-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீலதா தான் சினிமாவுக்கு வந்த பிறகு `ரோஜா'வாகியிருக்கிறார். அப்பா ஒய்.என். ரெட்டி. அம்மா லலிதா.
உடன் பிறந்தோர் 2 அண்ணன்கள் மட்டும். மூத்த அண்ணன் குமாரசாமி ரெட்டி. அடுத்த அண்ணன் ராம்பிரசாத் ரெட்டி.
ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கிடைக்கும் என்பார்கள். ரோஜாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப செல்லம். அதற்குக் காரணம் ரோஜாவே சொல்கிறார்:
"அப்பாவுக்கு அக்கா, தங்கை யாரும் கிடையாது. தாத்தாவுக்கும் அக்கா -தங்கை கிடையாது. இதனால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் ஆளாளுக்கு என்னை கொண்டாடினார்கள். பாசம் கொட்டினார்கள். ஆனாலும் நான் பையன் மாதிரிதான் வளர்ந்தேன். எப்போதும் யாரையாவது சீண்டியபடி ஜாலி ஜாலி ஜாலிதான். தாத்தா ஒருத்தருக்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன்.'' சொல்லிச் சிரிக்கிறார் ரோஜா.
பள்ளிப் பருவத்தில் கூட ரோஜாவுக்குள் நடிப்பு வாசனை வீசவில்லை. நடிகையாக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ஆனால், நம்பர் ஒன் சினிமா ரசிகையாக இருந்திருக்கிறார். அதுபற்றி ரோஜா கூறுகிறார்:
"பள்ளி நாட்களில் எல்லாம் ஒரு சினிமா விடமாட்டேன். ஸ்கூலுக்கு `கட்' அடித்து விட்டு தோழிகளுடன் போய் விடுவேன். ஆனால் அப்போதுகூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்த்ததே இல்லை.''
இப்படிச் சொல்லும் ரோஜாவுக்கு `நடிகை அந்தஸ்து' எப்போதுதான் வந்தது?
"அப்பா, சாரதி ஸ்டூடியோவில் சவுண்டு என்ஜினீயராக இருந்தார். சினிமா இயக்கும் ஆசை அவருக்கு இருந்தது. இதனால் வேலையை விட்டு விட்டு முதலில் `கொத்தடி பொம்மா பூர்ணமா' என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கினார்.
இதில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கோடி.ராமகிருஷ்ணாவின் மனைவியை நாயகியாக நடிக்க வைத்தார். அவரது மகளாக நடிக்க 10 வயதுப்பெண் தேவைப்பட்டபோது அப்பாவின் பார்வை என் மீது. அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம், "நாளை நீ பள்ளிக்குப் போகவேண்டாம்'' என்றார், அப்பா.
"ஏன்?'' என்று கேட்டேன்.
"நான் ஒரு டாகுமெண்டரி படம் இயக்குகிறேன் அல்லவா? அதில் உன் வயதுப்பெண் நடிக்க தேவைப்படுகிறாள். அது ஏன் நீயாக இருக்கக்கூடாது?'' என்று கேட்டார் அப்பா.
"நடிப்பதா? நானா? எனக்கு என்ன தெரியும் டாடி?'' என்று திருப்பிக் கேட்டேன்.
"இதுவும் பாடம் மாதிரிதான். நான் சொல்லித் தருவதை அப்படியே செய்தால் போதும்'' என்றார் அப்பா. படப்பிடிப்பில் அப்பா சொன்னதைச் செய்தேன். அவ்வளவுதான். அத்தோடு நடித்ததைக்கூட மறந்து மறுபடியும் மாணவியாகிவிட்டேன்.''
இவ்வாறு கூறினார், ரோஜா.
ரோஜாவுக்கு சினிமா வாய்ப்பு மறுபடியும் தேடி வந்தது கல்லூரிப் பருவத்தில்தான். திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பெண்கள் கல்லூரியில் முதலாண்டு மாணவியாக இருந்த நேரத்தில் `நடிப்பு' தேடிவந்து அழைத்திருக்கிறது. அதுபற்றி ரோஜா கூறுகிறார்:
"அப்பாவின் நண்பர் எங்கள் கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப்பார்த்த அவருக்குள் என்னை நடிக்க வைக்கும் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. இதை அவர் எங்கள் வீட்டில் சொன்னபோது அம்மா, அண்ணன்கள் பயங்கர எதிர்ப்பு. அப்பாதான், "நடித்தால்தான் என்ன?'' என்று கேட்டு, நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.
அப்பாவின் நண்பர் என்னை நிறைய படங்கள் எடுத்தார். அப்போது எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். நான் "ஒன்றுமில்லை'' என்று கூறி சமாளித்து விட்டேன். ஆனால் அந்தப் படங்களில் ஒன்று, ஒரு தெலுங்கு சினிமா பத்திரிகையின் அட்டையில் வர, அதுதான் தமிழில் என்னை நாயகியாக்கியது.
