என் மலர்
ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியமான நிகழ்வு. இதை விதிமுறைகளுடன் நடத்தவேண்டும் என்பது எனது கருத்து. ஜல்லிக்கட்டு தடைக்கு மிருக வதை என்பதுதான் காரணம் என்று சொல்கிறார்கள். இது ஏற்புடையதாக இல்லை. உண்மையிலேயே, மிருக வதைக்கு தடை செய்வதென்றால் தீபாவளிக்கு வெடிக்கின்ற பட்டாசையும், விநாயகர் சதுர்த்திக்கு கடலில் கரைக்ககூடிய சிலைகளையும்தான் நாம் முதலில் தடை செய்யவேண்டும்.
நான் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடி வாசல்’ என்ற நாவலின் உரிமையை வாங்கி வைத்துள்ளேன். சீக்கிரமாகவே ஜல்லிக்கட்டு பற்றிய ஒரு படத்தை எடுப்பேன் என்று கூறினார். இயக்குனர் அமீரும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி ‘சந்தனத்தேவன்’ என்ற படத்தை தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் சான்றாக நடக்கும் ஜல்லிக்கட்டை தடைசெய்வது கண்டிக்கத்தக்கது. தமிழரின் பாரம்பரியத்தை தடை செய்ய நினைக்கும் பீட்டாவை தடை செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதிலும் இருந்து அலங்காநல்லூரில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு போராடி வருகின்றனர். இளைஞர்களின் இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இளைஞர்களுடன் நாங்களும் தொடர்ந்து போராடுவோம்.
ஜல்லிக்கட்டு நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும். தமிழர்களின் உண்மையான உணர்வை உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எமிஜாக்சன் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது 15 வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்தேன். அழகி போட்டிகளில் பங்கேற்றும் பரிசுகள் வென்றேன். அப்போதுதான் இயக்குனர் விஜய் என்னை அடையாளம் கண்டு அவருடைய மதராசபட்டினம் படத்தில் அறிமுகம் செய்தார்.
ஆரம்பத்தில் மொழி தெரியாமல் கஷ்டமாக இருந்தது. எனது தோழிகள் லண்டனில் விருந்து, கொண்டாட்டம் என்று இருந்தபோது நான் சென்னையில் ஓட்டலில் தங்கி தமிழ் மொழியை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது எனக்கு தமிழ் தெரியும். சிறு வயதிலேயே மாடலிங் என்று வெளிநாடுகளில் சுற்றியதால் சினிமா நெருக்கடிகள் கஷ்டமாக தெரியவில்லை.
தற்போது இந்தியும் கற்று விட்டேன். வெளிநாட்டில் இருந்து வந்த என்னை தமிழ் ரசிகர்களும் மற்ற மொழி ரசிகர்களும் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினிகாந்துடன் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். 2.0 அதிரடி கதை. இதில் நடிப்பதற்காக சண்டை பயிற்சிகள் கற்றேன்.
யோகா-தியானம்
இதற்காக உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றினேன். காய்கறி, பழங்களையே சாப்பிட்டேன். முட்டை, இறைச்சி வகைகளை ஒதுக்கினேன். தற்போது யோகாவும் கற்கிறேன். தியானமும் செய்கிறேன். உடல் அழகை பாதுகாக்கவும் அக்கறை எடுக்கிறேன். கனவு இல்லாமல் ஒரு நாளைக்கூட கழிக்க கூடாது என்பதை என் வாழ்நாள் மந்திரமாக வைத்து இருக்கிறேன்.”
இவ்வாறு எமிஜாக்சன் கூறினார்.
அதன்பின் "கொடுத்து வைத்தவள்'' என்ற படத்தை ராமண்ணாவும், ஈ.வி.சரோஜாவும் தயாரித்தனர். இந்தப்படத்தில், எம்.ஜி.ஆரும், ஈ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இது வெற்றிப்படம்.
அதன் பிறகு ஈ.வி.சரோஜா படங்களில் நடிக்கவில்லை குடும்பத் தலைவியானார்.