அதுகூட உடனடியாக இல்லை. தெலுங்குப் படம் எடுக்க முன்னேற்பாடுகளை செய்த அப்பாவின் நண்பர், தமிழில் பிரபலமாக இருந்த டைரக்டர் பாரதிராஜாவுக்கும் நண்பராக இருந்திருக்கிறார். அவரை தனது படப்பிடிப்புக்கு அழைத்த அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு சினிமா பெயரை சூட்டும்படி பாரதிராஜாவை கேட்டிருக்கிறார். என்னைப் பார்த்தது ஒரு நொடிதான். உடனே, "ரோஜா'' என்று பெயர் வைத்துவிட்டார்.
எனக்குப் பெயர் வைத்ததையே பாரதிராஜா மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அவருக்கு சம்பவம். எனக்கு சரித்திரம் அல்லவா! பின்னாளில் அவரது டைரக்ஷனில் தமிழ்ச்செல்வன் படத்தில் நடித்தபோது நான் இந்த பெயர் சூட்டிய சம்பவத்தை சொன்னேன். "அடடா! எனக்கு நினைவில்லையே?'' என்று ஆச்சரியப்பட்டார் அவர்.
இவ்வாறு ரோஜா கூறினார்.
தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்தவர் நடிகை ரோஜா.
1991-ம் ஆண்டில் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய "செம்பருத்தி'' படத்தில் அறிமுகமான ரோஜா, தொடர்ந்து 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்றவர். தமிழிலும், தெலுங்கிலுமாக 140-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீலதா தான் சினிமாவுக்கு வந்த பிறகு `ரோஜா'வாகியிருக்கிறார். அப்பா ஒய்.என். ரெட்டி. அம்மா லலிதா.
உடன் பிறந்தோர் 2 அண்ணன்கள் மட்டும். மூத்த அண்ணன் குமாரசாமி ரெட்டி. அடுத்த அண்ணன் ராம்பிரசாத் ரெட்டி.
ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கிடைக்கும் என்பார்கள். ரோஜாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப செல்லம். அதற்குக் காரணம் ரோஜாவே சொல்கிறார்:
"அப்பாவுக்கு அக்கா, தங்கை யாரும் கிடையாது. தாத்தாவுக்கும் அக்கா -தங்கை கிடையாது. இதனால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் ஆளாளுக்கு என்னை கொண்டாடினார்கள். பாசம் கொட்டினார்கள். ஆனாலும் நான் பையன் மாதிரிதான் வளர்ந்தேன். எப்போதும் யாரையாவது சீண்டியபடி ஜாலி ஜாலி ஜாலிதான். தாத்தா ஒருத்தருக்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன்.'' சொல்லிச் சிரிக்கிறார் ரோஜா.
பள்ளிப் பருவத்தில் கூட ரோஜாவுக்குள் நடிப்பு வாசனை வீசவில்லை. நடிகையாக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ஆனால், நம்பர் ஒன் சினிமா ரசிகையாக இருந்திருக்கிறார். அதுபற்றி ரோஜா கூறுகிறார்:
"பள்ளி நாட்களில் எல்லாம் ஒரு சினிமா விடமாட்டேன். ஸ்கூலுக்கு `கட்' அடித்து விட்டு தோழிகளுடன் போய் விடுவேன். ஆனால் அப்போதுகூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்த்ததே இல்லை.''
இப்படிச் சொல்லும் ரோஜாவுக்கு `நடிகை அந்தஸ்து' எப்போதுதான் வந்தது?
"அப்பா, சாரதி ஸ்டூடியோவில் சவுண்டு என்ஜினீயராக இருந்தார். சினிமா இயக்கும் ஆசை அவருக்கு இருந்தது. இதனால் வேலையை விட்டு விட்டு முதலில் `கொத்தடி பொம்மா பூர்ணமா' என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கினார்.
இதில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கோடி.ராமகிருஷ்ணாவின் மனைவியை நாயகியாக நடிக்க வைத்தார். அவரது மகளாக நடிக்க 10 வயதுப்பெண் தேவைப்பட்டபோது அப்பாவின் பார்வை என் மீது. அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம், "நாளை நீ பள்ளிக்குப் போகவேண்டாம்'' என்றார், அப்பா.
"ஏன்?'' என்று கேட்டேன்.
"நான் ஒரு டாகுமெண்டரி படம் இயக்குகிறேன் அல்லவா? அதில் உன் வயதுப்பெண் நடிக்க தேவைப்படுகிறாள். அது ஏன் நீயாக இருக்கக்கூடாது?'' என்று கேட்டார் அப்பா.
"நடிப்பதா? நானா? எனக்கு என்ன தெரியும் டாடி?'' என்று திருப்பிக் கேட்டேன்.
"இதுவும் பாடம் மாதிரிதான். நான் சொல்லித் தருவதை அப்படியே செய்தால் போதும்'' என்றார் அப்பா. படப்பிடிப்பில் அப்பா சொன்னதைச் செய்தேன். அவ்வளவுதான். அத்தோடு நடித்ததைக்கூட மறந்து மறுபடியும் மாணவியாகிவிட்டேன்.''
இவ்வாறு கூறினார், ரோஜா.
ரோஜாவுக்கு சினிமா வாய்ப்பு மறுபடியும் தேடி வந்தது கல்லூரிப் பருவத்தில்தான். திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பெண்கள் கல்லூரியில் முதலாண்டு மாணவியாக இருந்த நேரத்தில் `நடிப்பு' தேடிவந்து அழைத்திருக்கிறது. அதுபற்றி ரோஜா கூறுகிறார்:
"அப்பாவின் நண்பர் எங்கள் கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப்பார்த்த அவருக்குள் என்னை நடிக்க வைக்கும் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. இதை அவர் எங்கள் வீட்டில் சொன்னபோது அம்மா, அண்ணன்கள் பயங்கர எதிர்ப்பு. அப்பாதான், "நடித்தால்தான் என்ன?'' என்று கேட்டு, நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.
அப்பாவின் நண்பர் என்னை நிறைய படங்கள் எடுத்தார். அப்போது எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். நான் "ஒன்றுமில்லை'' என்று கூறி சமாளித்து விட்டேன். ஆனால் அந்தப் படங்களில் ஒன்று, ஒரு தெலுங்கு சினிமா பத்திரிகையின் அட்டையில் வர, அதுதான் தமிழில் என்னை நாயகியாக்கியது.
அதுகூட உடனடியாக இல்லை. தெலுங்குப் படம் எடுக்க முன்னேற்பாடுகளை செய்த அப்பாவின் நண்பர், தமிழில் பிரபலமாக இருந்த டைரக்டர் பாரதிராஜாவுக்கும் நண்பராக இருந்திருக்கிறார். அவரை தனது படப்பிடிப்புக்கு அழைத்த அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு சினிமா பெயரை சூட்டும்படி பாரதிராஜாவை கேட்டிருக்கிறார். என்னைப் பார்த்தது ஒரு நொடிதான். உடனே, "ரோஜா'' என்று பெயர் வைத்துவிட்டார்.
எனக்குப் பெயர் வைத்ததையே பாரதிராஜா மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அவருக்கு சம்பவம். எனக்கு சரித்திரம் அல்லவா! பின்னாளில் அவரது டைரக்ஷனில் தமிழ்ச்செல்வன் படத்தில் நடித்தபோது நான் இந்த பெயர் சூட்டிய சம்பவத்தை சொன்னேன். "அடடா! எனக்கு நினைவில்லையே?'' என்று ஆச்சரியப்பட்டார் அவர்.
இவ்வாறு ரோஜா கூறினார்.
அமீர்கான் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தங்கல்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும் அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் அடுத்த நிலையை எட்ட முடியாமல் போகிறது.
எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும் மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான்.
இந்நிலையில், ஒருநாள் அவரது குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அதை பார்க்கும் அமீர்கான், பெண் குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்று அந்த குழந்தைகள் இருவரையும் மல்யுத்த பயிற்சியில் களமிறக்குகிறார்.
சிறு வயது முதலே இருவருக்கும் பயிற்சி கொடுக்கும் அமீர்கான், கடைசியில் தன்னால் சாதிக்க முடியாததை தனது பெண் பிள்ளைகளை வைத்து சாதித்தாரா? என்பதே மீதிக்கதை.
இப்படம் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகட்டின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அமீர்கான் அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றும் பெண் குழந்தையாய் பிறந்தும், நான்காவதாக ஆண் குழந்தை பிறக்காதா? என்று ஏங்கும் இடங்களில் நம்மையும் ஏங்க வைத்துவிடுகிறார்.
அதேபோல், மல்யுத்த பயிற்சிக்காக தன்னுடைய விளைநிலத்தை சீர்படுத்தும் இடங்களில் பரிவு ஏற்பட வைத்திருக்கிறார். அப்பாவாகவும், பயிற்சியாளராகவும் அசத்தியிருக்கிறார். மேலும், இந்த வயதிலும் தன்னை வருத்திக் கொண்டு உடல் எடையை கூட்டி, குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமீரின் மனைவியாக வரும் சாக்க்ஷி தன்வர், நான்கு பெண்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். அமீர்கானின் குழந்தைகளாக வரும் நான்கு பெண்களும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் அமீர்கானுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அனைத்து கதாபாத்திரங்களும் சம பலம் கொடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி. ஒரு சாதாரண கதையம்சமுள்ள படத்தில் செண்டிமென்ட், எதார்த்தமான காமெடி மற்றும் தந்தை-மகள் பாசப்பிணைப்பு என அனைத்தையும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ப்ரீதம் சக்கரபோர்த்தியின் இசையில் பாடல்கள் சில ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், காட்சிகளுக்கேற்றவாறு பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மல்யுத்த காட்சிகளை எல்லாம் சிறப்பாக படமாக்கியிருக்கிறது. அதேநேரத்தில் கிராமத்தின் பசுமையையும், வறுமையையும் தெளிவாக கண்முன்னே கொண்டுவந்துள்ளது.