ஈ.வி.சரோஜா - ராமண்ணா தம்பதிகளுக்கு ஒரே மகள். பெயர் நளினி. இவருக்கு 1981-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் பெயர் சிவப்பிரகாஷ். துபாயில் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் துணைத் தலைவராக இருக்கிறார்.
நளினிக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் பெயர் வஷின்யா. மகன் பெயர் ராகுல். இருவரும் கனடாவில் படித்து வருகிறார்கள்.
துபாயில் கணவருடன் வசித்து வரும் நளினி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சென்னை வந்து இங்குள்ள தனது தாயாருடைய சொத்துக்களை கவனித்துச் செல்கிறார். இவற்றை ஈ.வி.சரோஜாவின் தம்பி ஈ.வி.ராஜன் பொறுப்பேற்று கவனித்து
வருகிறார்.கடந்த வாரம் சென்னை வந்த நளினி தன் தாயார் ஈ.வி.சரோஜாவின் நினைவுகளை "தினத்தந்தி'' நிருபரிடம் பகிர்ந்து
கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:- "எனது தாயார் சினிமாவில் நடிப்பதைவிட,நடனம் ஆடுவதையே அதிகம் விரும்புவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களில் நடித்தார். மொத்தம் 50 அல்லது 60 படங்கள் இருக்கும். பெரும்பாலான படங்களில் நடனம் மட்டுமே ஆடியுள்ளார்.
கதாநாயகியாக நடித்த படங்கள் வெகு சிலவே. சந்திரபாபுவுடன் காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார்.
எனது தாயார் சினிமாவில் நடிப்பதில் என் தந்தைக்கு விருப்பம் இல்லை. அதனால் எனது தாயார் 26 வயதிலேயே சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, குடும்பத் தலைவி ஆகிவிட்டார்.
அவர் காலத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் எல்லாம் பிற்காலத்தில் குணச்சித்திர நடிகைகளோ அல்லது அம்மா வேடம் போட்டோ நடிக்க வந்துவிட்டார்கள். ஆனால் என் தாயார் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், மீண்டும் நடிக்கவே இல்லை.
அவருக்கு நடனத்தின் மீதே அதிக நாட்டம் இருந்ததால், "மனோன்மணியம்'' கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து அந்த நடன நிகழ்ச்சியை இந்தியாவில் உள்ள ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் நடத்தி இருக்கிறார்.
என் அம்மாவுக்கு குடும்பம்தான் முக்கியம். மிகவும் இளகிய மனம் படைத்தவர். யார் வந்து உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவும் குணம் படைத்தவர். படிப்பதற்கு யாராவது உதவி கேட்டால், தன்னிடம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது படிக்க உதவுவார்.
எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள் சென்னையிலும் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் பலருக்கு என் அம்மா செய்த உதவிதான் காரணம்.
இவ்வளவு இளகிய மனம் படைத்தவர், என் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு டீச்சரைப்போல் என்னை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள். அப்போது எனக்கு அது கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்போது அதையெல்லாம் நினைக்கும்போது என் மீது அம்மா தன் உள்ளத்தில் வைத்திருந்த அன்பை உணர முடிகிறது.
எனக்கு சிறு வயதிலேயே நடனம் கற்றுக் கொடுத்தார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் ஆடினேன். பல பேர் என்னை திரைப்படத்தில் நடிக்க வைக்க, எனது பெற்றோர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இந்த விஷயம் எனக்கு திருமணம் ஆன பிறகு, என் பெற்றோர்கள் என்னிடம் சொன்ன பிறகுதான் தெரிந்தது.
என்னை கண்ணுக்குள் வைத்து வளர்த்து ஆளாக்கி ஒரு நல்லவரிடம் ஒப்படைத்த எனது பெற்றோர்கள் என் தெய்வங்கள்.
எனது தாயார் ஊரான திருவாரூரை அடுத்த எண்கண் கிராமத்தில் ஈ.வி.சரோஜா கல்வி நிலையம் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தை எனது தாயார் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. அதை எனது சொந்த செலவில் உயர்நிலைப்பள்ளியாக ஆக்குவதே எனது தாயாருக்கு நான் செய்யும் நன்றியாகும்.