மொத்தத்தில் ‘தங்கல்’ பதக்கம் வெல்லும்.
எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும் மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான்.
இந்நிலையில், ஒருநாள் அவரது குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அதை பார்க்கும் அமீர்கான், பெண் குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்று அந்த குழந்தைகள் இருவரையும் மல்யுத்த பயிற்சியில் களமிறக்குகிறார்.
சிறு வயது முதலே இருவருக்கும் பயிற்சி கொடுக்கும் அமீர்கான், கடைசியில் தன்னால் சாதிக்க முடியாததை தனது பெண் பிள்ளைகளை வைத்து சாதித்தாரா? என்பதே மீதிக்கதை.
இப்படம் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகட்டின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அமீர்கான் அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றும் பெண் குழந்தையாய் பிறந்தும், நான்காவதாக ஆண் குழந்தை பிறக்காதா? என்று ஏங்கும் இடங்களில் நம்மையும் ஏங்க வைத்துவிடுகிறார்.
அதேபோல், மல்யுத்த பயிற்சிக்காக தன்னுடைய விளைநிலத்தை சீர்படுத்தும் இடங்களில் பரிவு ஏற்பட வைத்திருக்கிறார். அப்பாவாகவும், பயிற்சியாளராகவும் அசத்தியிருக்கிறார். மேலும், இந்த வயதிலும் தன்னை வருத்திக் கொண்டு உடல் எடையை கூட்டி, குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமீரின் மனைவியாக வரும் சாக்க்ஷி தன்வர், நான்கு பெண்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். அமீர்கானின் குழந்தைகளாக வரும் நான்கு பெண்களும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் அமீர்கானுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அனைத்து கதாபாத்திரங்களும் சம பலம் கொடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி. ஒரு சாதாரண கதையம்சமுள்ள படத்தில் செண்டிமென்ட், எதார்த்தமான காமெடி மற்றும் தந்தை-மகள் பாசப்பிணைப்பு என அனைத்தையும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ப்ரீதம் சக்கரபோர்த்தியின் இசையில் பாடல்கள் சில ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், காட்சிகளுக்கேற்றவாறு பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மல்யுத்த காட்சிகளை எல்லாம் சிறப்பாக படமாக்கியிருக்கிறது. அதேநேரத்தில் கிராமத்தின் பசுமையையும், வறுமையையும் தெளிவாக கண்முன்னே கொண்டுவந்துள்ளது.
மொத்தத்தில் ‘தங்கல்’ பதக்கம் வெல்லும்.
சசிகுமார், கோவை சரளா, சங்கிலி முருகன், தான்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘பலே வெள்ளையத் தேவா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் சசிகுமார் படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா ரோகிணி போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், ரோகிணிக்கு மதுரை பக்கத்தில் உள்ள வயலூர் என்ற கிராமத்திற்கு பணி மாற்றம் வருகிறது.
அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வளவன், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது.
அதே ஊரில், கறிக்கடைக் காரர் பாலா சிங்கின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்.
இந்நிலையில், அந்த ஊரில் சசிகுமார் வீட்டில் மட்டும் டிஷ் ஆண்டெனா இருப்பதை பார்க்கும் வளவன், ரோகிணியை அழைத்து மிரட்டுகிறார். இதனால், ரோகிணி தன்னுடைய வீட்டில் உள்ள டிஷ் ஆன்டெனாவை நீக்கி விடுகிறார். தாயை மிரட்டிய வளவனை, அடித்து உதைக்கிறார் சசிகுமார். இதற்கு பழிவாங்க திட்டமிடுகிறார் வளவன்.
அதன்படி, போலீஸ் நிலையத்தில் சென்று தன்னுடைய ஆட்களில் ஒருவனின் கையை சசிகுமார் உடைத்து விட்டதாக புகார் கொடுக்கிறார் வளவன். அதன்படி, சசிகுமாரும் கைதாகிறார். போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் இருப்பதால், அவருக்கு அரசாங்க வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகிறது.
பின்னர், ஜெயிலில் இருந்து வெளியே வரும் சசிகுமார், விவசாயம் செய்யப்போவதாக தனது அம்மாவை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில், தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய வளவனை தனது பாணியில் எப்படி வீழ்த்துவது என்று திட்டம் போடுகிறார். இறுதியில், அவரை எப்படி பழிவாங்கினார்? நாயகனும், நாயகியும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
சசிகுமார் தனக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதேபோல், இந்த படத்திலும் தனக்கு ஏற்றமாதிரி கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். முற்பாதியில், கோவை சரளா, சங்கிலி முருகன் தம்பதிகளிடம் சேர்ந்துகொண்டு நாயகியை விரட்டும் காட்சிகளில் அவருக்கே உரித்த ஸ்டைலில் நடித்திருக்கிறார். நடனத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.