என்னுடைய 25-ம் ஆண்டு திருமண வெள்ளி விழாவில் கலந்து கொண்ட எனது தாயார் அதற்கு பிறகு ஒரு வாரமே உயிருடன் இருந்தார்கள். 2006 நவம்பர் 3-ந்தேதி காலமாகிவிட்டார்கள். அதை நினைக்கும்போது என் இதயமே வெடித்து விடும் போல் உள்ளது.
துபாயிலிருந்து இங்கு வந்து வீட்டிற்குள் நுழைந்து, வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது என் தாயாரின் நினைவுதான் எனக்கு வரும்.
அந்த அளவிற்கு என் தாயாரின் இழப்பு என்னை பாதித்துள்ளது.''
இவ்வாறு நளினி கூறினார்.
ஈ.வி.சரோஜாவிற்கு, உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் தன்னுடைய மகள், மருமகன், பேரக்குழந்தைகளுடன் உலகின் பெரும்பா லான நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
ஈ.வி.சரோஜா, 1974-ம் ஆண்டு "கலைமாமணி'' விருது பெற்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய கணவர் ராமண்ணாவிற்கும், அப்போதுதான் "கலைமாமணி'' விருது கிடைத்தது. கணவன் - மனைவி இருவரும் ஒரே நேரத்தில் "கலைமாமணி'' விருதை, அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கையில் பெற்றார்கள்.
முத்தமிழ்ப் பேரவை சார்பில் "நாட்டிய செல்வி'' என்ற பட்டம் ஈ.வி.சரோஜாவுக்கு வழங்கப்பட்டது.
2002-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் "எம்.ஜி.ஆர். விருதை'' அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஈ.வி.சரோஜாவிற்கு வழங்கினார்.
மு.க.அழகிரியின் பேத்தியின் நடன அரங்கேற்றம் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிதான் ஈ.வி.சரோஜா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதில் கலைஞர் கருணாநிதி பேசும்போது, "நடனத்தில் மிகச்சிறந்த மேதையான ஈ.வி.சரோஜா போன்றவர்கள் வந்து என் கொள்ளுப்பேத்தியை வாழ்த்தியதை நான் பெருமையாக கருதுகிறேன்'' என்றார்.
இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறும்போது, ‘எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. இவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகியவற்றை சேகரித்து, ஒரு பாடல் எழுதி அதை வீடியோவாக தயார் செய்திருக்கிறேன். இந்த வீடியோவை எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, எங்கள் இல்லத்திலேயே வெளியிடலாம் என்று கூறினார்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான நாளை, எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களின் இல்லமான ராமாபுரத்தில் வெளியிட இருக்கிறேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகளை பற்றிய வீடியோவை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்' என்றார்.
இயக்குனர் பேரரசு உருவாக்கியுள்ள வீடியோவிற்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களில், சங்கரின் பேரன், ரசாந்த் இசையமைத்துள்ளார். லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு அஞ்சலியும் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் பெயர் அஞ்சலி அமீர். மலையாள சினிமா உலகை சேர்ந்த அஞ்சலி அமீர் திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் திருநங்கைகள் நடித்திருந்தாலும், மலையாள சினிமாவில் நடித்துள்ள முதல் திருநங்கை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
21 வயதான அஞ்சலி அமீர் முதலில் மம்முட்டியுடன் இணைந்து நடிப்பதற்கு மிகவும் தயங்கியுள்ளார். பிறகு, தனது பாசிட்டிவான அணுகுமுறையால் இவரது பயத்தை போக்கி நடிக்க உதவியுள்ளார். மேலும், சினிமா குறித்த சில விஷயங்களையும் அஞ்சலிக்கு கற்றுக் கொடுத்துள்ளார் மம்முட்டி.