நாயகி தான்யா, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி. பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் தனது தாத்தாவின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். கோவை சரளா - சங்கிலி முருகன் இருவரும் காமெடிக்காக இணைக்கப்பட்டிருந்தாலும், படத்தில் இவர்களுடைய காமெடி பெரிதாக எடுபடவில்லை. செல்பி காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் வரும் கோவை சரளா படம் முழுக்க செல்பி எடுப்பதுபோல் வரும் இவருடைய நடிப்பு ரொம்பவும் செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது.
வளவன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ரோகிணி ரொம்பவும் தைரியமான பெண்ணாகவும், பொறுப்பான அம்மாவாகவும் வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் எந்த கதாபாத்திரங்களும் மனதில் பதியவில்லை.
ஒரு கிராமத்து கதையில் காதல், காமெடி, பகை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சோலை பிரகாஷ். ஆனால், படத்தில் காமெடி என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நிறைய தமிழ் சினிமாக்களில் அரைத்த மாவையே இதிலும் சேர்த்து அரைத்திருக்கிறார். அதனால், படம் பெரிய அளவில் ரசிகர்கள் மனத்தில் ஒட்டவில்லை.
ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பக்கபலமாக இருக்கிறது. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிதளவில் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பலே வெள்ளையத் தேவா’ பலவீனம்.
அந்த ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் வளவன், எந்த வீட்டிலும் டிஷ் ஆன்டெனா மாட்டக்கூடாது என்றும் தனது கேபிள் டி.வி.யையே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அராஜகம் செய்து வருகிறார். இதனால், அந்த ஊரில் யாரும் டிஷ் ஆன்டெனா வாங்குவதே கிடையாது.
அதே ஊரில், கறிக்கடைக் காரர் பாலா சிங்கின் மகளான நாயகி தான்யா, மகளிர் சுயஉதவிக் குழுவில் பணியாற்றுகிறார். இவரை சசிகுமார் ஒருதலையாக காதலிக்கிறார். அதே ஊரில் வசிக்கும் கலகலப்பான தம்பதிகளான கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்.
இந்நிலையில், அந்த ஊரில் சசிகுமார் வீட்டில் மட்டும் டிஷ் ஆண்டெனா இருப்பதை பார்க்கும் வளவன், ரோகிணியை அழைத்து மிரட்டுகிறார். இதனால், ரோகிணி தன்னுடைய வீட்டில் உள்ள டிஷ் ஆன்டெனாவை நீக்கி விடுகிறார். தாயை மிரட்டிய வளவனை, அடித்து உதைக்கிறார் சசிகுமார். இதற்கு பழிவாங்க திட்டமிடுகிறார் வளவன்.
அதன்படி, போலீஸ் நிலையத்தில் சென்று தன்னுடைய ஆட்களில் ஒருவனின் கையை சசிகுமார் உடைத்து விட்டதாக புகார் கொடுக்கிறார் வளவன். அதன்படி, சசிகுமாரும் கைதாகிறார். போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் இருப்பதால், அவருக்கு அரசாங்க வேலை கிடைக்காத சூழ்நிலை உருவாகிறது.
பின்னர், ஜெயிலில் இருந்து வெளியே வரும் சசிகுமார், விவசாயம் செய்யப்போவதாக தனது அம்மாவை சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில், தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய வளவனை தனது பாணியில் எப்படி வீழ்த்துவது என்று திட்டம் போடுகிறார். இறுதியில், அவரை எப்படி பழிவாங்கினார்? நாயகனும், நாயகியும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
சசிகுமார் தனக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அதேபோல், இந்த படத்திலும் தனக்கு ஏற்றமாதிரி கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். முற்பாதியில், கோவை சரளா, சங்கிலி முருகன் தம்பதிகளிடம் சேர்ந்துகொண்டு நாயகியை விரட்டும் காட்சிகளில் அவருக்கே உரித்த ஸ்டைலில் நடித்திருக்கிறார். நடனத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவை.
நாயகி தான்யா, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி. பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் தனது தாத்தாவின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். கோவை சரளா - சங்கிலி முருகன் இருவரும் காமெடிக்காக இணைக்கப்பட்டிருந்தாலும், படத்தில் இவர்களுடைய காமெடி பெரிதாக எடுபடவில்லை. செல்பி காத்தாயி என்ற கதாபாத்திரத்தில் வரும் கோவை சரளா படம் முழுக்க செல்பி எடுப்பதுபோல் வரும் இவருடைய நடிப்பு ரொம்பவும் செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது.
வளவன் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ரோகிணி ரொம்பவும் தைரியமான பெண்ணாகவும், பொறுப்பான அம்மாவாகவும் வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் எந்த கதாபாத்திரங்களும் மனதில் பதியவில்லை.
ஒரு கிராமத்து கதையில் காதல், காமெடி, பகை என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சோலை பிரகாஷ். ஆனால், படத்தில் காமெடி என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நிறைய தமிழ் சினிமாக்களில் அரைத்த மாவையே இதிலும் சேர்த்து அரைத்திருக்கிறார். அதனால், படம் பெரிய அளவில் ரசிகர்கள் மனத்தில் ஒட்டவில்லை.
ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பக்கபலமாக இருக்கிறது. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிதளவில் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பலே வெள்ளையத் தேவா’ பலவீனம்.
பாலிவுட் நடிகர் அமீர்கானை தொழில்ரீதியாக வெறுப்பதாக சகநடிகர் சல்மான் கான் தெரிவிக்கும் அளவுக்கு அவர் என்ன தவறு செய்து விட்டார்? என்பதை இங்கே பார்ப்போம்.
அமீர் கானின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தங்கல்’ திரைப்படம் நேற்று வெளியாகி, வசூல்ரீதியாகவும், விமர்சனங்கள் மூலமாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகாட்-டின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அமீர் கானுக்கு சகநடிகரான சல்மான் கான், தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீங்கள் நடித்துள்ள ‘தங்கல்’ படத்தை என்னுடைய குடும்பத்தினர் நேற்று மாலை பார்த்தனர். நான் நடித்த ‘சுல்தான்’ படத்தைவிட உங்கள் படம் சிறப்பாக இருந்தாக அவர்கள் தெரிவித்தனர். உங்களை தனிப்பட்ட முறையில் நான் நேசித்தாலும், தொழில்ரீதியாக நான் வெறுக்கிறேன் என்று அந்த டுவீட்டில் சல்மான் கான் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு உடனடியாக தனது டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ள அமீர் கான், ‘உங்கள் வெறுப்பிலும் நான் நேசத்தையே பார்க்கிறேன். உங்களை வெறுப்பதைப்போல் நானும் நேசிக்கவே செய்கிறேன்’ (Sallu, in your 'hate' I feel only
love. 'I love you like I hate you) என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அமீர் கானுக்கு சகநடிகரான சல்மான் கான், தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீங்கள் நடித்துள்ள ‘தங்கல்’ படத்தை என்னுடைய குடும்பத்தினர் நேற்று மாலை பார்த்தனர். நான் நடித்த ‘சுல்தான்’ படத்தைவிட உங்கள் படம் சிறப்பாக இருந்தாக அவர்கள் தெரிவித்தனர். உங்களை தனிப்பட்ட முறையில் நான் நேசித்தாலும், தொழில்ரீதியாக நான் வெறுக்கிறேன் என்று அந்த டுவீட்டில் சல்மான் கான் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு உடனடியாக தனது டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ள அமீர் கான், ‘உங்கள் வெறுப்பிலும் நான் நேசத்தையே பார்க்கிறேன். உங்களை வெறுப்பதைப்போல் நானும் நேசிக்கவே செய்கிறேன்’ (Sallu, in your 'hate' I feel only
love. 'I love you like I hate you) என பதிவிட்டுள்ளார்.
எஸ்.வி.சேகர், விசு நடிப்பில் 34 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மணல் கயிறு -2’ வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
முதல் பாகத்தில் திருமண புரோக்கராக வரும் விசுவிடம் எட்டு கண்டிஷன்கள் போட்டு, அவர் பார்த்து வைக்கும் சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்கிறார் எஸ்.வி.சேகர். அதன்பிறகு, தனது எட்டு கண்டிஷன்களுக்கும் அவள் சற்றும் பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்ததும், வேறு வழியில்லாமல் அவளுடனேயே 34 வருடங்கள் வாழ்ந்து விடுகிறார்.
35 வருடங்களுக்கு பிறகு மணல் கயிறு 2-ம் பாகத்தில் எஸ்.வி.சேகருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவள்தான் பூர்ணா. திருமணத்தில் பூர்ணாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எந்நேரமும் பிசினஸிலேயே பிசியாக இருக்கிறாள். இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணா, தனது அப்பா போலவே தனக்கு வரும் மாப்பிள்ளை தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் ஒத்துப்போனவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள்.
தனக்கு பெண் பார்த்த விசுவையே தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளை தேட அழைக்கிறார் எஸ்.வி.சேகர். அவர் பூர்ணாவின் எட்டு கண்டிஷன்களுக்கும் பொருத்தமானவர் அஸ்வின் சேகர்தான் என்று கூற இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு, அஸ்வின் சேகர் தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் எதிரானவர் என்பது பூர்ணாவுக்கு தெரிய வருகிறது.