இவருடன் இன்னொரு வில்லி வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரியா நடிக்கப்போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தாலும், தற்போது அவர் வில்லியாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வில்லி என்பதால் இவருக்கு இப்படத்தில் ஆக்சன் காட்சிகளும், பைக் சேசிங் காட்சிகளும் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘துப்பறிவாளன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்கையில், மூணுஷா நடிகைக்கு சினிமா உலகில் ஆதரவு இருந்து வருகிறது. ஆனால், ஒரேயொரு இயக்குனர் மட்டும் மூணுஷா நடிகையை ரொம்பவும் கண்டித்து பேசியுள்ளார். அவர் பிரகாஷமான நடிகரை வைத்து அடங்காத ஒரு படத்தை எடுத்து வருபவர். இவர், ஒருபடி மேலே போய் மூணுஷாவை குடிகாரி என்றும் குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி இன்னும் மூணுஷாவின் காதுகளுக்கு சென்றதாக தகவல் இல்லை. தற்போது மூணுஷா நடிகையின் டுவிட்டர் கணக்கு முடங்கியுள்ளதால் அவருக்கு தெரியாத சூழ்நிலை நிலவியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் மூணுஷாவின் காதுகளுக்கு சென்றால் அவர் என்ன முடிவெடுப்பார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சரத்குமார் கூறியதாக வெளிவந்த அந்த செய்தி ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. சரத்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல இடங்களில் அவரது கொடும்பாவியை ரஜினி ரசிகர்கள் எரித்து போராட்டங்களை நடத்தினர்.
இதற்கு விளக்கம் அளிக்கும்விதமாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை, மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர்கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்று குறிப்பிட்ட கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.
அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைத்தான் கேட்கவேண்டும் என்று தெரிவித்தேன். பிறகு தமிழகத்தை தமிழன்தான் என்றும் ஆளவேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிகை சகோதரர்கள் ‘ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டனர்.
அதற்கு ரஜினி இனியவர், என் நண்பர். ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.
எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை என் சமத்துவ தமிழ் நெஞ்சங்கள் பொறுமையுடனும் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் நடிகை திரிஷா நீடிப்பதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் பதிவிடப்பட்டது. இதையடுத்து, தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் எப்போதும் பேசியதே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார் திரிஷா.
இதற்கிடையே திரிஷாவின் டுவிட்டர் பகுதியில் சர்ச்சைக்குரிய தகவல் வெளியிடப்பட்டது. இதற்கு, தன்னுடைய டுவிட்டர் கணக்கு யாரோ மர்ம நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டு விட்டதாக திரிஷா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் திரிஷாவின் தாயார் உமா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனது மகள் திரிஷாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.
பின்னர் அவர் பேட்டியளிக்கும்போது, ஜல்லிக்கட்டுக்கு நடிகை த்ரிஷா எதிரானவர் அல்ல. பீட்டா அமைப்பில் த்ரிஷா உறுப்பினராக இல்லை. அவர் பீட்டா அமைப்பிற்கு விளம்பர தூதுவராகவும் இல்லை என்று தெரிவித்தார்.
காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் செய்யப்பட்டுள்ள அலங்கார ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக 11-ந் தேதி இரவு இமயம் ரவி வந்து இருக்கிறார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமைடந்த அவரது குடும்பத்தினர் நாலாபக்கமும் இமயம் ரவியை தேடி வந்தனர்.
இந்நிலையில், இமயம் ரவி காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்று பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்த போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 3 வாலிபர்கள் இமயம் ரவியிடம் இருந்த செல்போன், ரூ.250 பணத்தை பறிக்க முயற்சித்தபோது, அவர்களுடன் நடந்த மோதலில் இமயம் ரவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தனது மக்கள் இயக்க தலைவர் இமயம் ரவி கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த நடிகர் விஜய், அவரது இல்லத்துக்கு நேரில் சென்று இமயம் ரவியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
திரிஷாவும் தன் பங்குக்கு தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை என்று கருத்து தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திரிஷாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது, சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
இதனால் மனமுடைந்த திரிஷா, டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார். தற்போது, அவருடைய டுவிட்டர் பக்கம் செயலிழந்து போயுள்ளது. திரிஷாவின் இந்த முடிவு தொடருமா? அல்லது ஜல்லிக்கட்டு விவகாரம் முடிந்த பிறகு மீண்டும் அவர் டுவிட்டர் பக்கத்துக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.