இதன்பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
முதல்பாகத்தில் வந்த எஸ்.வி.சேகர், விசு, குரியகோஸ் ஆகியோர் அதே கதாபாத்திரங்களை இந்த பாகத்திலும் ஏற்று நடித்திருக்கிறார்கள். தங்களது அனுபவம் மிகுந்த நடிப்பை இதிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணா வேடத்தில் ஜெயஸ்ரீ கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
நாயகன் அஸ்வின் சேகர் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். பூர்ணாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். அவருடைய நடிப்பை பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரம் என்பதால் அவரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
ஜோசியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணன், விளம்பர படம் இயக்குபவராக வரும் ஜெகன், அவரது உதவியாளராக வரும் ஜார்ஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாரதர் நாயுடுவின் உதவியாளராக வரும் சுவாமிநாதன், விசுவுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.
முதல் பாதியில் எப்படி காமெடி, செண்டிமெண்ட், சமூக கருத்துக்கள் இருந்ததோ, அதையே இரண்டாம் பாகத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதன்குமார். படத்தின் முதல் பாதி நாடகத்தன்மையுடன் இருந்தாலும் கலகலப்புடன் நகர்வதால் படம் பெரிதாக போரடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பூர்ணாவின் திருமணம், அதன்பிறகு நடக்கும் பிரச்சினைகள், செண்டிமெண்ட் என கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. இருப்பினும், பாசிட்டிவான கிளைமாக்ஸ் ரசிகர்களை திருப்தியடைய வைக்கிறது.
எஸ்.வி.சேகரின் திரைக்கதையோடு மதன்குமாரின் இயக்கமும் இணைந்து பயணித்திருப்பது படத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது.
தரணின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, அனிருத் பாடியுள்ள ‘அடியே தாங்கமாட்டே’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான். ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தல் ‘மணல் கயிறு 2’ அவிழ்க்க முடியாத முடிச்சு.
35 வருடங்களுக்கு பிறகு மணல் கயிறு 2-ம் பாகத்தில் எஸ்.வி.சேகருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவள்தான் பூர்ணா. திருமணத்தில் பூர்ணாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எந்நேரமும் பிசினஸிலேயே பிசியாக இருக்கிறாள். இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணா, தனது அப்பா போலவே தனக்கு வரும் மாப்பிள்ளை தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் ஒத்துப்போனவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள்.
தனக்கு பெண் பார்த்த விசுவையே தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளை தேட அழைக்கிறார் எஸ்.வி.சேகர். அவர் பூர்ணாவின் எட்டு கண்டிஷன்களுக்கும் பொருத்தமானவர் அஸ்வின் சேகர்தான் என்று கூற இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு, அஸ்வின் சேகர் தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் எதிரானவர் என்பது பூர்ணாவுக்கு தெரிய வருகிறது.
இதன்பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
முதல்பாகத்தில் வந்த எஸ்.வி.சேகர், விசு, குரியகோஸ் ஆகியோர் அதே கதாபாத்திரங்களை இந்த பாகத்திலும் ஏற்று நடித்திருக்கிறார்கள். தங்களது அனுபவம் மிகுந்த நடிப்பை இதிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணா வேடத்தில் ஜெயஸ்ரீ கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
நாயகன் அஸ்வின் சேகர் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். பூர்ணாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். அவருடைய நடிப்பை பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரம் என்பதால் அவரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
ஜோசியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணன், விளம்பர படம் இயக்குபவராக வரும் ஜெகன், அவரது உதவியாளராக வரும் ஜார்ஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாரதர் நாயுடுவின் உதவியாளராக வரும் சுவாமிநாதன், விசுவுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.
முதல் பாதியில் எப்படி காமெடி, செண்டிமெண்ட், சமூக கருத்துக்கள் இருந்ததோ, அதையே இரண்டாம் பாகத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதன்குமார். படத்தின் முதல் பாதி நாடகத்தன்மையுடன் இருந்தாலும் கலகலப்புடன் நகர்வதால் படம் பெரிதாக போரடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பூர்ணாவின் திருமணம், அதன்பிறகு நடக்கும் பிரச்சினைகள், செண்டிமெண்ட் என கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. இருப்பினும், பாசிட்டிவான கிளைமாக்ஸ் ரசிகர்களை திருப்தியடைய வைக்கிறது.
எஸ்.வி.சேகரின் திரைக்கதையோடு மதன்குமாரின் இயக்கமும் இணைந்து பயணித்திருப்பது படத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது.
தரணின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, அனிருத் பாடியுள்ள ‘அடியே தாங்கமாட்டே’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான். ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தல் ‘மணல் கயிறு 2’ அவிழ்க்க முடியாத முடிச்சு.
தனது கணவரை விவாகரத்து செய்யக்கோரி சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பநல கோர்ட்டில் மனு அளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அவர்கள் பிரிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், தனது கணவர் அஸ்வினை சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி -2’ படத்தை இயக்கவிருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் என முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்களும் இப்பாகத்திலும் நடிக்கிறார்கள்.
அவர்கள் பிரிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், தனது கணவர் அஸ்வினை சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி -2’ படத்தை இயக்கவிருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் என முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்களும் இப்பாகத்திலும் நடிக்கிறார்கள்.
அய்யப்பனுக்கு இரவில் பாடப்படும் ஹரிவராசனம் பாடலில் தவறு இருப்பதால், அந்த தவறை திருத்தி மீண்டும் யேசுதாஸ் பாடினால் சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளதாக தந்திரி கூறி உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.
அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானத்தில் 18-ம் படி ஏற மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அப்போது அய்யப்பனை தூங்க வைக்க ஹரிவராசனம் பாடல் இசைக்கப்படும். அத்துடன் நடை சாத்தப்படும்.
இந்த பாடலை பிரபல பாடகர் யேசுதாஸ் பாடியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாடல்தான் சபரிமலையில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த பாடலில் சிறு தவறு இருப்பதாக யேசுதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஹரிவராசனம் பாடலை பாடும்போது அதன் 3-வது வரியில் ‘ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்...’ என வருகிறது. இதில் ஹரி என்றால் எதிரி என்று பொருள். விமர்த்தனம் என்றால் அழித்தல் என்று பொருள். எனவே ஹரி, விமர்த்தனம் இரு வார்த்தைகளையும் தனித்தனியாக பாட வேண்டும்.
ஆனால் நான் இதை ‘ஹருவிமர்த்தனம்‘ என ஒரே வார்த்தையாக சேர்த்து பாடி உள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகரில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பாடச் சென்றபோது அக்கோவில் தந்திரிதான் இந்த தவறை எனக்கு சுட்டிக்காட்டினார். எனவே எனக்கு மீண்டும் ஒருமுறை இப்பாடலை பாட வாய்ப்பு கிடைத்தால் திருத்தி பாட தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
மேலும் சமீபத்தில் அவர், சபரிமலைக்கு சென்றபோது சன்னிதானத்தில் இப்பாடலை திருத்தி பாடினார்.
இந்த தகவல் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு தெரிய வந்தது. அவர், இதுபற்றி கூறும்போது, ஹரிவராசனம் பாடலில் உள்ள தவறை யேசுதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த தவறை திருத்தி மீண்டும் அவர் பாடலை பாடினால் அதை சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளோம் என்றார்.
கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.
அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானத்தில் 18-ம் படி ஏற மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அப்போது அய்யப்பனை தூங்க வைக்க ஹரிவராசனம் பாடல் இசைக்கப்படும். அத்துடன் நடை சாத்தப்படும்.
இந்த பாடலை பிரபல பாடகர் யேசுதாஸ் பாடியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாடல்தான் சபரிமலையில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த பாடலில் சிறு தவறு இருப்பதாக யேசுதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஹரிவராசனம் பாடலை பாடும்போது அதன் 3-வது வரியில் ‘ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்...’ என வருகிறது. இதில் ஹரி என்றால் எதிரி என்று பொருள். விமர்த்தனம் என்றால் அழித்தல் என்று பொருள். எனவே ஹரி, விமர்த்தனம் இரு வார்த்தைகளையும் தனித்தனியாக பாட வேண்டும்.
ஆனால் நான் இதை ‘ஹருவிமர்த்தனம்‘ என ஒரே வார்த்தையாக சேர்த்து பாடி உள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகரில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பாடச் சென்றபோது அக்கோவில் தந்திரிதான் இந்த தவறை எனக்கு சுட்டிக்காட்டினார். எனவே எனக்கு மீண்டும் ஒருமுறை இப்பாடலை பாட வாய்ப்பு கிடைத்தால் திருத்தி பாட தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
மேலும் சமீபத்தில் அவர், சபரிமலைக்கு சென்றபோது சன்னிதானத்தில் இப்பாடலை திருத்தி பாடினார்.
இந்த தகவல் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு தெரிய வந்தது. அவர், இதுபற்றி கூறும்போது, ஹரிவராசனம் பாடலில் உள்ள தவறை யேசுதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த தவறை திருத்தி மீண்டும் அவர் பாடலை பாடினால் அதை சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளோம் என்றார்.
தமிழ் திரையுலகினர் இன்று (23-ந் தேதி) காலை 11 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் தமிழ் திரையுலகினர் இன்று (23-ந் தேதி) அஞ்சலி செலுத்துகிறார்கள்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
அவர்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்துக்கு சென்றும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் வணங்குகிறார்கள்.
திரையுலகினர் ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
அவர்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்துக்கு சென்றும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் வணங்குகிறார்கள்.
திரையுலகினர் ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.








